Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | இந்தியா - மௌரியருக்குப் பின்னர்

பருவம் 3 அலகு 2 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியா - மௌரியருக்குப் பின்னர் | 6th Social Science : History : Term 3 Unit 2 : The Post-Mauryan India

   Posted On :  30.08.2023 08:02 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 2 : இந்தியா - மௌரியருக்குப் பின்னர்

இந்தியா - மௌரியருக்குப் பின்னர்

கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் வழியாக, • மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோன்றிய அரசுகள், அரச வம்சங்கள் குறித்து அறிந்துகொள்ளுதல் • இந்தியாவில் வடக்கு, வடமேற்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்ட பல்வேறு அரசுகளின் ஆட்சி அமைப்பு, சமூகம், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல் • இந்தியாவின் இடைக்காலத் தொடக்கத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை தெரிந்துகொள்ளுதல்

அலகு 2

இந்தியா - மௌரியருக்குப் பின்னர்



 

கற்றல் நோக்கங்கள்

இப்பாடத்தைக் கற்றுக் கொள்வதன் வழியாக,

• மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தோன்றிய அரசுகள், அரச வம்சங்கள் குறித்து அறிந்துகொள்ளுதல்

• இந்தியாவில் வடக்கு, வடமேற்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்ட பல்வேறு அரசுகளின் ஆட்சி அமைப்பு, சமூகம், பொருளாதாரம், பண்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளுதல்

• இந்தியாவின் இடைக்காலத் தொடக்கத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை தெரிந்துகொள்ளுதல்

 

அறிமுகம்

மௌரியப் பேரரசின் வீழ்ச்சியின் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ- கிரேக்கர்கள் அல்லது பாக்டீரிய-கிரே க்கர்கள், குஷாணர்கள் போன்றோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர். அச கரின் மறைவுக்குப் பின்னர் தெற்கே சாதவாகனர்கள் சுதந்திர அரசர்களயினர். குப்தப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன்னர் வடக்கே சுங்கர்களும் கன்வர்களும் ஆட்சி புரிந்த னர். கலிங்கத்தில் சேடிகள் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்ப டுத்தினர்.


மகதம் முன்பிருந்தது போல் ஒரு பேரரசாக இல்லாது போனாலும் அது தொடர்ந்து பௌத்தப் பண்பாட்டின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

 

சான்றுகள்

தொல்லியல் சான்றுகள்

கல்வெட்டுகள் / செப்புப் பட்டயங்கள்

₹ தனதேவனின் அயோத்தி கல்வெட்டு

₹ பெர்சிபோலிஸ் நக்ஸி ரஸ்தம் கல்வெட்டு

₹ மோகா (தட்சசீலம் செப்புப்பட்டயம்)

₹ ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு

₹ நாசிக் மெய்க்கீர்த்தி (பிரசஸ்தி)

₹ முதலாம் டேரியஸின் கல்வெட்டு

 

நாணயங்கள்

₹ சாதவாகனரின் நாணயங்கள்

₹ இரண்டாம் கட்பிஸிசின் நாணயங்கள்

₹ ரோமானிய நாணயங்கள்

 

இலக்கியங்கள்

₹ புராணங்கள்

₹ கார்கி சம்கிதா

₹ பாணபட்டரின் ஹர்ஷ சரிதம்

₹ பதஞ்சலியின் மகாபாஷ்யா

₹ குணாதியாவின் பிரிகஸ்தகதா

₹ நாகார்ஜுனாவின் மத்யமிக சூத்ரா

₹ அஸ்வகோஷரின் புத்த சரிதம்

₹ காளிதாசரின் மாளவிகாக்னிமித்ரம்

 

அயல் நாட்டவர் குறிப்புகள்

₹ சீன பௌத்தத் துறவி யுவான்-சுவாங்கின் பயணக் குறிப்புகள்

 

வடக்கே சுங்கர்களும் கன்வர்களும்


சுங்கர்கள்

மௌரியப் பேரரசின் கடைசி அரசர் தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். புஷ்யமித்ர சுங்கர் மகதத்தில் தனது சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்திரர் பாடலிபுத்திரத்தைத் தனது தலைநகராக்கினார்.

