அன்றாட வாழ்வில் அறிவியல் | முதல் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 1 Unit 4 : Science in Everyday Life

   Posted On :  28.05.2022 01:25 am

3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல்

வினா விடை

3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா? தவறா?, ஓரிரு வாக்கியங்களில் விடையளி, பொருத்துக, ஓரிரு வாக்கியங்களில் விடையளி , வரையறு, சிந்தித்து விடையளி, மாணவர்கள் செயல்பாடு, செயல் திட்டம்
அன்றாட வாழ்வில் அறிவியல் (3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 4)


மதிப்பீடு

I. பின்வரும் சொற்றொடரில் எது சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக. 

1. நீரைக் கொதிக்க வைக்கும் போது பாக்டீரியாக்கள் நீக்கப்படுகிறது. 

விடை : சரி 

2. இட்லி நீராவி மூலம் சமைக்கப்படுகிறது.

விடை : சரி 

3. வெப்பமானி அழுத்தத்தை அளக்க உதவுகிறது.

விடை : தவறு 

4. பொருள்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க குளிர்சாதனப் பெட்டி பயன்படுகிறது.

விடை : சரி 

5. பூண்டு குமட்டல், விக்கலை சரிசெய்யப் பயன்படுகிறது. 

விடை : தவறு 

6. நீரின் கொதிநிலை 100° செல்சியஸ் ஆகும்.

விடை : சரி 



II. இட்லி உருவாக்கத் தேவையான பொருள்களை வட்டமிடுக. 

அரிசி  வேர்க்கடலை  மிளாகய்  உளுந்து   துவரம்பருப்பு

நீர்      உப்பு         மிளகு    சர்க்கரை   வெந்தயம் 



III. வீட்டு உபயோகப் பொருள்களை அதன் பயன்களுடன் பொருத்துக.




IV. எது வீட்டில் செய்யும் பாதுகாப்பான செயலுக்கு () குறியிடுக. 

1. மின்சாதனப் பொருள்களைத் தொடுதல்.     [ X ]

2. கூர்மையான பொருள்களுடன் விளையாடுதல்.     [ X ]

3. சமையலறையில் விளையாடுதல்.     [ X ]

4. எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயுக் கலன் ஆகியவற்றை பாதுகாப்பான இடைவெளியில் வைத்திருத்தல்.     []



V. ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தில் விடையளி: 

1. நீரின் கொதிநிலை என்ன?  

• நீரின் கொதிநிலை 100° C. 


2. பழங்கள் மற்றும் காய்கறிகள் எப்படி அதிக நாட்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறது?  

• பழங்கள் மற்றும் காய்கறிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாப்பதன் மூலம் அதிக நாட்களுக்கு சேமித்து வைக்கப்படுகிறது. 


3. வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன?

• வெப்பநிலையை அளக்க உதவும் கருவி வெப்பநிலைமானி. 


4. இட்லி எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?

• இட்லி நீராவியில் வேக வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.


5. கருப்பு மிளகின் பயன் என்ன?

• கருப்பு மிளகு சளி மற்றும் இருமலுக்கு மிகச்சிறந்த நிவாரணி ஆகும். 


6. சமையலறையில் உள்ள எந்த பொருள் ஏழைகளின் நோய் எதிர்ப்புப் பொருள் என அழைக்கப்படுகிறது?

பூண்டு ஏழைகளின் நோய் எதிர்ப்புப் பொருள் என அழைக்கப்படுகிறது. 



VI. பின்வரும் வினாக்களுக்கு விடையளி: 

1. அழுத்த சமையற்கலனின் நன்மைகளை எழுதுக.

• உணவு தயாரிக்கும் நேரத்தைக் குறைக்கிறது. 

• எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து ஆற்றலை சேமிக்கிறது. 

• பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை உணவில் தக்க வைக்கிறது.

• உணவின் தோற்றம் மற்றும் சுவையினை பாதுகாக்கிறது. 


2. நீரைக் கொதிக்க வைத்தலின் பயன்களை எழுதுக.

• கிருமிகளை நீக்குகிறது. 

• செரிமானத்தை அதிகரிக்கிறது. 

• நீரின் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.



சிந்திப்போமா!

நீங்கள் நோயுற்று இருக்கும்போது மருத்துவர் இட்லி அல்லது இடியாப்பம் எடுத்துக்கொள்ளச் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? அது ஏனென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? 

இட்லி நீராவியில் வேகவைக்கப்படுவதால் அது எளிதில் செரிமானமாவதே காரணமாகும்.



