Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

பொருளாதார உயிரியல் | உயிரியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Biology : Economic Biology

   Posted On :  18.09.2023 09:23 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.

. அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்

விடை:

அயல்நாட்டு இனம்:

1. இவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை

2. அதிகமான பால்சுரப்புக் காலத்தைக் கொண்டிருக்கும்

3. .கா:- ஜெர்ஸி, ப்ரௌன்ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன்

பாரம்பரிய இனம்:

1. இவை இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது

2. பால் உற்பத்தியானது பால் சுரக்கும்  காலத்தைப் பொறுத்தே அமையும்.,

3. சாகிவால், சிவப்பு சிந்தி, கிர்

 

. மகரந்தம் மற்றும் தேன் ரசம்

விடை:

மகரந்தம்:

1. மகரந்தப் பையில் உருவாகும் ஆண் கேமிட்டோஃபைட்கள்

தேன் ரசம் :

1. இனிப்பான, பாகு நிலை கொண்ட, தாவர மலர்களால்  சுரக்கப்படும் இயற்கையான தாவர உணவுப் பொருள். டெக்ஸ்ட்ரோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்றவை தேனுக்கு இனிப்பு சுவையைத் தருகிறது.

 

. இறால் மற்றும் நன்னீர் இறால்

விடை:

இறால்:

1. பெனெய்டு இறால்கள் கூனி இறால்கள் என அழைக்கப்படுகிறது

2. இவை கடலில் வாழ்பவை

3. முதிர்ச்சியடைந்த கூனி இறால்கள்  ஆழ்கடலுக்குச் சென்று இனப்பெருக்கம் செய்கின்றன.

நன்னீர் இறால்:

1. பினெய்டு அல்லாத இறால்கள், இறால்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

2. ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழ்பவை

3. இனப்பெருக்கத்திற்காக உவர் நீர், நிலைகளுக்கு வருகிறது.

 

. தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு

விடை:

தொழு உரம்:

1. கால்நடைகளின் சாணம், சிறுநீர் மற்றும் மாட்டுக் கொட்டைகளில் தரைமேல் இருக்கும் கழிவுகள் மற்றும் பண்ணைக் கழிவுகள் ஆகியவற்றின் கலவை

2. இதில் 0.5% நைட்ரஜன், 0.2% பாஸ்பேட் 2 மற்றும் 0.5% பொட்டாசியம் சத்து உள்ளது

வெள்ளாட்டு எரு :

1. செம்மறி ஆடு மற்றும் வெள்ளாட்டுச் சாண எரு கலவை

2. இதில் 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ், பென்டாக்ஸைடு, 2% பொட்டாசியம் ஆக்சைடு உள்ளது.

 

VI. சுருக்கமாக விடையளி

1. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

விடை:

மருத்துவத் தாவரங்களிலிருந்து பெறப்படும் பொருள்கள்.

.கா. ஆல்கலாய்டுகள், டெர்பினாய்டுகள்.

 

2. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?

விடை:

1. சமையலறைத் தோட்டங்கள்

இது நமக்குத் தேவையான காய்கறிகளை வீட்டைச் சுற்றி சிறிய அளவில் வளர்ப்பதாகும்.

.கா. பீன்ஸ், முட்டைகோஸ், கேரட், தக்காளி.

2. வணிகத்தோட்டங்கள்

சந்தைகளில் விற்பனை செய்யும் நோக்கத்தோடு பெரிய அளவில்

காய்கறிகளை உற்பத்தி செய்யும் முறை.

3. செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்

இது கட்டடங்கள் பசுமைவீடுகள் குளிர்சாதனப் பண்ணைகள் மற்ற பிற செயற்கையான சூழ்நிலைகளில் காய்கறிகளை வளர்க்கும் முறையாகும்.

 

3. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.

விடை:

1. குளிர்வித்தல் - காளான்கள் குளிர்சாதன பெட்டியில் பதப்படுகிறது. எனவே அதிக நாட்கள் கெடாமல் பதப்படுத்த முடியும்.

2. உலர்த்துதல் - உணவு உலர்த்தியில் வைத்து காளான்களை உலர்த்தி நீரை வெளியேற்றுவது.

 

4. வேதி உரங்களைக் காட்டிலும் மண்புழு உரம் எவ்வாறு சிறந்தது என்பதைப் பட்டியலிடு.

விடை:

1. இது தாவர வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தினை அளிக்கிறது.

 2. தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் நொதிகள் உள்ளடக்கியது.

3. கரிமப் பொருட்கள் மண்ணில் சிதைவடைவதை மேம்படுத்துகிறது.

4. நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அற்றது.

 

5. மண்புழு வளர்ப்பில் பயன்படும் மண்புழு சிற்றினங்கள் யாவை?