புஷ்யமித்திரரின் அரசு மேற்கு நோக்கி விரிவடைந்து உஜ்ஜைனி, விதிஷா ஆகியவற்றை உள்ளடக்கியதானது. பாக்டீரியாவின் அரசன் மினான்டரின் படையை புஷ்யமித்ரர் வெற்றிகரமாக முறியடித்தார் ஆனால் மினான்டர் காபூலையும் சிந்துவையும் தன்கைவசம் வைத்துக் கொண்டார்.

கலிங்க அரசர் காரவேலனின் தாக்குதலையும் புஷ்யமித்ரர் முறியடித்தார். மேலும் விதர்பாவையும் அவர் கைப்பற்றினார். புஷ்யமித்ரர் வேதமதத்தைத் தீவிரமாகப் பின்பற்றியவர். அவர் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இருமுறை அஸ்வமேத யாகம் நடத்தினார். 

பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுவது போல ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும் வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.

புஷ்யமித்ர சுங்கருக்குப் பின்னர் அவருடைய மகன் அக்னிமித்ரர் அரச பதவி ஏற்றார். அவர்தான் காளிதாசர் இயற்றிய மாளவிகாக்னிமித்ரா நாடகத்தின் கதாநாயகன் எனக் கருதப்படுகிறார். மேலும் அந்நாடகம் அக்னிமித்ரரின் மகன் வசுமித்ரர் கிரேக்கர்களைச் சிந்து நதிக்கரையில் வெற்றி கொண்டதாகக் குறிப்பிடுகின்றது.

சுங்க வம்சத்தின் பின்வந்த அரசர்கள் வலிமை குன்றியவர்களாக இருந்ததால் இந்தோ-பாக்டீரியர், இந்தோ-பார்த்தியர் ஆகியோரின் தொடர் அச்சுறுத்தல்களைச் சந்திக்க நேர்ந்தது. சுங்கவம்சத்தினர் நூறு ஆண்டு காலம் ஆட்சி புரிந்தனர். தேவபூதி கடைசி சுங்க அரசராவார். அவர் தன்னிடம் அமைச்சராகப் பணி புரிந்த வாசுதேவ கன்வர் என்பவரால் கொல்லப்பட்டார். வாசுதேவர் மகதத்தில் கன்வர் வம்சத்தை நிறுவினார்.


சுங்கர்கள் காலத்தின் முக்கியத்துவம்

பாக்டீரியாவைச் சேர்ந்த கிரேக்கர்களின் ஆக்கிரமிப்புகளிலிருந்து கங்கைப் பள்ளத்தாக்குப் பகுதியைப் பாதுகாப்பதில் சுங்கர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். புஷ்யமித்திரரும் அவருக்குப் பின்வந்தோரும் வேதமத நடைமுறைகளுக்குப் புத்துயிர் ஊட்டி, வைணவத்தை வளர்த்தனர். சமஸ்கிருத நாளடைவில் வளர்ச்சியடைந்து மொழி அரசவை மொழியானது.

சமஸ்கிருத மொழியின் இரண்டாவது இலக்கண அறிஞரான பதஞ்சலியைப் புஷ்யமித்திரர் ஆதரித்தார்.

புஷ்யமித்திரர் பௌத்தர்களைத்  துன்புறுத்தினாலும் இவருடைய ஆட்சிக்  காலத்தில்தான் பார்குத், சாஞ்சி ஆகிய

கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார். காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்


இடங்களிலுள்ள பௌத்த நினைவுச் சின்னங்கள் சீர்செய்யப்பட்டுப்புதுப்பிக்கப்பட்டன. சாஞ்சியில் உள்ள மாபெரும் ஸ்தூபியும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச் சுவரும் சுங்கர்களின் காலத்தவையாகும்.

 

கன்வர்கள்

கன்வ வம்சம் நான்கு அரசர்களை மட்டுமே பெற்றிருந்தது. அவர்களின் ஆட்சி 45 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. கன்வர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், குப்தர்களின் எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நிகழவில்லை.

கன்வ அரசர்கள்

₹  வாசுதேவர்

₹  பூமிமித்ரர்

₹ நாராயணர்

₹  சுசர்மன்

கடைசிக் கன்வ அரசனான சுசர்மன், ஆந்திராவைச் சேர்ந்த வலிமை மிகுந்த குறுநில மன்னரான சிமுகா என்பவரால் கொல்லப்பட்டார். சிமுகா சாதவாகன வம்ச ஆட்சிக்கு அடிக்கல்லை நாட்டினார்.

