உயிரினங்களின்
தோற்றம் பற்றிய கோட்பாடுகள்
உயிரினங்களின் தோற்றம் பற்றி
விளக்குவதற்காகப் பல்வேறு கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. உயிரினங்களின்
தோற்றம் பற்றிய கருத்துக்கள் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன.
இக்கருத்தின்படி பூமியிலுள்ள
உயிரினங்கள் யாவும் ஒரு தெய்வீக படைப்பு. மேலும் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட
நேரத்தில் நடந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வின் காரணமாகவும்
உயிரினங்கள் தோன்றி இருக்கலாம். உயிரினங்கள் தோன்றியதிலிருந்து இதுவரை அவற்றில்
எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்ற கருத்தை இது வலியுறுத்துகிறது.
இக்கோட்பாட்டின்படி உயிரற்ற
பொருட்களிலிருந்து தன்னிச்சையாக உயிர் தோன்றியது. மீன்கள் சேற்றில் இருந்தும், தவளைகள் ஈரமான
மண்ணில் இருந்தும், பூச்சிகள் அழுகும் பொருட்களில் இருந்தும்
தோன்றியதாக நம்பப்பட்டது.
லூயிஸ்
பாஸ்டர்
(1862) அவர்களின்
ஊகப்படி முன்பிருந்த உயிரியில் இருந்துதான் உயிர் தோன்றியது. கிருமி
நீக்கம் செய்யப்பட்ட, காற்றுப் புகாத குடுவையில் இறந்த
ஈஸ்ட்களில் இருந்து உயிர் உருவாகவில்லை. ஆனால் காற்று உட்புகும் மற்றொரு
குடுவையில், இறந்த ஈஸ்ட்களில் இருந்து புதிய உயிரினங்கள்
தோன்றுகின்றன என்பதை நிரூபித்தார்.
புவிக்கு அப்பால் விண்வெளியில்
இருந்து உயிர் தோன்றியதாக இன்றும் சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இதன்படி, உயிரின் அலகான
ஸ்போர்கள் (பான்ஸ்பெர்மியா) புவி உள்ளிட்ட பல்வேறு கோள்களுக்கு இடமாற்றம்
செய்யப்பட்டது. சில வானியல் அறிஞர்கள் இன்றும் இக்கருத்தைக் கொண்டுள்ளனர்.
இக்கருத்தை ஓபாரின் (1922) மற்றும்
ஹால்டேன் (1929)
ஆகியோர் வெளியிட்டனர். இதன்படி, புவியில்
நிலவும் சூழலுக்கு ஏற்ப, தொடர்ச்சியான வேதி வினைகள்
மூலமாக உயிர் தோன்றியது என்ற கருத்தை முன்மொழிந்தனர். முதலில் தோன்றிய உயிர்
ஏற்கெனவே இருந்த உயிரற்ற கனிம மூலக்கூறுகளில் இருந்து உருவாகி இருக்கலாம்.
இக் கனிம மூலக்கூறுகள் பல்வேறு கரிம மூலக்கூறுகள் உருவாக வழி வகுத்தன.
இக்கரிம மூலக்கூறுகள் கூழ்மத் தொகுதிகளாக மாற்றம் அடைந்து உயிர்களை உருவாக்கின.
உயிரினத்தின் தோற்றம் பற்றிய வேதிப் பரிணாமத்தின் நவீன கருத்துக்கள் அனைவராலும்
ஏற்றுக் கொள்ளப்பட்டன