விடை:

பெரியோனிக்ஸ் எஸ்கவேட்டஸ் (இந்திய நீலவண்ண மண்புழு

எஸ்செனியாபெடிடா (சிவப்பு மண்புழு

யூட்ரிலஸ் யூஜீனியே (ஆப்ரிக்க மண்புழு)

 

5. தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக.

விடை:

1. தேன் புரைத் தடுப்பானாகவும் பாக்டீரிய எதிர்ப்பு பொருளாகவும் இரத்தத்தை தூய்மையாக்கவும் பயன்படுகிறது.

2. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது.

3. ஆயுர்வேதம், யூனானி மருத்துவத்தில் பயன்படுகிறது.

4. இருமல், சளி, காய்ச்சல், தொண்டை வறட்சியை நீக்க பயன்படுகிறது.

5. நாக்கு, குடற்புண்களை குணப்படுத்த உதவுகிறது.

6. செரிமானத்திற்கும் பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.

 

VII. விரிவாக விடையளி

1. மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பின் நிறைகளை எழுதுக?

விடை:

நிறைகள்:

1. ஊட்டச்சத்தும் நீரும் பாதுகாக்கப்படுகின்றன.

2. கட்டுப்படுத்தப்பட்ட தாவர வளர்ச்சி காணப்படும்.

3. பாலை வனங்களிலும் ஆர்டிக் துருவப் பகுதிகளிலும் இந்த முறை ஒரு சிறந்த மாற்று வேளாண் முறையாக உள்ளது.

4. விதையில்லா வெள்ளரி மற்றும் தக்காளி போன்றவைகளை வணிகரீதியாக உற்பத்தி செய்வதற்காக இம்முறை வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

2. காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.

விடை:

தாவர, விலங்கு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளைப் பயன்படுத்தி காளான்களை வளர்க்கும் முறையே காளான் வளர்ப்பு ஆகும்.

காளான் வளர்த்தலின் நிலைகள்:

1. கலத்தல்:

வைக்கோலுடன் மாட்டுச்சாணம் கரிமக் கனிம உரங்களைச் சேர்த்து கலப்பு உரமானது தயாரிக்கப்படுகிறது. இது 50°C வெப்ப நிலையில் பாதுகாக்கப்படுகிறது.

2. காளான் வித்து:

ஸ்பான் என்பது காளான் விதையாகும். இந்த ஸ்பான் விதைகள் உரங்களின் மேல் தூவப்படுகின்றன.

3. உறையிடுதல்:

விதைகலந்த உரத்துடன் மண்ணானது மெல்லிய அடுக்காக தூவப்படுகின்றன. இது ஈரப்பதத்தை வழங்கி வெப்பநிலையைச் சீராக்குகின்றன.

4. பொருத்துதல்:

குண்டூசி போன்ற வெண்மையான காளான் மொட்டுகளுக்கு ஊசிகள் என்று பெயர்.

5. அறுவடை செய்தல்:

ஒரு வாரத்தில் 15 - 23°C வெப்பநிலை 3 செ.மீ. உயரம் வரை வளர்கிறது. மூன்று வார காலத்தில் முழுமையான காளான்களை அறுவடை செய்யலாம்.

6. பதப்படுத்துதல்:

நிறம் மாறுதல், எடை குறைதல், சுவை இழப்பு ஆகியன அறுவடை காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் இவற்றை தடுக்க குளிர்வித்தல், உலர்த்துதல், கலனில் அடைத்தல் மற்றும் வெற்றிட குளிர்வித்தல் முறையில் பதப்படுத்தப்படுகின்றன.

 

3. மண்புழு உரமாக்குதலுக்கு பயன்படும் கரிம மூல ஆதாரங்கள் யாவை?

விடை:

1. விவசாயக் கழிவுகள்

2. பயிர்க்கழிவுகள் - நெல், வைக்கோல், அரிசி, உமி, நார்க்கழிவு

3. இலை குப்பைகள்

4. பழம் மற்றும் காய்கறிக் கழிவுகள்

5. விலங்கு கழிவுகள்

6. சாண - எரி வாயு கழிவுகள்

 

4. மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?

விடை:

) இனப்பெருக்க குளம்:

ஆரோக்கியமான இனப்பெருக்கத்திற்கேற்ற முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்கள் சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றது.

) குஞ்சு பொரிக்கும் குழிகள் :

இனப்பெருக்க குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன.

) நாற்றங்கால் குளங்கள்:

2 முதல் 7 நாட்களுக்குப் பிறகு இளம் மீன் குஞ்சுகள் 60 நாட்கள் வரை 2 - 2.5 செ.மீ. அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.

) வளர்க்கும் குளங்கள்:

இளம் மீன்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மூன்றுமாதம் வரை 10 முதல் 15 செ.மீ. நீளமுடைய மீனாக வளரும் வரை இங்கு வளர்க்கப்படுகின்றன.

