Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | புத்தக வினாக்கள் விடைகள்

ஒலியியல் | அறிவியல் - புத்தக வினாக்கள் விடைகள் | 10th Science : Chapter 5 : Acoustics

   Posted On :  29.07.2022 06:04 pm

10வது அறிவியல் : அலகு 5 : ஒலியியல்

புத்தக வினாக்கள் விடைகள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க. II. கோடிட்ட இடங்களை நிரப்புக. III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக. IV. பொருத்துக: V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன பின்வருனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க. VI. குறு வினாக்கள் : VII. சிறுவினா விடையளி: VIII. கணக்கீடுகள் : IX. நெடு வினாக்கள்: X. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)

ஒலியியல் (அறிவியல்)

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

அ) அலையின் திசையில் அதிர்வுறும்

ஆ) அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை

இ) அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

ஈ) அதிர்வுறுவதில்லை

 

2. வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்

அ) 330 மீவி-1

ஆ) 660 மீவி-1

இ) 156 மீவி-1

ஈ) 990 மீவி-1

 

3. மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

அ) 50 kHz

ஆ) 20 kHz

இ) 15000 kHz

ஈ) 10000 kHz

 

4. காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீ.வி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.

அ) 330 மீ.வி-1

ஆ) 165 மீ.வி-1

இ) 330 × 2 மீ.வி-1

ஈ) 320 × 2 மீ.வி-1

 

5. 1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலைநீளம்?

அ) 27.52 மீ

ஆ) 275.2 மீ

இ) 0.02752 மீ

ஈ) 2.752 மீ

 

6. ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்?

அ) வேகம்

ஆ) அதிர்வெண்

இ) அலைநீளம்

ஈ) எதுவுமில்லை

 

7. ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீ.வி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

அ) 17 மீ

ஆ) 20 மீ

இ) 25 மீ

ஈ) 50 மீ

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது அதிர்வுகள் ஆகும்.

2. ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அதிர்வடைகிறது.

3. 450 Hz அதிர்வெண் உடைய ஊதல் ஒலியானது 33மீவி-1 வேகத்தில் ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது. கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் 500 Hz (ஒலியின் திசைவேகம் = 330 மீவி-1)

4. ஒரு ஒலி மூலமானது 40கிமீ / மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கி.மீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் 2067 Hz

 

III. சரியா? தவறா? தவறு எனில் கூற்றினை திருத்துக.

 

1. ஒலியானது திட, திரவ வாயு மற்றும் வெற்றிடத்தில் பரவும்.

விடை: தவறு

ஒலியானது திட திரவ மற்றும் வாயுக்களில் பரவும். ஆனால் வெற்றிடத்தில் பரவாது.

 

2. நில அதிர்வின் போது உருவாகும் அலைகள் குற்றொலி அலைகள் ஆகும்.

விடை: சரி

 

3. ஒலியின் திசைவேகம் வெப்பநிலையைச் சார்ந்தது அல்ல

விடை: தவறு

ஒலியின் திசைவேம் வெப்பநிலையைச் சார்ந்தது.

 

4. ஒலியின் திசைவேகம் திரவங்களைவிட வாயுக்களில் அதிகம்.

விடை: தவறு

ஒலியின் திசைவேகம் திரவங்களை விட வாயுக்களில் குறைவு.

 

IV. பொருத்துக:

 

1. குற்றொலி - அ) இறுக்கங்கள்            

2. எதிரொலி - ஆ) 22 kHz              

3. மீயொலி - இ) 10 kHz                

4. அழுத்தம் மிகுந்த பகுதி - ஈ) அல்ட்ராசோனோகிராபி

விடை:

1. குற்றொலி - 10 kHz

2. எதிரொலி - அல்ட்ராசோனோகிராபி

3. மீயொலி - 22 kHz

4. அழுத்தம் மிகுந்த பகுதி - இறுக்கங்கள்

 

V. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன பின்வருனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

 

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி, மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியல்ல.

ஈ) கூற்று தவறானது, ஆனால், காரணம் சரியானது.

 

1. கூற்று (A): காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.

காரணம் (R): ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.

விடை: கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 

2. கூற்று (A) : ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.

காரணம் (R) : திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.

விடை: இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியல்ல.

 

VI. குறு வினாக்கள் :

 

1. நெட்டலை என்றால் என்ன?

ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை நெட்டலை எனலாம்.

 

2. செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?

இவை 20 Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகள் ஆகும்.

 

3. எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?

எதிரொலி கேட்க வேண்டும் எனில், ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் 17.2 மீ தொலைவு இருக்க வேண்டும்.

 

4. அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?