 

தெற்கில் சாதவாகனர்கள்

குஷாணர்கள் வட இந்தியாவில் 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். தென்னிந்தியாவில் சாதவாகனர்கள் (ஆந்திரர்) 450 ஆண்டுகள் கோலோச்சினர். சாதவாகன வம்சத்தை நிறுவிய சிமுகா இருபத்துமூன்று ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து அவருடைய சகோதரர் கிருஷ்ணா பதவியேற்றார். கிருஷ்ணரும் அவருடைய சகோதரியின் மகன் சதகர்ணியும் பத்தாண்டுகள் வீதம் ஆட்சி புரிந்தனர். இவர்கள் காலத்தில் சாதவாகன அரசு பேரரசானது. வடமேற்கில் ராஜஸ்தான் முதல் தென்கிழக்கே ஆந்திரா வரையிலும் மேற்கில் குஜராத் முதலாக கிழக்கே கலிங்கம் வரையிலுமாக விரிந்து பரந்த பேரரசை இவர்கள் ஆட்சி செய்தனர். தனது பேராதிக்க நிலையின் அடையாளமாகச்


சாதவாகன அரச குடும்பத்தின் மாபெரும் மன்னர் கௌதமிபுத்திர சதகர்ணியாவார். இவரது அன்னை கௌதமி பாலஸ்ரீயால் வெளியிடப்பட்ட நாசிக் மெய்க்கீர்த்தியில் (பிரசஸ்தியில்) இவர் சாகர், யவனர் (கிரேக்கர்) பகலவர் (பார்த்தியர்) ஆகியோரை அழித்து ஒழித்தார் எனக் கூறப்பட்டுள்ளது. பேரரசின் எல்லைகளும் இம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்களின் பேரரசு மகாராஷ்டிரா, வடக்கு கொங்கன், பெரார், குஜராத்,கத்தியவார்,மாளவம் ஆகியபகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. கப்பலின்வடிவம் பொறிக்கப்பட்டுள்ள வசிஸ்டபுத்திர ஸ்ரீபுலமாயி நாணயங்கள் ஆந்திரர்கள் கடல்சார் நடவடிக்கைகளில் பெற்றிருந்த திறன்களையும். அவர்களது கப்பற்படை வலிமையையும் உணர்த்துகின்றன. போகர் கல்வெட்டானது தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அரசு உருவாக்கத்தில் தென்னிந்தியா வகித்த முக்கியப் பங்கைப் பற்றிக் கூறுகிறது.



சாதவாகனர்களின் பங்களிப்பு

இலக்கியம்

சாதவாகன அரசர் ஹாலா ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞர். கி.மு.(பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில், தக்காணப் பகுதிகளில் கண்டரா மொழிப்பள்ளியைச் சார்ந்த சமஸ்கிருதம் செழித்தோங்கியது. பிராகிருத மொழியில் 700 பாடல்களைக் கொண்ட சட்டசாய் (சப்தசதி) எனும் நூலை எழுதியதன் மூலம் அரசர் ஹாலா புகழ் பெற்றிருந்தார். 

கலையும் - கட்டடக்கலையும்

சாதவாகனர்கள் மிகச் சிறந்த கட்டடக்கலை வல்லுநர்கள் ஆவர். அவர்கள் அமராவதியில்

 உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள மலைகளில் இம்மலைகள் வடமேற்கு செதுக்கப்பட்டுள்ளன. பண்டைய இந்தியாவின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது. (தற்போது இப்பகுதி ஆப்கானிஸ்தானின் மையத்தில் உள்ளது. அண்மையில் இவற்றைத் தாலிபான்கள் உடைத்து நொறுக்கினர்.) இச்சிற்பங்கள் மௌரியர் காலத்துக்கு பின்னரான காந்தாரக் கலைப்பள்ளியைச் சேர்ந்த அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்களால் திடமான பாறைகளில் செதுக்கப்பட்டவை ஆகும்.