) இருப்புக்குளங்கள்:

விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

 

5. பல வகைக் கால்நடை இனங்களை சரியான உதாரணத்துடன் வகைப்படுத்துக.

விடை:

கால்நடை இனங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்

 1. பால் உற்பத்தி இனங்கள்

2. இழுவை இனங்கள்

3. இரு பயன்களையும் தரும் இனங்கள்

1. பால் உற்பத்தி இனங்கள் :

பாலினைப் பெறுவதற்காக வளர்க்கப்படுகின்றன.

• “பசுக்கள்அதிகளவு பால் தருபவை உள்நாட்டு இனங்கள் வெளிநாட்டு இனங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.

உள்நாட்டு இனங்கள் .கா. சாகிவால், சிவப்பு சிந்தி மற்றும் கிர், இவ்வகை இனங்கள் வலுவான கால்கள் நிமிர்ந்த திமில், தளர்வான தோல்களையும் கொண்டது மற்றும் சிறப்பான நோய் எதிர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளன.

• “அயல்நாட்டு இனங்கள்ஜெர்ஸி, ப்ரௌன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ஃப்ரெய்ஸ்யன் ஆகியவை.

2. இழுவை இனங்கள் :

இவ்வகை இன மாடுகள் உழுதல், பாசனம், வண்டியிழுத்தல் போன்ற வேலைகளைச் செய்ய உதவுகிறது.

.கா. காங்கேயம், உம்பளச்சேரி, மாலவி

இவற்றிலுள்ள எருதுகள் கடினமான இழுவை வேலையை நன்றாகச் செய்தாலும் பசுக்கள் குறைந்த அளவு பாலினைக் கொடுக்கிறது.

3. இரு பயன்களையும் தரும் இனங்கள் :

இவ்வகை இனங்கள் பால் உற்பத்திக்காகவும், பண்ணை வேலைகளைச் சிறப்பாகச் செய்வதற்காகவும் பயன்படுகின்றன.

இந்தியாவில் இவ்வகையைச் சார்ந்த மாடுகள் அதிகமாக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

.கா. அரியானா மாடுகள், ஓங்கோல் மாடுகள்

இந்தியாவில் எருமை மாடுகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. பசுக்களைவிட எருமைகளே அதிகளவு பாலினைக் கொடுக்கின்றன. .கா. முரா எருமை, மெசானா மற்றும் சுர்தி எருமை.

 

VIII. உயர் சிந்தனை வினாக்கள்

1. உயிரி உரமிடல் விவசாயத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது நிரூபி.

விடை:

1. உயிர் உரமானது தாவரங்களின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்றாகும். 2. இலைகள் தாவர விலங்கு கழிவுகள் மற்றும் நுண்ணுயிர்களால் உருவாகின்றன.

3. இவ்வகை உரங்கள் நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்தினை மண்ணிற்கு வழங்கி அவற்றை வளமானதாக மாற்றுகின்றன.

 

2. ஒவ்வொரு தேன் கூடும் அறுங்கோண அறைகளைக் கொண்டிருக்கும். அவை எதனால் ஆக்கப்பட்டிருக்கும்? அதன் சிறப்பம்சம் என்ன?

விடை:

1. தேன் கூடுகள் வேலைக்காரத் தேனீயின் வயிற்றுப்புற சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் மெழுகினால் உருவாக்கப்படுகிறது.

2. அறுங்கோண வடிவம் என்பது ஒரு பயனுள்ள அமைப்பு.

3. இராணித் தேனீயின் முட்டைகள் மகரந்தம் மற்றும் தேனீனை சேமிக்க உதவுகிறது.

4. இவ்வமைப்பு ஒரு திடமான அமைப்பு

5. குறைந்த பொருள்களைக் கொண்டு அதிக இடத்தினை இவ்வறுங்கோணம் உருவாக்குகிறது.


பிற நூல்கள்

1. Jawaid Ahsan and Subhas Prasad Sinha A Hand Book on Economic Zoology, S.Chand and Company, New Delhi

2. Shukla G.K. and Upadhyay V.B Economic Zoology, Rastogi publications, Meerut

 3. Ismail, S.A. The Earthworm Book, Other India Press, Goa

 

இணைய வளங்கள்

http:// www.biology.online.org

www.agritech.tnau.ac.in

www.fisheries.tn.gov.in

www.tnhorticulture.tn.gov.in

www.biology discussion.com

www.nios.ac.in.tetxbook.com

 

கருத்து வரைபடம்



Tags : Economic Biology | Biology | Science பொருளாதார உயிரியல் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Economic Biology : Answer the following questions Economic Biology | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - பொருளாதார உயிரியல் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 23 : பொருளாதார உயிரியல்