தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase
VI. விரிவாக விடையளிக்கவும்.
1. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய
காரணிகள் என்ன என்று ஆராயவும்.
• தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் சமூக உரிமைகளுக்காக
20 ஆண்டுகள் போராடியது இந்திய விடுதலை போராட்டத்தில் புதிய எழுச்சியை
ஏற்படுத்தியது.
• ஆங்கிலேய ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க வன்முறை அல்லாத
வழிகளைப் பின்பற்றியது.
• படிக்கும் காலங்களில் இலண்டனில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள்.
• தென்னாப்பிரிக்க இனவேறுபாடு கொண்ட டர்பன் ரயில் சம்பவங்கள்.
• டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின் படைப்புகள்
காந்தியடிகளை மாற்றியது.
• உண்மையின் வடிவமாக சத்தியாக்கிரக வழியில் போராடியது.
• இந்திய மக்களை சந்தித்து பயணம் மேற்கொண்ட போது தமிழக
பயணம் அவரை வேட்டி மற்றும் சிறிய துண்டுவிற்கு மாற்றியது.
• பீகாரில் உள்ள சம்பரானில் ‘தீன்
காதியா’ முறையை அகற்ற போராடி பண்ணை விவசாயிகளுக்கு வெற்றியைத்
தேடித் தந்தது.
• ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு
இயக்கம், வரிகொடா இயக்கம் என பல்வேறு இயக்கங்களை நடத்தி போராட்டத்தை
தீவிரப்படுத்தியது.
• குஜராத் தண்டி உப்பு சத்தியாகிரக பாத யாத்திரை.
• தீண்டாமை - வகுப்புவாரி முறையை
ஒழிக்க பாடுபட்ட நிகழ்ச்சிகள்.
• மதுப்பழக்கத்தை கைவிட போராட்டம் நடத்தியது.
• வெள்ளையனே வெளியேறு இயக்கம் மூலம் மாபெரும் மக்கள்
தலைவராக தன்னை நிலை நிறுத்தினார்.
• இது போன்ற காரணிகள் காந்தியடிகளை ‘இந்தியாவின் தேசத்தந்தை'
என்ற நிலைக்கு கொண்டு வந்தது.
2. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு
இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.
• இந்தியாவிற்கு தன்னாட்சி பகுதி வழங்குவதில் திருப்தி
அடையாத காங்கிரஸ் கட்சி 1930 ஜனவரி 26 ஆம்
நாள் சுதந்திரநாளாக அடைவது என அறிவிக்கப்பட்டது.
• இதன்படி வரிகொடா இயக்கம், சட்டமறுப்பு
இயக்கம் மூலமாகவும் வன்முறையற்ற முறையில் சுதந்திரம் அடைவது என குறித்து உறுதிமொழி
ஏற்கப்பட்டது.
• இந்த வரிகொடா இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு
அங்கீகாரம் அளித்தது.
• பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை காந்தியடிகள் அரசப் பிரதிநிதியிடம்
அளித்தார்.
• பதில் அளிக்காத நிலையில் காந்தியடிகள் சட்ட மறுப்பு
இயக்கத்தை தீவிரப்படுத்தினார்.
• உப்பு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை
ஒரு அறிவுப்பூர்வமான முடிவாகும்.
• காந்தியடிகள் 1930 மார்ச் மாதம்
12 ஆம் நாள் 78 பேர்களுடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து
தனது புகழ்பெற்ற தண்டியாத்திரையைத் தொடங்கினார்.
• காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
• இந்த சட்ட மறுப்பு இயக்கம் மூலமாக நடந்த குஜராத் தண்டி
யாத்திரை காந்தியடிகளை இந்திய அளவில் வெகுவாக உயர்த்தியது.
3. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.
• 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபுவின் வங்கப் பிரிவினை இந்தியப்
பிரிவினைக்கு முதல் காரணியாக அமைந்தது.
• முதல் உலகப் போருக்குப் பின் துருக்கி இசுலாமிய மதத்
தலைவருக்கு ஆதரவாக இந்தியாவில் தனியே கிலாபத் இயக்கம் ஆரம்பித்து போராடியது.
• மத்திய சட்டப் பேரவையில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு
வேண்டும் என முஸ்லிம் லீக் கோரியது.
• இந்து - முஸ்லிம் ஒற்றுமையின்
தூதராக கருதப்பட்ட முகமது அலி ஜின்னா தனது நிலைப்பாட்டை மாற்றி முஸ்லிம்களுக்கு தனி
நாடு வலியுறுத்தியது.
• 1932 இல் வெளி வந்த ராம்சே மெக் டொனால்டு வகுப்பு வாத
அறிக்கை.
• இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய ஜின்னா
1934 இல் முஸ்லிம் லீக்கிற்கு புத்துயிர் ஊட்டி 1940களில் தனிநாடு கோரிக்கையை தீவிரப்படுத்தியது.
• இந்து மகா சபையும் முஸ்லிம் லீக்கும் நாட்டின் ஒற்றுமை
தவிர்த்து ஒன்றுக்கொன்று எதிரான நடவடிக்கையில் இறங்கியது.
• இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி
வந்த முகம்மது இக்பால் தனிநாடு கோரிக்கையை பிரச்சாரம் செய்தது.
• 1946 தேர்தல்களில் முஸ்லிம் லீக் தனது தனித் தொகுதியில்
வெற்றி பெற்று தனது கோரிக்கைக்கு வலு சேர்த்தது.
• 1946 ஆம் ஆண்டு, ஆகஸ்டு
16 ஆம் நாளை நேரடி நடவடிக்கை நாளாக ஜின்னா அறிவித்தது.
• 1947 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள்
பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றி இந்தியாவை, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடாக பிரித்து விடுதலை
அறிவித்தது.
• இதுபோன்ற காரணிகளே இந்தியாவின் பிரிவினைக்கு பின்னால்
இருந்த காரணிகளாகும்.
VII. செயல்பாடுகள்
1. ஒரு வரைபடத்தில் காந்திய இயக்கத்துடன் தொடர்புடைய முக்கிய
இடங்களைக் குறிப்பிடுமாறும் அங்கு நடந்தது என்று ஓரிரு வாக்கியங்கள் எழுதுமாறும் மாணவர்களைக்
கேட்டுக் கொள்ளலாம்.
ஆசிரியர் - மாணவர் செயல்பாடு
2. மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு காந்தியடிகள்,
ஜின்னா, B.R. அம்பேத்கர். புரட்சிகர தேசியவாத தலைவர்கள், பொதுவுடைமைவாத தலைவர்கள்
ஆகியோரின் கருத்துகள் பற்றி விவாதம் நடத்துமாறு கேட்டுக்கொள்ளலாம்.
ஆசிரியர் - மாணவர் செயல்பாடு