 

கௌதமிபுத்திர சதகர்ணி கால நாணயங்கள் பௌத்த ஸ்தூபிகளைக் கட்டினர். வியட்நாமில் உள்ள ஒக்-யோ என்னும் தொல்லியல் ஆய்விடத்தில் கண்டறியப்பட்ட புத்தரின் நின்ற கோலத்திலான வெண்கலச் சிலையானது அமராவதி பாணியை ஒத்துள்ளது. பிற்காலத்தைச் சேர்ந்த சாதவாகன அரசர்கள் இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்களின் சின்னம் பொறிக்கப்பட்ட ஈய அல்லது செப்பு நாணயங்களை வெளியிட்டனர். தாய்லாந்தில் நாக்கான் பதோம் என்ற இடத்தில் கல்லால் ஆன முத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் அதே வடிவத்தில் அமைந்துள்ளது.

காந்தாரம், மதுரா, அமராவதி, புத்த கயா, சாஞ்சி, பாகுத் ஆகிய இடங்கள் கலைகளுக்கும் அற்புதமான கட்டடங்களுக்கும் பெயர் பெற்றவையாகும். மதுரா சிற்பக் கலைப்பள்ளி பௌத்த, சமண, வேதமதக் கடவுளர்களின் பிம்பங்களையும் முழு உருவச் சிலைகளையும் வடித்தது.

 

இந்தோ-கிரேக்கர், இந்தோ-பார்த்தியர், சாகர், குஷாணர்

இந்தோ-கிரேக்கர்கள், இந்தோ-பார்த்தியர்கள்

வடமேற்கு இந்தியாவையும் பஞ்சாப் பகுதியையும் கைப்பற்றிய அலெக்ஸாண்டர் அவற்றைத் தனது பிராந்திய ஆளுநர்களின் பொறுப்பில் விட்டுச்சென்றார். அவற்றில் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த பாக்டீரியா, பார்த்தியா ஆகிய இரு சத்ராபிகள் (மாநிலங்கள்) தங்கள் கிரேக்க ஆளுநர்களின் தலைமையில் கிளர்ச்சி செய்து அவர்களின் கீழ் சுதந்திர அரசுகளாயின. பாக்டீரியா சத்ராபி முதலாம்

 

இந்தோ-கிரேக்க அரசர்கள்

முதலாம் டெமிட்ரியஸ்: இவர் கிரேக்கோ- பாக்டீரிய அரசர் யுதி டெமஸ் என்பாரின் மகனாவார். இவர் கி.மு.(பொ.ஆ.மு) 294 முதல் 288 வரை மாசிடோனியாவின் மன்னராக இருந்தார். டெமிட்ரியஸ் சதுர வடிவிலான இரு மொழி வாசகங்களைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டார் என்பதை நாணயச் சான்றுகள் உறுதி மினான்டர் செய்கின்றன. நாணயத்தின் தலைப் பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதியில் கரோஷ்தி மொழியும் இடம் பெற்றுள்ளன. டெமிட்ரியஸ் எனும் பெயரில் மூவர் இருந்துள்ளனர். எனவே, இம்மூவருள் யார் கி.மு. (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில் தொடங்கும் யவன சகாப்தத்தைத் தொடங்கிவைத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் முடிவு செய்ய முடியவில்லை.


மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர்களில் ஒருவராவார். வடமேற்குப் பகுதியில் பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது. இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்துநதி கடந்து மேற்கு உத்தரப்பிர தேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன. மிலிந்த பன்கா எனும் நூல் ஒன்று உள்ளது. பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிகுர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது. மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாகக் கருதப்படுகிறது.

டயோடாடஸ் தலைமையிலும், பார்த்தியா அர்சாகஸ் தலைமையிலும் சுதந்திர அரசுகளாக அறிவித்தன.

மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாக்டீரியா, பார்த்தியா ஆகியவற்றின் கிரேக்க அரசர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறப் பகுதிகளை ஆக்கிரமித்தனர். இவ்வாறு குடியேறிய பாக்டீரியர்களும் பார்த்தியர்களும் குடியேறிய இடத்தில் வாழ்ந்த மக்களோடு திருமண உறவு கொண்டு இரண்டறக் கலந்தனர். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் இந்தோ-கிரேக்கர், இந்தோ பார்த்தியர் குடியிருப்புகள் உருவாக உதவியது.


