உயிரினப்பன்மை (Biodiversity)
உயிரினப்பன்மை என்ற சொல் 1968
ஆம்
ஆண்டில் வன உயிரின பாதுகாவலர் ரேய்மண்ட் எப் டாஸ்மன் என்பவரால்
அறிமுகப்படுத்தப்பட்டது. 1988 ல் இ.ஓ.வில்சன்
உயிரினப்பன்மை எனும் சொல்லை உபயோகப்படுத்தினார். அந்த சொல்லே நிலைத்து விட்டது.
உயிரினப்பன்மை என்பது புவியில் வாழும் பல்வகையான உயிரிகளைக் குறிக்கும். இது
பலவகையான தாவர, விலங்கு இனங்கள் மற்றும் நுண்ணுயிர் இனங்கள்
மற்றும் அவற்றிலுள்ள பன்முக மரபணுக்களையும் குறிக்கும். மேலும் இது நம் புவியில்
உள்ள வேறுபட்ட சூழ்நிலை அமைப்புகளையும் உள்ளடக்கியது. எடுத்துக் காட்டாக,
காடுகள்,
பாலைவனங்கள்,
பவளத்திட்டுகள்,
ஈரநிலங்கள்
போன்றவற்றைக் கூறலாம்.
உயிரினப் பன்மை என்பது
உயிரினங்களுக்கிடையே உள்ள வேறுபாடாகும். உயிரினப் பன்மை என்பது உயிரினங்களுக்கு
இடையில் அல்லது இருவேறு உயிரினங்களுக்கு இடையில் அல்லது உயிரிகளுக்கும்
சுற்றுச்சூழலுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு ஆகும். ஒரு இடத்திலுள்ள பலவகை
உயிரினப் பன்மைகள் அல்லது அங்குள்ள பேரினங்களின் எண்ணிக்கை அவ்விடத்தை உயிரிகளின்
வளமையம் (Hotspot)
ஆக்குகிறது.
ஒரு இடத்தின் பரப்பளவு அதிகரிக்க அதிகரிக்க அவ்விடத்தில் வாழும் உயிரினங்களின்
வகைகளும் அதிகரிக்கும்.
ஒரு
இடத்தின் உயிரினப்பன்மையை மூன்று நிலைகளாக நாம் அடையாளம் காணலாம்.
1. மரபணு பன்முக தன்மை (Genetic
diversity)
2. பன்முக சிற்றினங்கள் (Species
diversity)
3. பன்முக சூழல் மண்டலங்கள் (Ecosystem diversity)
அ. மரபணு பன்முக தன்மை : (Genetic
diversity)
மரபணுக்களால் ஆக்கப்பட்ட சிற்றினங்களில்
காணப்படும் மொத்த மரபணுக்களின் தொகுப்பே பல்வகை மரபணுக்கள் ஆகும்.
எடுத்துக்காட்டாக மனிதர்களை கூறலாம். ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனிலிருந்து
எல்லாவற்றிலும் வேறுபடுகிறான். இந்த பன்முக மரபணு அல்லது மரபணு வேறுபாடானது
உயிரிகளின் பெருக்கம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் அல்லது வேறுபட்ட சுற்று
சூழலுக்கு ஏற்ப வாழ தங்களை மாற்றி அமைத்துக்கொள்ள உதவுகிறது. நமது வீடுகளில்
வாழும் நாய் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஆ.
பன்முக சிற்றினங்கள் : (Species diversity)
ஒரு
இடத்தில் வாழும் வேறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் குறிக்கும். அதிக
அளவிலான விலங்கினங்கள் மற்றும் தாவர இனங்களைக் கொண்டிருக்கும் இடங்கள் வளமிகு
பன்முக மையங்களாக கொண்டாடப் படுகின்றன. மனிதர்களால் இடையூறு ஏற்படாத இயற்கையான
காடுகள் மனிதர்களால் அழிக்கப்பட்டு வருகின்ற காடுகளை விட அதிக அளவில் சிற்றின
பன்முகத்தின் செழுமையான மையமாகத் திகழ்கிறது. சிற்றினங்கள் மூன்று வகைப்படும்
1. வட்டார சிற்றினம் (Endemic
species)
இவைகள்
ஒரு குறிப்பிட்ட சூழலில் (தங்களின் பிறப்பிடத்தில்) மட்டும் வாழும் தன்மையுடையவை.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே காணப்படும். இவை வேறு இடத்தில் வாழ தங்களை
மாற்றிக் கொள்ள இயலாத காரணத்தால் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன. இவைகள் தங்களது
பிறப்பிடத்தில் மட்டும் காணக்கூடிய பூர்வீக உயிரிகளில் இருந்து மாறுபட்டவை. இவைகள்
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் பிற இடங்களிலும் பரவிக் காணப்படுகின்றன.
