Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

சூழ்நிலை அறிவியல் | உயிரியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Biology : Environmental Science

   Posted On :  18.09.2023 09:35 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

IV. சுருக்கமாக விடையளி

1. உயிர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?

விடை:

உயிர்க் கோளத்தில் காணப்படும் இரு காரணிகள்.

1. உயிருள்ள காரணிகள்:

தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற உயிருள்ள உயிரினங்களை உள்ளடக்கியது.

2. உயிரற்ற காரணிகள் :

வெப்பம், அழுத்தம், நீர், மண் (நிலம்) காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

2. நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?

விடை:

புதை வடிவ எரிபொருள்களை எரிப்பதன் மூலமும். நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கின்றது.

விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை அடைகிறது.

இதனால் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

வாழிடங்கள் அழிகின்றன.

மேலும் உயிரினங்களின் பல்வகைத் தன்மையும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

 

3. தகவமைப்பு என்றால் என்ன?

விடை:

ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப் போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.

.கா. : பறவைகள் மற்றும் வௌவால்களின் இறக்கைகள்.

 

4. நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?

விடை:

i) தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்

ii) நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்

iii) நீரின் அளவு தொடர்ந்து மாறிக் கொண்டிருத்தல்

iv) நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்

 

5. நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?

விடை:

i) நீர் மாசுபடுதலைக் குறைக்கிறது.

ii) நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்த உதவுகிறது.

iii) நீரின் தட்டுப்பாடு குறைகிறது

iv) ஆற்றல் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகிறது.

 

6. உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக்கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.

விடை:

வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு :

i) குளிப்பான்களில் (showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.

ii) குறைவாக நீர் வரக் கூடிய குடிநீர்க் குழாய்களைப் (taps) பயன்படுத்துதல்.

iii) மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.

iv) குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்தல்.

v) முடிந்த வரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.

பள்ளிகளில் நீர் பாதுகாப்பு :

i) குடிநீர்க்குழாய்களை பயன்படுத்தாத நேரங்களில் மூடிவிடுதல்.

ii) குடிநீர்க்குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை உடனடியாக சரி செய்தல்.

iii) தேவையில்லாமல் கழிவறை கலத்தினுள் நீரை பாய்ச்சுதலை தவிர்த்தல்.

iv) நீரை சேமிக்கக்கூடிய சிறப்பான நவீன கைப்பிடிகளைக் கொண்ட குடி நீர்க் குழாய்களைப் பயன்படுத்துதல்.

 

7. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?

விடை:

1. விவசாயம் செய்தல்

2. இயற்கை அழகு மிக்க நிலங்களை உருவாக்குதல்

3. பொதுப் பூங்காக்கள் உருவாக்குதல்

4. குழிப்பந்தாட்ட விளையாட்டுத் திடல் உருவாக்குதல்.

5. கழிவறைகளைச் சுத்தம் செய்தல்

 6. தூசிகளைக் கட்டுப்படுத்துதல்

7. கட்டுமானச் செயல் மேற்கொள்ளுதல்.


8. .யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?

விடை:

.யூ.சி என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருகிறது.

• “இயற்கையை மதிக்கவும், பாதுகாக்கவும் கூடிய நேர்மையான உலகம்என்பதே இதன் நோக்கமாகும்.

.யூ.சி என் அமைப்பின் தொலை நோக்குப் பார்வைகள் :

i) இயற்கையிலுள்ள வேற்றுமை மற்றும் ஒற்றுமையை பாதுகாத்தல்

ii) எந்தவொரு இயற்கை வளத்தைப் பயன்படுத்தினாலும் அது நியாயமானதாகவும் சூழ்நிலையைப் பாதிக்காத வண்ணம் உள்ளதா என்பதை வலியுறுத்துதல்.

iii) மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்களின்சிவப்புப் பட்டியலைத்தயார் செய்து, தொகுத்து வெளியிடுதல்.

iv) இது உலக அளவில் உள்ள சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடப் பயன்படுதல்.

 

V. விரிவாக விடையளி

1. நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகளை விவரி.

விடை:

நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகள்:

1. நீராவியாதல்:

பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.

2. பதங்கமாதல்:

வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.

3. நீராவிப்போக்கு:

தாவரங்களின் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு செல்கிறது.

4. குளிர்வித்தல்:

உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாகக் காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகிறது,

இந்த நீர்த்திவலைகள் மேகங்களையும் பனிமூட்டங்களையும் உருவாக்குகின்றன.

5. மழைப்பொழிவு:

காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்று சேர்ந்து மழையாகப் பொழிகின்றன.

6. தரைமேல் வழிந்தோடும் நீர்:

பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது, இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள். ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி, கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.

 

2. வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி.

விடை:


1. எரிமலைச் செயல்கள், படிம எரிபொருள்களை எரித்தல் இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் மூலமும் CO2 வளிமண்டலத்தை வந்தடைகின்றன.

2. தாவரம் மற்றும் விலங்குகளின் சுவாசித்தலின் போது கார்பனை கார்பன்-டை-ஆக்ஸைடாக வெளியிட்டு வளிமண்டலம் சென்றடைகிறது.

3. வளி மண்டலத்திலுள்ள CO2 ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக 'மாற்றமடைகிறது.

4. இப் பொருள் தாவரங்களிலிருந்து தாவர உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்குக் கடத்தப்படுகின்றது.

5. அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

 

3. வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.

விடை:

வறண்ட நிலத் தாவரங்களின் தகவமைப்புகள் :

1. நன்கு வளர்ச்சி அடைந்தவேர்கள், ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன.

.கா. எருக்கலை.

2. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.

.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை.

3. மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும்.

.கா. கருவேல மரம்

4. சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன.

.கா. சப்பாத்திக் கள்ளி

5. ஒரு சில வறண்ட நில தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும் போதே, குறுகிய கால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.

 

4. வாழிடத்திற்கு ஏற்றாற்போல், வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?

விடை:

1. வாழிடம்:

வௌவால்கள் பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன.

குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்கிறது,

இவை மரங்களிலும், பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும். பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன.

2. ஒளி:

வௌவால்கள் இரவு நேரங்களில் அதிக செயல்திறன்மிக்கவைகளாக உள்ளன,

ஏனெனில், பகல் நேரங்களில் வௌவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது.

இதனால், அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.

3. வெப்பநிலை:

குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும்,

அவை ஓய்வு நேரத்தில் அவைகளின் உள் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன.

இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக்கொள்கிறது.

 

5. நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?

விடை:

மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன்தரக் கூடிய நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்துதல்,

கழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று படி நிலைகளை கொண்டது.

1. முதல் நிலை சுத்திகரிப்பு

2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு

3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

1. முதல் நிலை சுத்திகரிப்பு :

கழிவு நீரை தற்காலிகமாக தொட்டிகளில் சேர்த்து வைக்கப்படுவதால், கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய் உயவுப் பொருள்கள் போன்ற மிதக்கும் பொருள்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கி விடுகின்றன.

கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித் தனியே பிரித்தல்.

2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு:

உயிர்வழி வாயுவின் முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நீரில் கரைந்திருக்கும் மக்கும் கரிமப் பொருட்கள் (சிதைவுறும்) நீக்கப்படுகின்றன.

3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு:

நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதல்.

கழிவு நீரிலுள்ள நுண்ணிய கூழ்மத் துகள்களை வேதியியல் முறையில் படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து வீழ்படிவாக்கப்பட்டு சுத்திகரித்தல்.

 

IV. காரணம் தருக.

1. வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?

விடை:

வறண்ட நிலத் தாவரங்கள்.

காரணங்கள் :

1. வறண்ட நில தாவரங்கள் குறைந்த அளவு நீர் உடைய, வறண்ட அல்லது பாலைவனங்களில் வாழ்கின்றன.

2. இதனால் இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன.

3. இவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றன..கா.எருக்கலை.

 

2. நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?

விடை:

1. ஒழுங்கமைக்கப்பட்ட உடல் :

மண்ணின் அடியிலுள்ள குறுகிய வளைகளுக்குள் எளிதாக ஊடுருவிச் செல்ல உதவுகின்றன.

2. நீட்சிகள் அல்லது மயிர்க்கால்கள் :

மயிர்க்கால்கள் இடப்பெயர்ச்சிக்கும் மண்ணை , இறுகப் பிடித்து வளையின் உள்ளே செல்வதற்கும் உதவுகின்றன.

 

3. எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா?

விடை:

ஆம். நியாயமானது.

எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது வெளவாலின் சிறந்த தகவமைப்பாகும்.

வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல.

ஆனாலும் இரவு நேரங்களில் பறந்து தங்களை சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட மீயொலி அலைகள் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.

இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர்.

இந்த மீயொலி அலைகள் இரையின் மீது பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைவதால் இரையின் இடத்தினை கண்டறிய முடிகிறது.

இதன் மூலம் முன்னால் உள்ள பொருள்களின் அமைவிடத்தையும் கண்டறிய முடிகிறது.


பிற நூல்கள்

1. Shukla R.S and Chandel. P.S. A textbook of Plant Ecology including Ethnobotany and Soil Science.

2. Sharma P.D. Environment Biology and Toxicology. 13th edition , Rastogi Publications, Meerut. 

3. Verma, P.S and Agarwal. V.K. Environmental Biology, S.Chand and Company, New Delhi.

4. Kotpal R.L Zoology- Phylum - Annelida - Rastogi Publications, Meerut.

 

இணைய வளங்கள்

www.freedringkingwater.com

www.nature.com

www.sciencefocus.com

www.sciencelearn.org

www.IUCN.org

 

கருத்து வரைபடம்



இணையச்செயல்பாடு 

சூழ்நிலை அறிவியல்

மெய்நிகர் சோதனை மூலம் கார்பன் சுழற்சியை அறிக.

படி 1. கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி "The Carbon Cycle" பக்கத்திற்குச் செல்லவும்.

படி 2. "Run Decade" என்பதை அழுத்தி, ஒவ்வொரு பத்து ஆண்டிற்கும் குவிக்கப்படும் கார்பன் சுழற்சியை உற்று - நோக்குக.

 படி 3. "lesson" என்பதில் "Curb Emission" என்பதைத் தேர்வு செய்து, தூண்டல் அளவுருக்களைச் எளச்  சரி செய்து சுழற்சியின் விளைவை அறிக.

படி 4. "lesson" என்பதில் "Feedback Effects" என்பதைத் தேர்வு செய்து, சுழற்சியை இயக்கவும் கார்பன் குவிப்பின் விளைவையும் ஆராய்க.

உரலி: https://www.learner.org/courses/envsci/interactives/carbon/carbon.htmlor Scan the QR Code. B564_9_SCI_TN_T3


Tags : Environmental Science | Biology | Science சூழ்நிலை அறிவியல் | உயிரியல் | அறிவியல்.
9th Science : Biology : Environmental Science : Answer the following questions Environmental Science | Biology | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - சூழ்நிலை அறிவியல் | உயிரியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : உயிரியல் : அலகு 24 : சூழ்நிலை அறிவியல்