இந்தோ-கிரேக்கர்களின் பங்களிப்பு

நாணயமுறை

இந்தோ-கிரேக்க ஆட்சியாளர்கள் அச்சு வார்க்கும் முறையை அறிமுகம் செய்து, நேர்த்தியான வடிவங்களில் நாணயங்களை வெளியிட்டனர். அவற்றில் எழுத்துக்களும் சின்னங்களும் உருவங்களும் பொறிக்கப்பட்டன. இம்முறையை இந்தியர்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டனர்.

சிற்பங்கள்

இந்தியாவின் காந்தாரக் கலைப்பள்ளி கிரேக்கர்களின் சிற்பக் கலைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள். மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்தெடுக்கும் முறையைக் கற்றனர். கிரேக்கர்களிடமிருந்து அதன்மூலம் குடைவரைச் சிற்ப கட்டடக்கலையில் சிறப்புத்திறன் பெற்றவராயினர்

 

சாகர்கள்

இந்தியாவில் இந்தோ-கிரேக்கரின் ஆட்சிக்குச் சாகர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். நாடோடி இனத்தவரான இவர்கள் பெரும் எண்ணிக்கையில் இந்தியாவுக்குள் நுழைந்து வடக்கு மற்றும் மேற்கிந்தியா முழுவதும் பரவினர். இவர்கள் துருக்கிய நாடோடிப் பழங்குடியினர்க்கு எதிரானவர்கள். சாகர்கள் பண்டைய நாடோடி இன ஈரானிய சைத்தியர்கள் ஆவர். சமஸ்கிருத மொழியில் இவர்கள் சாகர்கள் என அறியப்பட்டனர்.

சாகர்களின் ஆட்சியானது மாவோஸ் அல்லது மோகா என்பவரால் காந்தாரப்பகுதியில் நிறுவப்பட்டது. அவருடைய தலைநகர் சிர்காப் ஆக இருந்தது.

மோரா கல்வெட்டில் அவருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருடைய நாணயங்களில் புத்தர், சிவன் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

 

இந்தோ-பார்த்திய (பகலவர்) அரசர்கள்

இந்தோ-கிரேக்கர், இந்தோ-சைத்தியர் ஆகியோருக்குப் பின்னர் இந்தோ- பார்த்தியர் வந்தனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குஷாணர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இந்தோ-பார்த்திய அரசு அல்லது கோன்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது. இந்தோ- பார்த்தியர் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிறித்துவ உபதேசியார் புனித தாமசுடன் தொடர்புடையதாகும். கிறித்துவ மரபின்படி புனித தாமஸ் இந்தியவிற்கு வருகை புரிந்தார். கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு அவரது வருகையால் மன்னர் கிறித்துவத்தை தழுவினார்.


சாகர் வம்சத்தின் மிக முக்கியமான, புகழ்வாய்ந்த அரசர் ருத்ரதாமன் ஆவார். அவருடைய ஜுனாகத்/கிர்னார் கல்வெட்டு தூய சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட முதல் கல்வெட்டுக் குறிப்பாகும். இந்தியாவில் சாகர்கள் இந்தியச் சமூகத்தினுள் இரண்டறக் கலந்து வாழ்ந்தனர். நாளடைவில் அவர்கள் இந்தியப் பெயர்களைச் சூட்டிக் கொண்டனர். இந்திய மத நம்பிக்கைகளையும் ஏற்கத் தொடங்கினர். சாகர்கள் ஷபத்திராபஸ் அல்லது சத்ரப்ஸ் என்னும் பெயர்களில் பிராந்திய ஆளுநர்களை நியமித்து, அவர்கள் தங்கள் பகுதிகளை நிர்வகித்தனர்.


 

குஷாணர்கள்

குஷாணர்கள் பழங்காலத்தில் சீனாவின் வடமேற்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த யூச்-சி பழங்குடி இனத்தின் ஒரு பிரிவினராவர். கி.மு. முதலாம் நூற்றாண்டில் யூச்-சி-பழங்குடியினர் ஐந்து பிரதானப் பிரிவினராக இருந்தனர். அவர்களுள் குஷாணர் ஏனைய பிரிவினர்மீது அரசியல் மேலாதிக்கம் செலுத்தி அவர்களுக்கு அரசியல் தலைமை ஏற்றனர்.

