உற்பத்தி, இயற்பியல் மற்றும் வேதிப் பண்புகள், பயன்கள் - எத்தனால் CH3CH2OH | 10th Science : Chapter 11 : Carbon and its Compounds
எத்தனால் (CH3CH2OH)
எத்தனால் பொதுவாக ஆல்கஹால் என்று
குறிப்பிடப்படுகிறது. அனைத்து விதமான ஆல்கஹால் பானங்களிலும் சில இருமல்
மருந்துகளிலும் எத்தனால் உள்ளது. அதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு C2H5OH. அதனுடைய
கட்டமைப்பு வாய்ப்பாடு
1. எத்தனால்
தயாரிக்கும் முறை
தொழிற்சாலைகளில் கரும்புச் சாறின்
கழிவுப் பாகிலிருந்து நொதித்தல் முறையில் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.
கழிவுப்பாகு என்பது செறிவு மிகுந்த கரும்புச் சர்க்கரை கரைசலிலிருந்து சர்க்கரையை
படிகமாக்கும் பொழுது மீதமுள்ள ஆழ்ந்த நிறமுள்ள கூழ் போன்ற திரவமாகும். இதில் 30% சுக்ரோஸ்
உள்ளது. இதை படிகமாக்கல் முறையில் பிரித்தெடுக்க இயலாது. கீழ்க்காணும் படிகள்
மூலமாக கழிவுப்பாகு எத்தனாலாக மாற்றப்படுகிறது.
1. கழிவுப்பாகினை நீர்த்தல்
கழிவுப்பாகிலுள்ள சர்க்கரையின்
செறிவு 8 லிருந்து 10 சதவீதமாக நீரினால் நீர்க்கப்படுகிறது.
2. அம்மோனியம் உப்புகள் சேர்த்தல்
நொதித்தலின் போது ஈஸ்ட்டிற்க்குத்
தேவையான நைட்ரஜன் கலந்த உணவினைக் கழிவுப்பாகு கொண்டுள்ளது. நைட்ரஜன் அளவு குறைவாக
இருப்பின், அம்மோனியம் சல்பேட் அல்லது அம்மோனியம் பாஸ்பேட் சேர்ப்பதன் மூலம் உர
மூட்டப்படுகிறது.
3. ஈஸ்ட்சேர்த்தல்
படி 2 இல் கிடைக்கும்
கரைசல் பெரிய நொதித்தல் தொட்டிகளில் சேகரிக்கப்படுகிறது. பின்னர் ஈஸ்ட்
சேர்க்கப்படுகிறது. கலவை 303K வெப்பநிலையில் சில நாட்களுக்கு
வைக்கப்படுகிறது. அந்த நாட்களில் ஈஸ்ட்டிலுள்ள இன்வர்டேஸ், மற்றும்
சைமேஸ் ஆகிய நொதிகள் சர்க்கரையை எத்தனாலாக மாற்றுகின்றன.
நொதித்த நீர்மம் கழுவு நீர்மம் என
அழைக்கப்படுகிறது.
4. கழுவு நீர்மத்தைக் காய்ச்சி வடித்தல்
15 முதல் 18 சதவீதம் ஆல்கஹாலும் மீதிப்பகுதி நீராகவும் உள்ள நொதித்த நீர்மமானது
பின்னக் காய்ச்சி வடித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. முக்கியப் பின்னப்பகுதியாகக்
கிடைத்த எத்தனாலின் நீர்க்க ரைசல் 95.5% எத்தனாலையும் 4.5% நீரையும் பெற்றுள்ளது. இது எரிசாரயம் என அழைக்கப்படுகிறது. இக்கலவை
சுமார் 5 லிருந்து 6 மணி நேரம் சுட்ட
சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சி வடிக்கப்பட்டு 12 மணி நேரம்
வைக்கப்படுகிறது. இக்கலவை மீண்டும் காய்ச்சி வடிக்கப்படும் போது தூய ஆல்கஹால் (100%)
கிடைக்கிறது. இந்தத் தூய ஆல்கஹால் தனி ஆல்கஹால் எனப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
ஈஸ்ட்
என்பது பூஞ்சை வகுப்பைச் சார்ந்த ஒரு செல் நுண்ணுயிரி ஆகும். பெரிய சிக்கலான கரிம வினைகளில்
பூஞ்சைகளில் உள்ள நொதியானது வினை வேக மாற்றியாக செயல்படுகிறது. நொதிகளின் மூலமாக
சிக்கலான கரிமச் சேர்மங்களில் மெதுவாக வேதிவினை நிகழ்ந்து எளிய மூலக்கூறுகள்
உருவாவதே நொதித்தல் எனப்படும். எடுத்துக்காட்டு : பால் தயிராக மாறுதல்
2. இயற்பியல்
பண்புகள்
* எத்தனால் இனிய மணமுடைய நிறமற்ற, எரி சுவை கொண்ட
ஒரு நீர்மம். இது எளிதில் ஆவியாகக் கூடியது.
