கருத்துசார் நிலவரைபடம் - நிழற்பட்டை முறை | 12th Geography : Chapter 11 : Thematic Mapping
நிழற்பட்டை முறை
ஒரு குறிப்பிட்ட பொருளின் பரவல் அல்லது அடர்த்தியை காட்டுவதற்கு நிழற்பட்டை நிலவரைபடத்தில் நிறப்பட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இடம்சார் பரவல் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலான நிர்வாக பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் தான் நிர்வாக பிரிவுகளுக்கேற்ற நிறங்கள் காட்டப்படுகின்றன. உதாரணமாக, அதிக அடர்த்தி அடர்ந்த நிறத்திலும் குறைந்த அடர்த்தி மெல்லிய வண்ணத்திலும் காட்டப்படுகிறது.
அரசியல் எல்லையுடன் கூடிய பகுதியில் ஒரு சதுர நிலப் பரப்பில் காணப்படும் மக்கள் அடர்த்தியைக் காட்ட இது பயன்படுகிறது. இவ்வகை நிலவரைபடங்கள் ஒரு சதுர கிலோ மீட்டரில் காணப்படும் மக்கள் தொகை அல்லது ஒரு ஹெக்டேருக்கான பயிர் உற்பத்தியைக் காட்டுகிறன்றன. இந்நிலைவரைபடங்கள் மக்களடர்த்தி, கல்வியறிவு, மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், பாலின விகிதம் போன்றவற்றைக் காட்டப் பயன்படுன்றன.
உதாரணமாக, மொத்த பயிரிடப்பட்ட நிலப்பரப்பில் கோதுமை சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பின் சதவிகிதம்.
1. நிலவரைபடம் வரைய வேண்டிய புவியியல் கூறுகள் மற்றும் நிகழ்வுகளைக் கண்டறியவும்.
2. நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படும் நிறப்பட்டையின் எண் மதிப்பை சரிபார்க்கவும். இதை நிலவரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை படிப்பதன் மூலம் சரிபார்க்கலாம்.
3. நிலவரைபடத்தில் காட்டப்பட்டுள்ள நிர்வாக பகுதிகளின் அளவையைக் கண்டறியவும்.
4. கொடுக்கப்பட்டுள்ள குறிப்பைப் பயன்படுத்தி நிலவரைபடத்தில் குறிக்கப்பட வேண்டிய கூறுகளின் ஒரே அளவைக்கான ஒத்த நிறப்பட்டையை காட்டும் பகுதிகளைக் கண்டறியவும்.
5. நிலவரைபடத்தில் காணப்படும் பல்வேறு கூறுகளின் அடர்த்தியை விளக்கவும்.
அ. பல்வேறு நிர்வாகப் பகுதிகளைக் காட்டும் நிலவரைபடம்.
ஆ.நிர்வாகப் பகுதிகளைப் பற்றிய சரியான புள்ளிவிவரங்கள்.
அ. புள்ளிவிவரங்களை ஏறுவரிசையில் அல்லது இறங்கு வரிசையில் எழுதவும்.
ஆ. மிக அதிக, அதிக, இடைப்பட்ட, குறைந்த மற்றும் மிகக் குறைந்த அடர்த்தியைக் காட்ட பெறப்பட்ட புள்ளிவிவரங்களை ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தவும்.
இ. இப்பிரிவுகளின் இடைவெளியை அடையாளம் காண பின்வரும் சூத்திரத்தை பயன்படுத்தவும். வீச்சு / 5 (வீச்சு = அதிக பட்ச மதிப்பு - குறைந்தபட்ச மதிப்பு
ஈ. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளை சித்தரிக்கப் பயன்படுத்தப்படும் நிழற்பட்டை அல்லது நிறங்கள் ஏறு வரிசை அல்லது இறங்கு வரிசையில் குறிக்கப்படவேண்டும்.
அட்டவணை 11. 2ல் கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதத்திற்கான நிழற்பட்டை நிலவரைபடத்தை உருவாக்கவும்.
1) தரவுகளை அட்டவணை 11.3 கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று இறங்கு வரிசையில் எழுதவும்.
2) கொடுக்கப்பட்டுள்ள தரவுகளின் வீச்சை அடையாளம் காணவும். இந்த தரவுகளின் அடிப்படையில் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச எழுத்தறிவு சதவிகிதத்தைக் கொண்டுள்ள மாவட்டங்கள் முறையே கன்னியாகுமரி ( 91.75%) மற்றும் தர்மபுரி ( 68.54%) ஆகும். எனவே, வீச்சு : 91.75 - 68.54 = 23.21% ஆகும்.
3) தரவுகளை மிகக் குறைந்த மதிப்பிலிருந்து மிக அதிக மதிப்பு வரை ஐந்து பிரிவுகளாக பிரித்துகொள்ளவும்.
4) பிரிவுகளின் எண்ணிக்கையை ஒவ்வொரு பிரிவிற்கு ஏற்றவாறு வரையறை செய்யவும். இறுதியாக பின்வரும் வகைகளைப் பெறலாம்.
5) ஒவ்வொரு பிரிவிலும் உள்ள குறைந்த பட்ச மதிப்பிலிருந்து அதிக பட்ச மதிப்பிற்கு எற்ப வண்ணங்கள் அல்லது நிழற்பட்டையை வேண்டும்