முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும் | வரலாறு - பின்வருவனவற்றிற்கு விரிவாக பதிலளிக்கவும் | 10th Social Science : History : Chapter 1 : Outbreak of World War I and Its Aftermath
VI. விரிவாக விடையளிக்கவும்.
1. முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி.
ஐரோப்பிய நாடுகளின் அணிச் சேர்க்கைகளும் எதிர் அணிச்
சேர்க்கைகளும்:
• 1900இல் ஐரோப்பிய வல்லரசுகளில்
ஐந்து அரசுகள் இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
• ஒரு முகாம் மைய நாடுகளான ஜெர்மனி ஆஸ்திரிய - ஹங்கேரி, இத்தாலி
ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
• இரண்டாவது முகாம் நேசநாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக்
கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.
வன்முறை சார்ந்த தேசியம்:
• தேசப்பற்றின் வளர்ச்சியோடு “எனது
நாடு சரியோ தவறோ நான் அதை ஆதரிப்பேன்” என்ற மனப்பாங்கும் வளர்ந்தது.
• இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று, பிரான்சின் அதிதீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறி கொண்ட நாட்டுப்பற்று ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக
மாறியது.
ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனைப்பாங்கு:
• ஜெர்மன் பேரரசர் ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
• ஜெர்மனியின் கப்பற்படை விரிவுபடுத்தப்பட்டது.
• இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கவே இரு நாடுகளுக்குமிடையிலான
பதற்றம் மேலும் அதிகரித்தது.
பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை:
• பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர். 1871 இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்டு அல்சேஸ்,
லொரைன் பகுதிகளை பிரான்ஸ் ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது.
• ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின்
சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின்
எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டார்.
பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல் அதிகாரத்திற்கான
வாய்ப்பு :
• 1908 ஆம் ஆண்டில் துருக்கியில்
ஒரு வலுவான நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம் துருக்கியர் புரட்சி நடைபெற்றது.
இது ஆஸ்திரியாவுக்கும், ரஷ்யாவிற்கும் பால்கன்
பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
• ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும் போது அதன் விளைவாக செர்பியாவிற்கு
ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.
பால்கன் போர்கள்:
• பால்கன் நாடுகள் 1912இல் துருக்கியைத் தாக்கி தோற்க்கடித்தது.
• 1913 இல் இலண்டன் உடன்படிக்கையின்படி
அல்பேனியா நாடு உருவாக்கப்பட்டது.
• மாசிடோனியாவை பிரித்துக் கொள்வதில் பல்கேரியா, செர்பியாவையும், கிரீஸ்சையும்
தாக்கியது.
• இரண்டாம் பால்கன் போரில் பல்கேரியா எளிதில் தோற்கடிக்கப்பட்டு புகாரேஸ்ட்
உடன்படிக்கை உடன் முடிவடைந்தது.
உடனடிக் காரணம்:
• 1914 ஜூன் 28
ஆம் நாள் ஆஸ்திரிய பேரரசின் இளவரசர் பிரான்ஸ் பெர்டினாண்டு செர்பியனால்
படுகொலை செய்யப்பட்டார்.
• ஆஸ்திரியா இதனை செர்பியாவை கைப்பற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதியது.
• செர்பியாவிற்கு ஆதரவாக ரஷ்யா படைகளைத் திரட்டுகிறது என்ற வதந்தியால்
ஜெர்மனி ரஷ்யா மீது போர் தொடுத்தது.
2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டுக் காட்டுக.
• போரைத் தொடங்கிய குற்றத்தைச் செய்தது ஜெர்மனி என்பதால் போரால் ஏற்பட்ட
இழப்புகளுக்கு ஜெர்மனி இழப்பீடு வழங்க வேண்டும்.
• ஜெர்மன் படை 1,00,000 வீரர்களை
மட்டுமே கொண்டதாக அளவில் சுருக்கப்பட்டது. சிறிய கப்பற்படை ஒன்றையும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.
• ஆஸ்திரியா, ஜெர்மனி ஆகிய
இரண்டின் ஒருங்கிணைப்பு தடை செய்யப்பட்டது.
• ரஷ்யாவுடன் செய்து கொள்ளப்பட்ட பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கையையும் பல்கேரியவுடன் மேற்கொள்ளப்பட்ட
புகாரெஸ்ட் உடன்படிக்கையையும் திரும்பப் பெற்றுக் கொள்ள ஜெர்மனி வற்புறுத்தப்பட்டது.