அலைநீளம் λ = 0.20 மீ

ஒலியின் வேகம் v = 331 மீவி-1

அதிர்வெண் n = ?

v = v λ

n = v/ λ = 3.31 / 0.20 = 1655 Hz.

 

5. மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.

நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்றவற்றால் மீயொலியை உணர முடியும்.

 

 

VII. சிறுவினா விடையளி:

 

1. ஒலியானது கோடை காலங்களை விட மழைக்காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?

காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே, மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.

 

2. இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 46°C ஐ அடைய இயலும். அந்த வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (Vo = 331 மீவி-1)

வெப்பநிலை = 46°C

ஒலியின் திசைவேகம் = 331 மீவி-1

46°C ல் ஒலியின் திசைவேகம் = ?

VT = Vo + 0.61 T மீ.வி-1

= 331 + 0.6 × 46 = 358.6 மீ.வி-1.

 

3. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?

ஒலியை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்க வேண்டியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வளைவான எதிரொலிக்கும் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கூடங்களில் பிரதிபலிக்கும் ஒலியானது, சுவரில் எங்கு மோதினாலும், ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப்புள்ளியில் குவிக்கப்படுகிறது. இதனால் இதனுள் அமர்ந்து ஒருவர் மெல்லிய குரலில் பேசினாலும் மீண்டும் மீண்டும் எதிரொலித்து வரும் ஒலியினால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவியையும் அடையும்.

 

4. டாப்ளர் விளைவு நடைபெற முடியாத இரண்டு சூழல்களைக் கூறுக.

ஒலி மூலம் மற்றும் கேட்குநர் இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும் போதும்

ஒலி மூலம் மற்றும் கேட்குநர் சம இடைவெளியில் நகரும் போதும் டாப்ளர் விளைவு நடைபெறுவதில்லை.

 

VIII. கணக்கீடுகள் :

 

1. ஒரு ஊடகத்தில் 200 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 400 மீவி-1 வேகத்தில் பரவுகிறது ஒலி அலையின் அலைநீளம் காண்க.

விடை:

ஒலியின் அதிர்வெண் n = 200 Hz

ஒலியின் வேகம் v = 400 மீவி-1

ஒலியின் அலைநீளம் λ = ?

                         v = n λ

                      λ = v / n = 400 / 200 = 2 மீ.

ஒலியின் அலைநீளம் = 2 மீ.

 

2. வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப் பின்பு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின் திசைவேகம் 300 மீ.வி-1 எனில் மேகக்கூட்டங்கள் எவ்வளவு உயரத்தில் உள்ளது?

விடை:

ஒலியின் திசைவேகம் v = 330 மீ/ வி

கால அளவு t = 9.8 வி

மேகக்கூட்டங்களின் உயரம் h = v × t

= 330 × 9.8

= 3234 m

= 3.234 km

 

3. ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி மூலத்திலிருந்து 400 மீ தொலைவில் அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரத்தைக் காண்க.

விடை:

ஒளியின் அதிர்வெண் n = 600 Hz.

அலைநீளம் T = ?

T = 1 / n = 1 / 600 = 0.0016 S.

 (அ) 1.6 மி.வி.

 

4. ஒரு கப்பலிலிருந்து கடலின் ஆழத்தை நோக்கி மீயொலிக் கதிர்கள் செலுத்தப்படுகிறது. கடலின் ஆழத்தை அடைத்து எதிரொலித்து 1.6 விநாடிகளுக்குப் பிறகு ஏற்பியை அடைகிறது எனில் கடலின் ஆழம் என்ன? (கடல் நீரில் ஒலியின் திசைவேகம் 1400 மீ.வி-1)

விடை:

மீயொலிக் கதிர்கள் எடுத்துக் கொண்ட கால அளவு = 1.6 வி

கடல்நீரில் ஒலியின் திசைவேகம் = 1400 மீ.வி-1

                               v = d × t;

                               d = vt / 2 = 1400 × 1.6 / 2

                                 = 1120 மீ.

 

5. ஒருவர் 680 மீ இடைவெளியில் அமைந்துள்ள இரண்டு செங்குத்தானச் சுவர்களுக்கு இடையே நிற்கிறார். அவர் தனது கைகளைத் தட்டும் ஓசையானது எதிரொளித்து முறையே 0.9 விநாடி மற்றும் 1.1 விநாடி இடைவெளியில் கேட்கிறது காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன?

விடை:

t = 1.1 + 0.9 வி

  = 2 வி.

d = Ct / 2 C = 2d / t = 2 × 340 / 2

  = 340 மீ.வி-1.