* இதன் கொதிநிலை 78°C (351K). இது,
அதன் ஒத்த அல்கேன்களைக் காட்டிலும் அதிகம் ஈத்தேனின் கொதிநிலை 184K
* இது நீருடன் எல்லா விகிதத்திலும்
முழுவதுமாகக் கலக்கிறது.
3. வேதிப் பண்புகள்
(i) நீர்நீக்கம்
எத்தனாலை அதிக அளவு அடர் H2SO4 உடன் 443K க்கு வெப்பப்படுத்தும் போது மூலக்கூறினுள் நீர் நீக்கம் ஏற்பட்டு
ஈத்தீனைத் தருகிறது.
(ii) சோடியத்துடன்
வினை
எத்தனால் சோடியத்துடன்
வினைபுரிந்து சோடியம் ஈத்தாக்ஸைடையும், ஹைட்ரஜன் வாயுவையும் தருகிறது.
2C2H5OH + 2Na → 2C2H5ONa
+ H2 ↑ சோடியம் ஈத்தாக்ஸைடு
(ii) ஆக்ஸிஜனேற்றம்
எத்தனாலைக் காரங்கலந்த KMnO4 அல்லது அமிலங்கலந்த K2Cr2O7 கொண்டு
ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது எத்தனாயிக் அமிலம் உருவாகிறது.
இந்த வினையின் போது ஆரஞ்சு
நிறமுடைய K2Cr2O7
பச்சையாக
மாறுகிறது. எனவே,
இது ஆல்கஹால்களைக் கண்டறியும் சோதனைக்கு பயன்படுகிறது.
(iv) எஸ்டராக்குதல்
ஆல்கஹால் கார்பாக்சிலிக்
அமிலத்துடன் வினை புரிந்து பழச்சாற்றின் மணமுடைய சேர்மத்தைத் தருகிறது. இச்சேர்மம்
எஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. எத்தனால், எத்தனாயிக் அமிலத்துடன் அடர் H2SO4
முன்னிலையில் எத்தில் எத்தனோயேட் என்ற எஸ்டரைத் தருகிறது. ஆல்கஹால்,
கார்பாக்ஸிலிக் அமிலத்துடன் வினைபுரிந்து உருவான சேர்மம் எஸ்டர்
(பழச்சாறின் மணம் கொண்டது) எனப்படுகிறது. இந்த வினையை எஸ்டராக்குதல் என
அழைக்கிறோம்.
(v) ஹைட்ரஜன்
நீக்கம்
எத்தனாலின் ஆவியை
வெப்பப்படுத்தப்பட்ட காப்பர் வினையூக்கியின் முன்னிலையில் (573K) செலுத்தும்
போது ஹைட்ரஜன் நீக்கமடைந்து அசிட்டால்டிஹைடைத் தருகிறது.
(vi) எரிதல்
எத்தனால் எளிதில் எரியக்கூடிய
திரவம். ஆக்சிஜனுடன் எரிந்து கார்பன் டை ஆக்சைடையும் நீரையும் தருகிறது.
4. பயன்கள்
எத்தனால்,
� மருத்துவமனைகளில் காயங்களைத் துடைத்து எடுக்கும்
புரைத் தடுப்பானாக பயன்படுகிறது.
� வாகனங்களிலுள்ள
குளிர்விப்பானில் தண்ணீர் உறைவதைத் தடுப்பதில் பயன்படுகிறது.
� பூஞ்சைகள்
மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளை அழிக்க கைகளைத் தூய்மையாக்கும் கிருமி
நாசினிகளில் (hand
sanitizer) பயன்படுத்தப்படுகிறது.
� காயங்களில்
கிருமி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
� மருந்துகள், எண்ணெய்கள்,
கொழுப்புப் பொருள்கள், வாசனைப் பொருள்கள்,
சாயங்கள் போன்றவற்றைக் கரைக்கும் கரைப்பானாக பயன்படுகிறது.
� மெத்தில்
ஆல்கஹால் கலந்த சாராயம் (95% எத்தனால் மற்றும் 5% மெத்தனால்), பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த கலவை (ஆற்றல் ஆல்கஹால்), இயல்புத் தன்மை இழந்த ஆல்கஹால் (எத்தனால் மற்றும் பிரிடின் கலந்தவை) இவை
தயாரிப்பதில் பயன்படுகிறது.
� உணவுப்
பொருட்களின் சுவையை கூட்டுவதற்கு பயன்படுகிறது. உதாரணமாக வெண்ணிலாச் சாறு (vennilla essence). இது ஓர் பொதுவான உணவு சுவையூட்டி. இவை ஆல்கஹால், நீர்
கலந்த கரைசலில் வெண்ணிலா விதைகள் வினைக்குட்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது.