நல்ல குடிமகன் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 1 Unit 3 : Good Citizen
மதிப்பீடு
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1 மனிதன் ஒரு சமூக விலங்கு
2 குடிமை என்ற சொல் ஒரு நாட்டின். குடிமக்கள் பற்றியதாகும்.
3 ஒரு நபரை மதிப்புமிக்க மனிதராக மாற்றுவதே கல்வியின் முக்கிய
குறிக்கோள் ஆகும்.
4 மனிதராக மதிப்புமிக்க என்பது ஒவ்வொரு தனிநபருக்குமான அடிப்படை மதிப்பு ஆகும்.
5 தன் பணியில் கடமை தவறாமல் இருக்க வேண்டும்.
II. பொருத்துக
1 தனிப்பட்ட நெறிமுறை - ஒற்றுமை
2 பண்பாட்டு நெறிமுறை
- பாதிக்கும் காரணி
3 நடத்தை சார்ந்த நெறிமுறை - சகிப்புத்தன்மை
4 சமூக நெறிமுறை - நேரந்தவறாமை
5. வேலையின்மை – நேர்மை
III. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1 குடிமகன்
என்ற சொல்லை வரையது.
• ஒரு குடிமகன் என்பவன், ஒரு
குறிப்பிட்ட நாட்டில் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து தமது கடமைகளை
நிறைவேற்றுபவராவார்.
• தேசத்தில் வாழ, வாக்களிக்க,
வேலை செய்ய உரிமை உண்டு.
2. ஐந்து
தனிப்பட்ட ஒழுக்க நெறிகளைக் குறிப்பிடுக.
• தனிப்பட்ட நெறிமுறைகள்.
• பண்பாட்டு நெறிமுறைகள்.
• சமுக நெறிமுறைகள்.
• நற்பண்பு (விழுமம்) நெறிமுறைகள்.
• அரசியலமைப்பு நெறிமுறைகள்.
3. பண்பாட்டு
நெறிமுறை பற்றி சிறுகுறிப்பு வரைக,
4. சமூக
நெறிமுறைகள் என்றால் என்ன?
• மக்களுடன் நல்லுறவை எப்போதும்
பெறுவது.
• பெரியோர்களை மதிப்பது.
• இயற்கையை மதித்து நடப்பது.
• சகிப்புத் தன்மையுடன் இருப்பது.
• நட்பை பேணி வளர்ப்பது.
5. நடத்தை
சார்ந்த நெறிமுறைகள் என்றால் என்ன?
நற்பண்பு நெறிமுறைகள் என்பன
:
• எழுத்தறிவு
• விழிப்புணர்வு மற்றும் நலன்களை
உருவாக்குதல்
• வெற்றிபெறும்வரை கடினமாக முயற்சி
செய்தல்
• தன் தனித் தன்மையை அறிதல்
• ஏற்றுக்கொள்ளுதல்
• தன்னம்பிக்கை போன்றவைகளாகும்.
V. விரிவான விடையளிக்க.
1. அரசியலமைப்பு
நெறிமுறைகள் பற்றி எழுதுக
அரசியலமைப்பு நெறிமுறைகள் :
• பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.
• தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும்
பேணிக் காத்தல்.
• விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக்
கொள்ளுதல்.
• இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.
• சுற்றுச் சூழலைப் பராமரித்தல்.
• தேசிய சின்னங்களை கௌரவித்தல்.
•தியாகிகளுக்கும் அவர்களின்
தியாகங்களுக்கும் மதிப்பளித்தல்.
• நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக்
காத்தல்.
• நாட்டுப்பற்றை வளர்த்துக்கொள்ளுதல்
போன்றவைகளாகும்.
2. நற்பண்புகளை
வளப்படுத்தக்கூடிய ஐந்து காரணிகளை எழுதுக
• அன்பு, பொருந்தன்மை, கருணை முதலியன.
• கலாச்சார நெறிமுறைகள், சமூகப்
பண்பாடு மற்றும் பல்வேறு கலாச்சார அம்சங்கள்.
• நன்னடத்தையைக் கடைபிடிப்பது.
• சமத்துவத்தைப் பாதுகாத்தல்.
• நேர்மையைக் கடைபிடித்தல்.