இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 14 : Outbreak of World War II and its Impact in Colonies
பாடச் சுருக்கம்
• வெர்செய்ல்ஸ் அமைதி ஒப்பந்தத்தின் நீதியற்ற
தன்மை, பன்னாட்டு சங்கத்தின் தோல்வி, 1930களில் தோன்றிய பொருளாதாரப் பெருமந்தம், பாசிச
சக்திகளான இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்றவைகளின் விரிவாக்கக் கொள்கை இரண்டாம் உலகப்போரை
விளைவித்தல் உள்ளிட்ட அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளது.
• பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் நடத்திய தாக்குதல்,
ஸ்டாலின்கிராட் போரும், ட்ரெஸ்டன் குண்டுவீச்சும், ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு
வீசப்படுதல் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
• அச்சு நாடுகள் மற்றும் அவர்தம் கூட்டு நாடுகளோடு
ஏற்படுத்தப்பட்ட அமைதித் தீர்வுகள், ஐக்கிய நாட்டு சபையின் உருவாக்கம் மற்றும் போரின்
மொத்த விளைவுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
• சீன வேளாண்குடிகளின் துயரங்கள் மற்றும் மஞ்சுக்கள்
கடைபிடித்த திறந்தவெளிக் கொள்கை அந்நாட்டை அயல்நாட்டு சக்திகளான பிரிட்டன், பிரான்ஸ்
போன்றவை அவரவர் செல்வாக்கிற்கு உட்பட்ட கோளங்களாகப் பிரிக்க வழியேற்படுத்தியமை விளக்கப்பட்டுள்ளது.
• கிறித்தவ சமயத்தின் பரவல் பற்றியும், சீன
நிர்வாகத்தில் வெளிநாட்டாரின் குறுக்கீடு குறித்தும், சீனப் பகுதிகளை ஜப்பானியர் ஆக்கிரமித்தவுடன்
அங்கே ஊற்றெடுத்துப் பரவிய தேசியவுணர்வு புரட்சிக்கு வழிநடத்தி சென்றமை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
• சன் யாட்- சென்னும், மா சே துங்கும் சீன
மக்களை மஞ்சு வம்சத்திற்கு எதிராக திரட்டி மக்களின் ஆட்சியை நிறுவியதில் ஆற்றியப் பங்கு
விவரிக்கப்பட்டுள்ளது.
• மாவோவின் நீண்ட பயணமும், அதைத் தொடர்ந்த
நிகழ்வுகளும் சீனாவில் பொதுவுடைமை அரசு ஏற்பட வழிவகுத்தமை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
• இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின்
விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுவடுகள் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.
• மூன்று வருடங்களுக்கு மேலாக ஜப்பானின் ஆக்கிரமிரப்பிற்கு
உட்பட்ட இப்பகுதிகளில் தேசிய இயக்கம் பிறந்து இந்தோனேஷியாவிலும், பிலிப்பைன்சிலும்
காலனிய ஆட்சி தூக்கி வீசப்பட்டமை எடுத்தியம்பப்பட்டுள்ளது.