தேசியம்: காந்திய காலகட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 8 : Nationalism: Gandhian Phase
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
• பஞ்சாப் அமிர்தரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில்
1919 ஏப்ரல் 13 ஆம் நாள் சீக்கியர்களின் அறுவடைத்
திருநாள் பைசாகி அன்று பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் குழுமியிருந்தனர்.
• இதனை அறிந்த ஜெனரல் டயர் ஆயுதமேந்திய வீரர்கள் மற்றும்
பீரங்கியுடன் சுற்றி கண்மூடித்தனமாக சுட்டுப் படுகொலை செய்தார்.
• துப்பாக்கிச் சூட்டில் 379 பேர்
உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
2. கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.
• முதல் உலகப்போரின் முடிவில் துருக்கியின் காலிப் கடுமையாக
நடத்தப்பட்டார். .
• துருக்கி மற்றும் காலிப்பிற்கு ஆதரவுக்கரம் நீட்டும்
பொருட்டு 1919 நவம்பர் மாதம் தில்லியில் கிலாபத் இயக்கம் நடைபெற்றது.
• துருக்கிக்கு ஆதரவாக பெரும் போராட்டம் முகமது அலி மற்றும்
மௌலானா சௌகத் அலி சகோதரர்கள் தலைமையில் இந்த இயக்கம் நடைபெற்றது.
3. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப் பெற்றார்?
• காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தின் விளைவாக
வரி கொடா இயக்கம் தீவிரமாக நடந்தது.
• இந்த நாடு தழுவிய போராட்டத்தில் வன்முறை பெரிதும் நிகழ்ந்தது.
• உத்திரப்பிரதேச சௌரி-சௌராவில்
ஆங்கில காவல் நிலையம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
• சௌரி - சௌரா சம்பவத்தைத் தொடர்ந்து
காந்தியடிகள் இந்த இயக்கத்தைத் திரும்ப பெற்றார்.
4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
• சர் ஜான் சைமன் என்பவரால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில்
ஏழு உறுப்பினர்கள் இருந்தனர்.
• இந்தியர் எவரும் இக்குழுவில் இடம் பெறாமல் வெள்ளையர்
மட்டுமே இருந்தனர்.
• இதனால் ஆத்திரமடைந்த இந்தியர்கள் ‘சைமனே திரும்பப் போ' என்ற கோஷத்துடன் எதிர்ப்பு தெரிவித்தனர்.
5. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
• டொமினியன் எனப்படும் தன்னாட்சியில் திருப்தி அடையாத
காங்கிரஸார் சிலர் முழுமையான சுதந்திரம் வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.
• 1929 டிசம்பர் மாதம் லாகூரில்
ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது.
• இதில் முழுமையான சுயராஜ்ஜியம் என்ற சுதந்திரம் இலக்காக
அறிவிக்கப்பட்டது.
6. பகத்சிங் பற்றி குறிப்பு வரைக.
• பொதுவுடைமை கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பஞ்சாப் பகத்சிங்
இந்துஸ்தான் ராணுவ குடியரசை அமைத்தார்.
• 1929 மத்திய சட்டப்பேரவையில்
வெடிகுண்டு மற்றும் துண்டுப் பிரசுரங்களை வீசி 'இன்குலாப் ஜிந்தாபாத்'
என்ற முழக்கத்தை எழுப்பினார்.
• இதில் பகத்சிங் மற்றும் ராஜகுருவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
• பகத்சிங்கின் துணிச்சல் இந்திய இளைஞர்களைக் கவர்ந்து,
பிரபலம் அடைந்தார்.
7. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?
• தனித்தொகுதிகள் பற்றிய கொள்கைகள் கைவிடப்பட்டன.
• ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒத்துக்
கொள்ளப்பட்டது.
• ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள் 71 இல் இருந்து 148 ஆக அதிகரிக்கப்பட்டது.
• மத்திய சட்டப்பேரவையில் 18 சதவிகித
இடங்கள் ஒதுக்கப்பட்டன.