 

6. இரண்டு கேட்குநரால் 4.5 கி.மீ இடைவெளியில் இரண்டு படகுகளை நிறுத்தியுள்ளனர். ஒரு படகிலிருந்து நீரின் மூலம் செலுத்தப்படும் ஒலியானது 3 விநாடிகளுக்குப் பிறகு மற்றொரு படகை அடைகிறது. நீரில் ஒலியின் திசைவேகம் என்ன?

விடை:

படகுகளின் தொலைவு = 4.5 km

                      = 4500 m

ஒலி எடுத்துக் கொள்ளும் கால அளவு = 3வி

ஒலியின் திசைவேகம் = தொலைவு / கால அளவு  = 4500 / 3

= 1500 மீ.வி-1.

 

7. கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டும் ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக் கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம் என்ன?

விடை:

மீயொலி எடுத்துக் கொள்ளும் கால அளவு = 1 வி

நீரின் ஒலியின் வேகம் = 1450 மீவி-1

கடலின் ஆழம் = வேகம் × காலம் / 2

= 1450 × 1 / 2

= 725 மீ.

 

IX. நெடு வினாக்கள்:

 

1. வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?

விடை:

அடர்த்தியின் விளைவு:

* வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் தகவில் அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.

 √(1 / d )

வெப்பநிலையின் விளைவு:

* வாயுக்களில் ஒலியின் திசைவேகம், அதன் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர் தகவில் அமையும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது. ∝ √T வெப்பநிலை ToC ல் திசைவேகமானது.

vT = (v0 + 0.61 T) ms-1

* இங்கு vo என்பது 0°C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு Vo = 331 மீவி-1 எனவே ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீவி-1 அதிகரிக்கிறது.

ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு:

* காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.

 

2. ஒலி எதிரொலித்தல் என்றால் என்ன? விவரி.

அ) அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு

ஆ) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு

இ) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு

விடை:

* ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு பரவும் போது, இரண்டாவது ஊடகத்தால் எதிரொலிக்கப்பட்டு முதலாம் ஊடகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் நிகழ்வே ஒலி எதிரொலித்தல் எனப்படும்.

அ) அடர்குறை ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு:

* ஒலி நெட்டலையானது ஊடகத்தில் பரவும் போது இறுக்கங்களாகவும், தளர்ச்சியாகவும் பரவும். ஒலி அலையின் இறுக்கங்கள் இடமிருந்து வலமாக பரவி ஒரு சுவரில் மோதிக் கொள்வதாக கருதிக் கொள்வோம். அவ்வாறு மோதிக் கொள்ளும் போது இறுக்கங்கள் சுவரினை நோக்கி F என்ற ஒரு விசையை செயல்படுத்தும். அதே வேளையில் சுவரானது அதற்கு சமமான மற்றும் எதிர்த்திசையில் R = -F என்ற விசையை திரும்பச் செலுத்தும். இதனால் சுவற்றின் அருகில் மீண்டும் இறுக்கங்கள் ஏற்படும். இவ்வாறு இறுக்கங்கள் சுவரில் மோதி மீண்டும் இறுக்கங்களாகவே எதிரொலிக்கிறது. அதன் திசை மட்டும் மாறியிருக்கும்,

ஆ) அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் எதிரொலிப்பு:

* திடப்பொருளில் பயணிக்கும் ஒலி அலைகள் இறுக்கங்கள் காற்று ஊடகத்தின் விளிம்பை அடைவதாகக் கொள்வோம். அப்போது இறுக்கங்களானது, காற்று ஊடகத்தின் பரப்பில் F என்ற விசையைச் செலுத்தும். அடர்குறை ஊடகம் (காற்று) குறைந்த அளவு உருக்குலைக்கும் பண்பை பெற்றுள்ளதால் இரண்டடையும் பிரிக்கும் மேற்பரப்பு பின்னோக்கித் தள்ளப்படுகிறது. இதனால் அடர்குறை ஊடகத்தில் துகள்கள் மிக எளிதாக இயங்குவதால் விளிம்புப்பகுதியில் தளர்ச்சிகள் தோன்றுகின்றன. இடமிருந்து வலமாக பயணித்த இறுக்கங்கள் எதிரொலிக்கப்பட்ட பின் தளர்ச்சிகளாக மாறி வலது புறத்திலிருந்து இடது புறமாகப் பரவுகிறது.

இ) வளைவானப் பரப்புகளில் ஒலி எதிரொலிப்பு:

வளைவானப் பரப்புகளில் பட்டு மோதி எதிரொலிக்கும் போது அதன் செறிவு மாறுகிறது. குவிந்தபகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் விரிவடைந்து செல்கிறது. அதன்செறிவும் குறைகிறது. அதேபோல குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது. எனவே எதிரொலித்தக் கதிர்களின் செறிவும் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது

 

3. அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?

ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள் யாவை?

இ) மீயொலி அதிர்வுகளை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக.

விடை :

அ) மீயொலி அதிர்வுறுதல்

* 20,000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் மீயொலி அதிர்வுறுதல் எனப்படும். இவற்றை மனிதர்களால் கேட்க முடியாது.

ஆ) மீயொலி அதிர்வுறுதலின் பயன்கள்

* வௌவால் இரவிலும் மீயொலியை ஏற்படுத்தி தன் பாதையை சரியாக அறிகிறது.

* மியொலியை பயன்படுத்தும் கருவிகள், வெகு ஆழத்தில் மறைந்திருக்கும் பொருட்களின் தொலைவினை அறிய உதவுகிறது.

* அல்ட்ராசோனோகிராபி போன்ற கருவிகள் மகப்பேறு மருத்துவத்துறையில் பெருமளவில் பயன்படுகிறது.

* கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்ற உயிரினங்களால் மீயொலியின் அதிர்வுகளை உணர முடியும்.

 

4. எதிரொலி என்றால் என்ன?

அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.

ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக.

இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க?

விடை:

* எதிரொலி என்பது ஒலியானது, பிரதிபலித்து மீண்டும் மீண்டும் கேட்கப்படுவது ஆகும்.

அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகள்:

* எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையே 0.1 விநாடி கால இடைவெளி இருக்க வேண்டும்.

* எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு 17.2 மீ.

ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்கள்:

* எதிரொலி தத்துவம் மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனோகிராபி கருவியில் பயன்படுகிறது. இதைப்பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.

இ) எதிரொலி முறையில் ஒலியின் திசைவேகத்தைக் காணுதல்.

தேவையான கருவிகள்

ஒலி மூலம், அளவு நாடா, ஒலி ஏற்பி மற்றும் நிறுத்துக் கடிகாரம்

செய்முறை

* ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையேயானத் தொலைவை (d) அளவு நாடாவைப் பயன்படுத்தி அளந்து கொள்ளவும்.

* ஒலி ஏற்பியை ஒலி மூலத்திற்கு அருகில் வைக்கவும். தற்போது ஒலி சமிக்ஞைகள் ஒலி மூலத்திலிருந்து வெளிப்படும்.

* நிறுத்துக் கடிகாரத்தைப் பயன்படுத்தி ஒலி மூலத்திலிருந்து வெளிப்பட்ட ஒலி சமிக்ஞைகளுக்கும், எதிரொலித்து வந்த ஒலி சமிக்ஞைகளுக்கும் இடையேயான கால இடைவெளியைக் குறித்துக் கொள்ளவும், கால இடைவெளியை 't' எனவே ஒலியின் திசைவேகமானது

* இந்த சோதனையை மூன்று அல்லது நான்கு முறைசெய்து பார்க்கவும். சராசரி கால இடைவெளியைக் கணக்கிடவும்.

ஒலியின் திசைவேகம் கணக்கிடல்

* ஒலி மூலத்திலிருந்து வெளியான ஒலித்துடிப்பு ஒலி மூலத்திலிருந்து சுவர் வரை சென்று பின்னர் எதிரொலித்து ஒலி மூலம் வரையுள்ள 2d தொலைவை t நேரத்தில் கடந்து செல்கிறது. எனவே

ஒலியின் திசைவேகம் (v) = கடந்த தொலைவு / எடுத்துக்கொண்ட நேரம் = 2d / t .

 

X. உயர் சிந்தனைக்கான வினாக்கள் : (HOTS)

 

1. எஃகில் ஒலியின் திசைவேகம் மிக அதிகமாக இருக்க காரணம் என்ன?

விடை:

* எஃகின் மீட்சிப் பண்பு மிக அதிகம். ஆகவே, ஒலியின் திசைவேகமும் அதிகமாக இருக்கும்.

 

2. 12 மீ தொலைவில் உள்ள மலையிலிருந்து தான் எழுப்பிய ஒலிக்கான எதிரொலியை ஒருவன் கேட்க முடியுமா?

விடை:

* முடியாது எதிரொலிக்கான குறைந்தபட்ச தொலைவு 17மீ ஆகும்.



 

Tags : Acoustics | Science ஒலியியல் | அறிவியல்.
10th Science : Chapter 5 : Acoustics : Book Back Questions with Answers Acoustics | Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : அலகு 5 : ஒலியியல் : புத்தக வினாக்கள் விடைகள் - ஒலியியல் | அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : அலகு 5 : ஒலியியல்