கிறித்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த யூச்-சி- பழங்குடியினரும், மேலாதிக்கத்தை குஷாணர்களுடைய ஏற்றுக்கொண்டனர். தங்களுடைய நாடோடிப் பழக்கவழக்கங்களைக் கைவிட்ட அவர்கள் இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தை ஒட்டியிருந்த பாக்டீரியர், பார்த்தியர் ஆகியோரின் பகுதிகளில் குடியேறினர்.

பின்னர் பாக்டீரியர், பார்த்தியர் ஆகியோரின் பகுதிகளையும் கைப்பற்றிய அவர்கள் படிப்படியாக வட இந்தியப் பகுதிகளில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். பஞ்சாப், ராஜஸ்தான், கத்தியவார் ஆகிய பகுதிகளில் அதிகம் பரவியிருந்த குஷாணர்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றினர். இதன் விளைவாக தட்சசீலமும் மதுராவும் மிகச் சிறந்த கல்விமையங்களாகச் செயல்பட்டன. மேற்கு ஆசியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்தனர்.


குஷாண அரசர்கள்

கனிஷ்கர்

குஷாணப் பேரரசர்களில் மாபெரும் பேரரசர் கனிஷ்கர் ஆவார். கி.பி. (பொ.ஆ) 78 இல் அரச பதவி ஏற்றார். ஒரு புதிய சகாப்தத்தை நிறுவியதன் மூலம் தனது ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார் பின்னர் இது சாகர் சகாப்தமானது.

தொடக்கத்தில் காபூல், குஷாணர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் அது பெஷாவர் அல்லது புருஷபுரத்துக்கு மாற்றப்பட்டது.


முதலாம் கட்பிசஸ் - குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி இவரேயாவார். அவர் இந்தோ-கிரேக்க, இந்தோ-பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார். தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல், காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.

இரண்டாம் கட்பிசஸ் -  இவர் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார். அவருடைய நாணயங்கள் சிலவற்றில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அரசருடைய பட்டப்பெயர்கள் கரோஷ்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.

 


படையெடுப்புகள்

கனிஷ்கற் காஷ்மீரைக் கைப்பற்றி தம் நாட்டுடன் இணைத்துக்கொண்டார். மேலும், மகதத்திற்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றார். விரிந்து பரந்த தனது பேரரசின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதற்காக மேற்கு, தென்மேற்கு எல்லைகளில் பார்த்திய அரசருக்கு எதிராகப் போர் தொடுத்தார்.

காஷ்மீரையும் காந்தாரத்தையும் வென்ற பின்னர் தனது கவனத்தைச் சீனாவை நோக்கித் திருப்பினார். கனிஷ்கர் சீனத் தளபதி பன்-சியாங் என்பவரைத் தோற்கடித்து, இந்தியாவின் வட எல்லைகளைச் சீனர்களின் ஊடுருவல்களிலிருந்து பாதுகாத்தார்.

அவருடைய பேரரசு, கீழே வாரணாசி வரையிலும் வடக்கே காஸ்கர், யார்க்கண்ட், தெற்கே விந்திய மலைகள், மேற்கே பாரசீகம், பார்த்தியா ஆகியவற்றின் எல்லைகள் வரை பரவியிருந்தது.

 

மதக் கொள்கை

கனிஷ்கர் ஒரு தீவிர பௌத்தராவார். கனிஷ்கரின் பேரரசு ஒரு பெளத்தப் பேரரசு. பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பௌத்தத் துறவியான அஸ்வகோஷர் என்பவரின் போதனைகளால் அவர் பௌத்தத்தைத் தழுவினார். கனிஷ்கர் மாபெரும் வீரராகவும் பேரரசை உருவாக்கியவராகவும் இருந்தபோதிலும் அதே அளவிற்கு மகாயான பௌத்தத்தை ஆதரிப்பவராகவும் அதைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்பவருமாக விளங்கினார்.

