தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 10 : Social Transformation in Tamil Nadu
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.
• தமிழ் மக்களுக்கு தங்களது பாரம்பரியம் குறித்து வியப்பைத் தந்தது.
• நவீன தமிழர்கள் தங்களது சமூகப் பண்பாட்டு அடையாளங்களை பண்டைய தமிழ்
செவ்விலக்கியங்கள் வாயிலாக அறிய முடிந்தது.
• ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய மொழிகளில் முதல் மொழி தமிழ்
மொழியாகும்.
• பழம்பெரும் நூல்கள் வெளியிடப்பட்டது தமிழ் மக்களிடையே தங்கள் வரலாறு, மரபு, மொழி, இலக்கியம் குறித்து அறிய முடிந்தது.
2. தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பினை
நன்குப் புலப்படுத்துக.
• இராபர்ட் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம் எனத்
தலைப்பிடப்பட்ட நூலில் இந்தோ - ஆரியன் மொழி
குடும்ப கோட்பாட்டை விரிவுபடுத்தினார்.
• திராவிட மொழிகளிடம் ஒப்புமை இருந்ததையும் அது மாதிரி சமஸ்கிருதத்தில்
இல்லை எனக் கூறினார்.
• தமிழின் தொன்மையை நிலை நாட்டினார்.
3. தங்களுடைய எழுத்துகளின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப்
பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.
• சி.வை. தாமோதரனார்
• மறைமலையடிகள்
• பி. சுந்தரனார்
• பாரதிதாசன்
• உ.வே. சாமிநாதர்
• சீகன் பால்கு
• பரிதிமாற் கலைஞர்
• இராபர்ட் கால்டுவெல்
• திரு.வி. கலியாண சுந்தரனார்
4. நீதிக்கட்சியால் நிறைவேறப்பட்ட இந்து சமய அறநிலைய சட்டத்தின்
முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.
• நீதிக்கட்சி 1926ல் இந்து சமய
அறநிலையச் சட்டத்தை இயற்றியது.
• எந்தவொரு தனி நபரும், சாதி
வேறுபாடின்றி கோயில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகலாம்.
• கோவிலின் சொத்துகளை நிர்வகிக்க வழி வகை செய்யப்பட்டது.
5. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின்
பெயர்களைக் குறிப்பிடுக.
• தமிழில் - திராவிடன்
• ஆங்கிலத்தில் - ஜஸ்டிஸ்
• தெலுங்கில் - ஆந்திர பிரகாசிகா
6. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
• பெரியார் ஆணாதிக்க சமூகத்தை எதிர்த்தார்.
• குழந்தை திருமணத்தையும், தேவதாசி
முறையையும் எதிர்த்தார்.
• பெண்களின் மோசமான நிலைக்கு குரல் கொடுத்து வந்தார்.
• திருமணம் செய்து கொடுப்பது எனும் வார்த்தையை மறுத்த அவர் அதற்கு மாற்றாக
திருக்குறளில் இருந்து வாழ்க்கைத்துணை என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டினார்.
• பெண்கள் விவாகரத்து பெறவும், சொத்தில்
பங்கு பெறவும் உரிமை உண்டு என்றார்.
• பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய நூல் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்பதாகும்.