• அல்சேஸ் - லொரைன் பகுதிகள் பிரான்சுக்குத்
திருப்பித் தரப்பட்டன.
• பின்லாந்து, எஸ்தோனியா,
லாட்வியா லிதுவேனியா ஆகியன சுதந்திர நாடுகளாகச் செயல்படும்.
• போலந்து மீண்டும் உருவாக்கப்பட்டது.
• ரைன்லாந்து நேச நாடுகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும்.
3. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
• முதல் உலகப்போரில் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட தோல்வி ரஷ்ய பொருளாதாரத்தை
பெருமளவில் பாதித்தது.
• இதனால் கோபமுற்ற ரஷ்ய மக்கள் மன்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
• 1917 மார்ச் திங்கள்
15 ஆம் நாள் சார் இரண்டாம் நிக்கோலஸ் பதவி விலகினார்.
தற்காலிக அரசு:
• அரசு நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள இரண்டு அமைப்புகள் இருந்தன.
• ஒன்று பழைய டூமா சோவியத்.
• சோவியத் அமைப்பின் ஒப்புதலோடு டூமாவால் ஓர் தற்காலிக அரசு நிறுவ முடிந்தது.
தற்காலிக அரசின் தோல்வி:
• புரட்சி வெடித்த போது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். புரட்சி தொடர்ந்து நடைபெற வேண்டுமென அவர் விரும்பினார்.
• "அனைத்து அதிகாரங்களும்
சோவியத்திற்கே” என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும்
வென்றெடுத்தது.
• போரினால் ஏற்பட்ட பெரும் துயரத்தால் மக்கள் “ரொட்டி, அமைதி, நிலம்” என்னும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
• தற்காலிக அரசு எடுத்த தவறான முடிவுகளால் போல்ஷ்விக்குகள் தலைமையில்
நடைபெற்ற எழுச்சி மேலும் வலுபெற்றது.
• அரசு ‘பிரவ்தா’வை தடை செய்து போல்ஷ்விக்குகளைக் கைது செய்தது. டிராட்ஸ்கியும்
கைது செய்யப்பட்டார்.
லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றல் :
• அக்டோபர் திங்களில் உடனடிப் புரட்சிக் குறித்து முடிவு செய்ய லெனின்
கேட்டுக் கொண்டார். டிராட்ஸ்கி ஒரு விரிவான
திட்டத்தைத் தயாரித்தார்.
• நவம்பர் திங்கள் 7ஆம்
நாள் முக்கியமான அரசுக் கட்டிடங்கள் குளிர்கால அரண்மனை, பிரதம
மந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை உட்பட அனைத்தும் ஆயுதம் ஏந்திய ஆலைத் தொழிலாளர்களாலும்
புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன. 1917 ஆம் ஆண்டு நவம்பர்
திங்கள் 8 ஆம் நாள் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப்
பொறுப்பேற்றது. போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி
என புதுப் பெயரிடப் பெற்றது.
4. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:
• பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக் கடற்கரைக்கும்
இடையில் அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும்
சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. சர்வதேச
சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது என தீர்ப்பளித்தது.
• போலந்திற்கும் ஜெர்மனியக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப்
பிரச்சனை ஏற்பட்ட போது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
• எல்லைப் பிரச்சனையின் காரணமாக கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த
போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்திரவிட்டது.
• விசாரணைக்குப்பின் சங்கம் கிரீஸின் மீது குற்றம்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீர்மானித்தது.
• 1925 ஆம் ஆண்டு லொக்கார்னோ
உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை சர்வதேச சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
• லொக்கார்னோ உடன்படிக்கையின் படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம்,
இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில்
பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
• ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர இடமளிக்கப்பட்டது.
VII. செயல்பாடுகள்.
1. முதல் உலகப்போரில் ஈடுபட்ட நாடுகளின் தலைநகரங்களையும் போர்க்களங்களையும் வரைபடத்தில் குறிப்பதற்கு
மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
பார்க்க: வரைபடப் பயிற்சி புத்தகம்
- பக்கம் எண்: 68
VIII. வரைபடப் பணி.
உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட்
பிரிட்டன்,
2.
ஜெர்மனி,
3.
பிரான்ஸ்,
4.
இத்தாலி,
5.
மொராக்கோ ,
6.
துருக்கி,
7.
செர்பியா,
8.
பாஸ்னியா,
9.
கிரீஸ்,
10.
ஆஸ்திரிய-ஹங்கேரி,
11.
பல்கேரியா,
12.
ருமேனியா