கனிஷ்கர் பௌத்தத்தை அரசமதமாக்கினார். மேலும் பல ஸ்தூபிகளையும் மடாலயங்களையும் மதுரா, தட்ச சீலம் மற்றும் பேரரசின் இதரபகுதிகளிலும் கட்டினார். புத்தரின் நற்செய்திகளைப் பரப்புவதற்காகப் பௌத்தச் சமயப் பரப்பாளர்களைத் திபெத், சீனா மற்றும் மத்திய ஆசியாவின் பலநாடுகளுக்கும் அனுப்பிவைத்தார்.

பௌத்தமதப் பிரிவுகளிடையே நிலவிய கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக நான்காவது பௌத்தப் பேரவையை ஸ்ரீநகருக்கு அருகேயுள்ள குந்தல வனத்தில் கூட்டினார். இப்பேரவையில்தான் ஹீனயானம், மகாயானம் எனப் பௌத்தம் பிளவுற்றது.

 

கலையும் இலக்கியமும்

கனிஷ்கர் கலை, இலக்கியங்களின் மிகப்பெரும் ஆதரவாளர் ஆவார். அஸ்வகோஷர், வசுமித்ரர், நாகார்ஜுனர் போன்ற எண்ணற்ற பௌத்தத் துறவிகளாலும் அறிஞர்களாலும் அவருடைய அவை அலங்கரிக்கப்பட்டது.


அஸ்வகோஷர் ' புத்தசரிதம்' என்னும் முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர் ஆவார்.

காஷ்மீரில் கனிஷ்கபுரம் எனும் புதிய நகரை உருவாக்கினார். மேலும் தலைநகர் புருஷபுரத்தை அற்புதமான கட்டடங்களால் அழகுபடுத்தினார்.

இவருடைய காலத்தில் காந்தாரக் கலைப்பள்ளி செழித்தோங்கியது. புத்தரின் சிலைகளைத் செதுக்குவது காந்தாரக் கலைஞர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.

பௌத்தக் கல்வியும் பண்பாடும் தட்சீலத்திலிருந்து சீனாவுக்கும் மங்கோலியாவுக்கும் சென்றன. குஷாணர் காலத்தில் மாபெரும் ஆசியப் பண்பாடானது இந்திய பௌத்தப் பண்பாட்டோடு கலந்தது.

கனிஷ்கரின் திறமையற்றவர்களாகவும் பின்வந்தோர் வலிமை குன்றியவர்களாகவும் இருந்தனர். இதன் விளைவாகக் குஷாணப் பேரரசு வேகமாகச் சிதைவுற்று பல சிற்றரசுகளானது.

 

உலகம் அந்நாளில்

குஷாணப் பேரரசு ஜூலியஸ் சீசர் வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும். குஷாணப் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.



பாடச்சுருக்கம்

₹ மௌரியப் பேரரசு சிதறுண்டதன் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள், சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ- கிரேக்கர்கள், குஷாணர்கள் ஆகியோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்

₹ கடைசி மௌரியப் பேரரசர் பிருகத்ரதர் அவருடைய படைத்தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். மகதத்தில் புஷ்யமித்ர சுங்கர் சுங்க அரசவம்சத்தை நிறுவினார்

₹ கன்வர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் குப்த அரச வம்சத்தின் எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த நிகழ்வுகள் இடம்பெறவில்லை

₹ வட இந்தியாவில் குஷாணர்கள் 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். தெற்கே சாதவாகனர்கள் (ஆந்திரர்) 450 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்

₹ சாகர் வம்ச அரசர்களில் தலை சிறந்தவர் ருத்ரதாமன் ஆவார்

₹ குஷாணர்களில் நன்கறியப்பட்டவர் கனிஷ்கர். இவர் மகாயான பௌத்தத்தைத் தீவிரமாகப் பின்பற்றினார். இவருடைய காலத்தில் காந்தாரக் கலை வளர்ச்சி பெற்றது




Tags : Term 3 Unit 2 | History | 6th Social Science பருவம் 3 அலகு 2 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : History : Term 3 Unit 2 : The Post-Mauryan India : The Post-Mauryan India Term 3 Unit 2 | History | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 2 : இந்தியா - மௌரியருக்குப் பின்னர் : இந்தியா - மௌரியருக்குப் பின்னர் - பருவம் 3 அலகு 2 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 3 அலகு 2 : இந்தியா - மௌரியருக்குப் பின்னர்