உங்கள் சமையலறையில் உள்ள பொருள்களுக்கு () குறியிடுக.


நீராவி முறையில் சமைக்கப்படும் உணவுப்பொருள்களுக்கு () குறியிடுக.


படங்களை சரியான வரிசையில் அமைக்கவும்.



கலந்துரையாடுவோமா?

1. பயறுகளை வேகவைக்க எது மிகக் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும்?

அ. அழுத்த சமையற்கலன் 

ஆ. மண்பாண்டம் 

விடை : அழுத்த சமையற்கலன் 


2. அழுத்த சமையற்கலனை பயன்படுத்தி சமைக்கும் உணவுப்பொருள்களை உன் நண்பர்களுடன் கலந்துரையாடி பட்டியலிடுக. 

பயறு வகைகள், சாதம், இட்லி, பிரியாணி.



'அ' வரிசையை “ஆ' வரிசையுடன் பொருத்துக.



பொருள்களுக்கு வண்ணம் தீட்டி எண்ணி எழுதுக.


உனக்குப் பிடித்தமான உணவு எது? அதில் என்னென்ன கலந்து இருக்கும்? அதற்கு மருத்துவ குணம் ஏதேனும் உண்டா ? அவற்றை அட்டவணையில் எழுதுக

பிடித்தமான உணவு : நெல்லிக்காய் சாறு 

அடங்கியுள்ள பொருள்கள் 

நெல்லிக்காய் 

இஞ்சி 

வெல்லம்

மருத்துவ குணம் 

வைட்டமின் சி உள்ளது 

செரிமானத்தை ஊக்குவிக்கிறது.



நிஜம் மற்றும் நிழல்

நோக்கம்:

நிழல் உருவாகும் விதத்தை கற்றுக்கொள்ளுதல். 

செயல்முறை: 

1. வகுப்பறையை இருட்டாக்கவும். 

2. மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொள்ளவும். 

3. மெழுகுவர்த்திக்கு சற்று தொலைவில் பொம்மை ஒன்றை வைக்கவும். என்ன காண்கிறாய்? 

4. பொம்மையை மெழுகுவர்த்திக்கு இன்னும் சற்று தூரத்தில் நகர்த்தவும். என்ன காண்கிறாய்? பொம்மையை மெழுகுவர்த்திக்கு அருகில் நகர்த்தவும். தற்போது என்ன காண்கிறாய்? 

5. மங்கலான ஒளியில் இதே சோதனையை செய்யும் போது என்ன காண்கிறாய்? 


நிரப்புக. 

• பொம்மையை மெழுகுவர்த்திக்கு மிக அருகில் கொண்டு செல்லும் போது அதன் நிழல் குட்டையாக இருக்கும். 

• பொம்மையை மெழுகுவர்த்திக்கு தொலைவில் கொண்டு செல்லும் போது அதன் நிழல் நீளமாக இருக்கும். 

• பிரகாசமான ஒளியில் நிழல் தெளிவாக இருக்கும். 

• மங்கலான ஒளியில் நிழல் மங்கலாக இருக்கும்.


குவளையில் பின்வருவனவற்றை சேர்க்கும்போது என்ன நடக்கிறது? 

நீரில் எண்ணெய்  சேர்க்கும்போது  - எண்ணெய்  நீரில் மிதக்கும்.

உணவு வண்ணம் சேர்க்கும்போது - வண்ணமாக மாறும்.

உப்பை சேர்க்கும்போது - வண்ண எண்ணெய்  குமிழ்கள் மேலும் கீழும் நகரும்.

முதலில் எண்ணெய் நீரில் மிதக்கும். ஏனென்றால் நீரை விட எண்ணெய்க்கு அடர்த்தி குறைவு. இருப்பினும் உப்பு எண்ணெயை விட கனமானது. எனவே நீரில் மூழ்கும். அவ்வாறு மூழ்கும்போது உடன் சிறிதளவு எண்ணெயை எடுத்துக்கொள்ளும். ஆனால் நீரில் உப்பு கரைந்தவுடன் மீண்டும் எண்ணெய் மேலே வரும். 

இந்த சோதனை ஆர்வமூட்டும்படியாக இருந்ததா? ஆம்.


Tags : Science in Everyday Life | Term 1 Chapter 4 | 3rd Science அன்றாட வாழ்வில் அறிவியல் | முதல் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 1 Unit 4 : Science in Everyday Life : Questions with Answers Science in Everyday Life | Term 1 Chapter 4 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல் : வினா விடை - அன்றாட வாழ்வில் அறிவியல் | முதல் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 4 : அன்றாட வாழ்வில் அறிவியல்