எதிரொலிகள்
ஒலி அலைகள் சுவர்கள், மேற்கூரைகள்,
மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கப்படும் நிகழ்வே
எதிரொலி ஆகும்.
நீங்கள் மலையின் அருகிலோ அல்லது ஒரு
கட்டிடத்தின் அருகிலோ நின்று கைகளைத் தட்டும் போது உங்களால் அதே ஒலியை மீண்டும்
கேட்க இயலும். இவ்வாறு உங்களால் மீண்டும் கேட்கக் கூடிய ஒலியே எதிரொலி ஆகும்.
சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க இயலாது. சிறிய அறைகளில் எதிரொலியைக் கேட்க
இயலாது என்பதால் அங்கு எதிரொலிப்பு நடைபெறவில்லை என்பது பொருளல்ல. ஏனெனில் சிறிய
அறைகள் எதிரொலிக்கு வேண்டிய அடிப்படை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில்லை.
1. எதிரொலிக்கு
வேண்டிய நிபந்தனைகள்
மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது, நமது காதுகளில் 0.1 விநாடிகளுக்கு நிலைத்திருக்கும். எனவே நாம் இரண்டு ஒலிகளைக் கேட்க
வேண்டுமானால் இரண்டு ஒலிகளுக்கும் இடையே கால இடைவெளி குறைந்தபட்சம் 0.1 விநாடிகள் இருக்க வேண்டும். எனவே எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையே 0.1 விநாடிகள் இருக்க வேண்டும்.
மேற்காணும் நிபந்தனையானது
பூர்த்தியாக வேண்டுமெனில் ஒலி மூலத்திற்கும் எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே
உள்ள தொலைவானது கீழ்க்காணும் சமன்பாட்டை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆதலால் எதிரொலி கேட்க வேண்டுமானால்
குறைந்த பட்சத் தொலைவானது காற்றில் ஒலியின் திசைவேகத்தின் மதிப்பில் 1/20 பகுதியாக இருக்க
வேண்டும். ஒலியின் திசைவேகம் காற்றில் 344 மீவி-1 எனக் கருதினால் எதிரொலிக் கேட்பதற்கான
குறைந்த பட்சத் தொலைவு 17.2 மீ ஆகும்.
· சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும் போது தங்களுக்குள்
தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக்
கண்டறியவும் பயன்படுகிறது.
· எதிரொலித் தத்துவம் மகப்பேறியல்
துறையில் அல்ட்ரா சோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின்
கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி
மிகப் பாதுகாப்பானது ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும்
பயன்படுத்தப்படுவதில்லை.
· ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக்
கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
3. எதிரொலி முறையில்
ஒலியின் திசைவேகத்தைக் காணுதல்
தேவையான கருவிகள்
ஒலி மூலம், அளவு நாடா, ஒலி ஏற்பி மற்றும் நிறுத்துக் கடிகாரம்
செய்முறை
1. ஒலி மூலத்திற்கும்,
எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையேயானத் தொலைவை (d) அளவு நாடாவைப் பயன்படுத்தி அளந்து கொள்ளவும்.
2. ஒலி ஏற்பியை ஒலி மூலத்திற்கு
அருகில் வைக்கவும். தற்போது ஒலி சமிக்ஞைகள் ஒலி மூலத்திலிருந்து வெளிப்படும்.
3. நிறுத்துக் கடிகாரத்தைப்
பயன்படுத்தி ஒலி மூலத்திலிருந்து வெளிப்பட்ட ஒலி சமிக்ஞைகளுக்கும், எதிரொலித்து வந்த ஒலி சமிக்ஞைகளுக்கும் இடையேயான கால இடைவெளியைக்
குறித்துக் கொள்ளவும். கால இடைவெளியை ‘t’ எனவே ஒலியின் திசைவேகமானது
4. இந்த சோதனையை மூன்று அல்லது நான்கு முறை செய்து பார்க்கவும். சராசரி கால இடைவெளியைக் கணக்கிடவும்.
ஒலியின் திசைவேகம்
கணக்கிடல்
ஒலி மூலத்திலிருந்து வெளியான
ஒலித்துடிப்பு ஒலி மூலத்திலிருந்து சுவர் வரை சென்று பின்னர் எதிரொலித்து ஒலி
மூலம் வரையுள்ள 2d தொலைவை t நேரத்தில் கடந்து செல்கிறது. எனவே
ஒலியின் திசைவேகம் (v) = கடந்த தொலைவு
/ எடுத்துக் கொண்ட நேரம் = 2d / t