2. அன்னிய இனங்கள் : (Exotic
species)
இவ்வகை இனங்கள் தெரிந்தோ
அல்லது தெரியாமலோ அதன் இயற்கையான சுற்றுச்சூழலை விட்டு வேறு ஒரு சுற்றுச்சூழலுக்கு
கொண்டு வரப்பட்ட இனம் ஆகும். இவைகள் தான் சுற்றுச் சூழலில் காணப்படும் பல வித
மாற்றங்கள் ஏற்படுவதற்கும் மற்றும் சுற்றுச் சூழலின் அரியதன்மை அழிந்து போவதற்கும்
காரணமாகின்றன. மேலும் இவை உயிரியல் பன்மை உலகெங்கும் இழந்து போவதற்குக்
காரணமாகின்றன.
3.
உலகப் பொது இனம் (Cosmopolitan
species)
இவ்வகை
உயிரிகள் உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படும் இனமாகும். எடுத்துக்காட்டாக,
நாய்,
பூனை
மற்றும் மனிதன். உலகிலேயே கொல்லும் திமிங்கலம் தான் (Killer
Whale)
அதிக
உலக பொது இனத் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது.
இ. பன்முக சூழல் மண்டலங்கள்
(Ecosystem Diversity)
இது
ஒரு குறிப்பிட்ட சுற்றுச் சூழலில் காணப்படும் உயிரினப் பன்மைத் தன்மையைக்
குறிக்கும். சூழ்நிலை மண்டலம் நிலம் சார்ந்ததாகவும்,
நீர்
சார்ந்ததாகவும் இருக்கும். காடுகள், புல்வெளிகள்,
பாலைவனம்
முதலியன தனித்தன்மையுள்ள நிலம் சார்ந்த சூழ்நிலை மண்டலங்கள் ஆகும். ஆறு,
ஏரி,
குளம்
ஆகியவை நீர் சார்ந்த சூழ்நிலைமண்டலங்கள் ஆகும்.
உயிரினப் பன்மையை பற்றி நாம்
அறிந்து கொள்ளும் போது நமக்கு வரக்கூடிய ஒரு கேள்வி எத்தனை வகையான விலங்குகள்
மற்றும் தாவரங்கள் புவிக்கோளத்தில் காணப்படுகின்றன என்பதாகும். ஆனால் இந்த
கேள்விக்கு நமக்கு சரியான விடை தெரியாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஞ்ஞானிகளின்
கூற்றுப்படி 18.7 மில்லியன் உயிரினங்கள்
தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் நுண்ணுயிரிகளிலிருந்து மிகப் பெரிய
பாலூட்டிகள் மற்றும் ஊர்வன வரையிலான இரண்டு மில்லியன் உயிரினங்கள் மட்டுமே நாம்
அறிந்த ஒன்றாக உள்ளன. இன்னும் அறிந்து கொள்ள வேண்டிய உயிரினங்கள் பல. பல உயிரிகள்
அழிந்து கொண்டிருக்கும் அதே வேளையில் பல புதிய உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட்ட
வண்ணமே உள்ளன.
உயிரினப் பன்மை வள மையங்கள்
(Bio diversity Hotspots)
அதிக அளவு உயிரினங்கள்
காணப்படும் பகுதிகள் “வளமையங்கள்"
(Hotspots) என அழைக்கப்படுகின்றன. வெப்பமண்டல மழைக்காடுகள்
தான் அதிக பல்வகை உயிரிகளைக் கொண்ட செழுமையான "வளமையம்"
என்று
கூறலாம். வெப்ப மண்டலக் காடுகள் உலக நிலப்பரப்பில் 7%
மட்டுமே
உள்ளடக்கியது. ஆனால் 50% பல்வகை உயிரினங்களைத்
தன்னகத்தே கொண்டது. இந்தியா அபரிதமான பல்வகை உயிரினங்களைக் கொண்ட 17
நாடுகளில்
ஒன்றாகும். உயிரினப் பன்மை வள மையங்கள் (Hotspot)
என்கிற
வார்த்தையை ஆங்கிலேய உயிரியலாளர் நார்மன் மைர்ஸ் என்பவர் 1988
ஆம்
ஆண்டில் உருவாக்கினார். இவரின் கூற்றுப்படி உயிர்க்கோள வள மையம் என்பது
தனிச்சிறப்புக் கொண்ட பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் வாழிட இழப்பு இரண்டையும்
தன்னகத்தே கொண்ட உயிர்ப் புவிப்பரப்பியல் ஆகும். "சர்வதேச உயிர் பாதுகாப்பு
மையம்" (Conservation International) இந்த
விளக்கத்தை ஏற்றுக் கொண்டு 1999 - ஆம் ஆண்டில் உலகளாவிய
விரிவான ஆய்வை நடத்தியது. அந்த ஆய்வின்படி ஓர் மண்டலம் வளமையமாக கருதப்படுவதற்கு
இரண்டு கண்டிப்பான விதிகளைக் கூறியது உயிரினப் பன்மை வள மையங்கள் i).
குறைந்தது
1,500 தனிச்சிறப்பு கொண்ட சிற்றின தாவரங்களைக்
கொண்டிருக்கவேண்டும். ii). அவ்விடத்திற்கே உரிய வாழிட
இழப்பு 70% கொண்டதாக இருக்க வேண்டும். 1999
களில்
இந்த மையம் சர்வதேச உயிர் பாதுகாப்பு மையத்தின் (CI)
இன்
புத்தகம் "வளமையம்
உலகிலேயே அதிக வளம் கொண்ட உயிரியல் மற்றும் அழிந்து போகும் நிலையில் உள்ள சுற்றுச்
சூழல் நிலப்பரப்பு" 34 உயிர்க்கோள
வள மையங்களை அடையாளம் காண்பித்துள்ளது.
தற்சமயம்
34 உயிரின பன்மை வள மையங்கள் அடையாளம் காணப்
பட்டுள்ளன. அவைகளில் அதிகம் வெப்ப மண்டலக் காடுகளில் காணப்படுகின்றன (படம் 7.10).
புவியின்
நிலப்பரப்பில் 2.3% உயிரின பன்மை வளமையங்கள்
ஆகும். ஆனால் இவைகளில் 50% உலகிலுள்ள வட்டார இனங்கள்
மற்றும் 42% நில முதுகெலும்பிகள்
காணப்படுகின்றன.
இந்தியாவில்
4 வள மையங்கள் காணப்படுகின்றன. அவைகளாவன மேற்கு
தொடர்ச்சி மலை, ஹிமாச்சலப் பிரதேசம்,
இந்தோ
- பர்மா பிரதேசம் மற்றும் சுந்தர்லேண்ட் (நிக்கோபர் தீவுக் கூட்டமும் சேர்ந்தது).
தெரிந்து தெளிவோம்
நார்மன் மைர்ஸ் (பிறப்பு: 24
ஆகஸ்டு
1934) என்பவர் ஆங்கிலேய உயிரியலாளர். இவர் உயிரினப்
பன்மை வளமையங்களை ஆராய்வதில் வல்லுநர். பேராசிரியர் நார்மன் மைர்ஸ் தான் உலக
அளவில் வெப்ப மண்டல காடுகளின் அழிப்பு, உயிரிகளின்
மொத்த அழிவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குறித்து ஒரு விழிப்புணர்வைக்
கொண்டு வந்தவர்.
தகவல் குறிப்பு
வட்டார இனம் (Endemism)
என்பது
ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பு அதாவது குறிப்பிட்ட தீவு வாழிடம் அல்லது ஒரு நாடு
அல்லது ஒரு வட்டாரத்தில் மட்டுமே காணப்படக் கூடிய விலங்கு அல்லது தாவரத்தைக்
குறிப்பதாகும். எடுத்துக்காட்டாக, குஜராத்தில் உள்ள கிர்காடுகளில் மட்டும் வாழக்
கூடிய "ஆசிய
சிங்கம்", ஹங்குல் என்று அழைக்கப்படும் "காஷ்மீர்
கலைமான்" இவைகள் காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள
நதிக்காடுகள் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சம்பா பள்ளதாக்குகளில் மட்டுமே
காணப்படும். "சிங்கவால்
குரங்குகள்" (Lion Tailed Macaque) தான்
விரைவில் அழியக்கூடிய அதிகப்படியான அச்சுறுத்தலில் உள்ளது. இது தென் இந்தியாவின்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும்.
உங்களுக்குத் தெரியுமா?
"சர்வதேசஉயிர் பாதுகாப்பு
மையம்" (Conservation International):
இது
ஒரு நிதிசாரா அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பாகும். இது 1987
ஆம்
ஆண்டு வெர்ஜினாவில் ஆரம்பிக்கப்பட்டது. இதனுடைய நோக்கம் நமக்கு உணவு,
தூய
நீர், வாழ்வாதாரம் தரும் இயற்கையையும் மற்றும் ஒரு நிலையான
காலநிலையையும் பாதுகாப்பதாகும்.
இவ்வமைப்பு
77 நாடுகளில் உள்ள 1200
இடங்களை
பாதுகாக்க உதவி செய்கிறது. இதன் மூலம் 601 மில்லியன்
ஹெக்டேர் பரப்பிலான கடல் சார்ந்த மற்றும் கடலோர இடங்களைப் பாதுகாக்கப்படுகிறது.