உயிரின் தோற்றமும் பரிணாமமும் - வட்டார இனத் தாவரவியல் | 10th Science : Chapter 19 : Origin and Evolution of Life
வட்டார
இனத் தாவரவியல்
வட்டார இனத் தாவரவியல் என்பது ஒரு
குறிப்பிட்ட பகுதியில் உள்ள தாவரங்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வழி வழியாக
எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றி அறிவதாகும். வட்டார இன தாவரவியல் என்னும்
சொல்லை முதன் முதலில் J.W.
ஹார்ஸ்பெர்கர் அறிமுகப்படுத்தினார். பழங்காலத்திலிருந்து
அப்பகுதியில் உள்ள மக்கள் தாவரங்களை என்னென்ன வழிகளில் பயன்படுத்தினர் என்பதைப்
பற்றி அறிவதாகும். அக்காலத்திலேயே இதைப்பற்றிய கருத்து மக்களிடையே இருந்தபோதிலும் 20 ஆம்
நூற்றாண்டில்தான் வட்டார இனத் தாவரவியல் இயற்கை அறிவியலின் ஒரு பகுதியாகத்
தோன்றியது.
வட்டார இனத் தாவரவியலானது
உணவூட்டப் பிரச்சினை,
சுகாதாரம், உடல் இயக்க அமைவு, தாவரங்கள் மேல் உள்ள நம்பிக்கை, குடிசைத் தொழில்,
பொருளாதார முன்னேற்றம், பன்மயப் பாதுகாப்பு,
தொடர் பயன் வேளாண்மை, போன்ற துறைகளுக்கு
முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
·
பரம்பரை பரம்பரையாகத் தாவரங்களின் பயன்களை அறிய முடிகிறது.
·
நமக்குத்
தெரிந்த மற்றும் தெரியாத தாவரங்களின் பயன்களைப் பற்றிய தகவலை அளிக்கிறது.
·
வட்டார
இனத் தாவரவியலானது மருந்தாளுநர், வேதியியல் வல்லுநர், மூலிகை
மருத்துவப் பயிற்சியாளர் முதலானோருக்குப் பயன்படும் தகவல்களை அளிக்கிறது.
·
மலைவாழ்
பழங்குடி மக்கள் மருத்துவ இன அறிவியல் மூலம் பலவகையான நோய்களைக் குணப்படுத்தும்
மருந்துத் தாவரங்களை அறிந்து வைத்துள்ளனர். எ.கா.: வயிற்றுப் போக்கு, காய்ச்சல், தலைவலி, சர்க்கரை
நோய், மஞ்சள் காமாலை, பாம்பு கடி
மற்றும் தொழு நோய் முதலான நோய்களுக்கு தாவரங்களின் பட்டை, தண்டு,
வேர், இலை, பூமொட்டு,
பூ, கனி, விதை, எண்ணெய் மற்றும் பிசின் முதலானவற்றைப் பயன்படுத்திக் குணமாக்கினர்.