வளிமண்டலம் | பருவம் 1 அலகு 4 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 1 Unit 4 : Atmosphere
மதிப்பீடு
I . சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
1 வளிமண்டலம்
--------------------- அடுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
(அ) நான்கு
ஆ) ஐந்து
இ) ஆறு
ஈ எழு
விடை: ஆ) ஐந்து
2. பூமி
---------------- இருந்து வெப்பம் ஆற்றல் பெறுகிறது.
அ) நிலா
ஆ) செவ்வாய்
இ) சூரியன்
ஈ) வெள்ளி,
விடை: இ) சூரியன்
3. உலக
வானிலை தினம்,
அ) மார்ச்-20
ஆ) மார்ச்-21
இ) மார்ச்-22
ஈ) மார்ச்-23
விடை: ஈ) மார்ச்-23
4. வானிலை பற்றிய படிப்பு. ---------------------- ஆகும்.
அ) வானிலையியல்
ஆ) சுற்றுச்சூழலியல்
இ) தொல்லியல்
ஈ) சமூகவியல்
5. கடகரேகைக்கும், மகரரேகைக்கும். இடையே அமைந்துள்ள மண்டலம்
------------------ மண்டலம் ஆகும்.
(அ) மிதவெப்ப
ஆ) துணை வெப்ப
இ) குளிர்
ஈ) வெப்ப மண்டலம்
விடை: ஈ) வெப்ப மண்டலம்
6.
------------------------ காற்றின் அழுத்தத்தை அளவிட பயன்படுகிறது.
அ) பாரமானி
ஆ) வெப்பமானி
இ) காற்றுமானி-
ஈ) காற்று திசைக்காட்டி
விடை: அ) பாரமானி
7. பருவக்காலம்
என்பது சொல்லிலிருந்து பெறப்பட்டது.
அ) கிரேக்கம்
ஆ) அரேபியன்
இ) ஆங்கிலம்.
ஈ) லத்தீன்
விடை: ஆ) அரேபியன்
8. செங்குத்து
மேகம், ------------------- என்று அழைக்கப்படுகிறது,
அ) கீற்று மேகம்
ஆ) படைமேகம்
இ) திரள் மேகம்
ஈ) கார்மேகம்
விடை: ஈ) கார்மேகம்
9.
---------------------- மேகம் வெப்பச்சலன மழைப்பொழிவைத் தருகிறது.
அ) கீற்று
ஆ) படை
இ) திரள்
ஈ) கார்
விடை : ஈ) திரள்
10. கூற்று
I -காற்றின் திசையை அளவிட பயன்படும் கருவி காற்று திசைக்காட்டி,
கூற்று
II -ஒளியானது ஒலியை விட வேகமாகச் செல்கிறது.
அ) கூற்று I மட்டும் சரி
ஆ) கூற்று I மட்டும் II சரி
இ) கூற்று I சரி II தவறு
ஈ) இரண்டும் சரி
விடை: ஈ) இரண்டும் சரி
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1 வெப்பத்தை அளவிட உதவும்
கருவி. வெப்பமானி
2. புவியின் மேற்பரப்பிற்கு இணையாக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள்
-- அட்சக்கோடுகள் ஆகும்
3 கடல் காற்று மாலைப்பொழுதில்,, கடல் நிலம் நோக்கி வீசுகிறது.
4. கார்மேகம் மழை மேகம் என அழைக்கப்படுகிறது.
III. பொருத்துக.
1 கீற்று மேகம் - சாம்பல் நிற விரிப்பு
2 படைமேகம் - புயல் மேகம்
3 திறள் மேகம் - மழை கொடுக்காது
4 கார்மேகம் - வெண்பஞ்சு போல் காட்சியளிக்கும்
விடை :
1 கீற்று மேகம் - மழை கொடுக்காது
2 படைமேகம் - சாம்பல் நிற விரிப்பு
3 திறள் மேகம் - வெண்பஞ்சு போல் காட்சியளிக்கும்
4 கார்மேகம் - புயல் மேகம்
IV. சரியா /தவறா எழுதுக.
1 அனைத்து வானிலை மாற்றங்களும் ட்ரோப்போஸ்பியர் பகுதியில் நிகழ்கின்றன.
( )
2. அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை ஒரு நாட்டின்
அமைவிடத்தை மிகத் துல்லியமாக கண்டறிய உதவுகின்றன. (விடை: சரி)
3. வளிமண்டலமானது கடத்தல் முறையைவிட கதிர்வீச்சு முறையினால்
அதிக வெப்பமடைகிறது. (விடை: சரி)
4. காற்றின் திசை மாற்றத்திற்கு முக்கிய காரணம் பூமியின் சுழற்சியே
ஆகும். (விடை:
சரி)
5 கடிகார திசைக்கு எதிர் திசையில் சூறாவளி நகர்கிறது. (விடை: சரி)
V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1 காலநிலை
என்றால் என்ன?
வானிலை என்பது மித வெப்பநிலை,
ஈரப்பதம், மேகமூட்டம், அழுத்தம் ஆகியவற்றின் குறுகிய கால நிலையாகும்.
2 வளிமண்டல
அடுக்குகளைக் குறிப்பிடுக.
• ட்ரோபோஸ்பியர் .
• ஸ்ட்ராடோஸ்பியர்
• மீஸோஸ்பியர்
• தெர்மோஸ்பியர் மற்றும்
• எக்சோஸ்பியர்.
3 கார்மேகங்கள்
பற்றி சிறுகுறிப்பு வரைக.
• கார்மேகம் சாம்பல் நிறத்தில்
இருக்கும்.
• இது பலத்த மழை தருகிறது.
• இது செங்குத்து மேகங்கள் மற்றும்
புயல் அல்லது மழை மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
4. மலைத்தடை
மழைப் பற்றி சிறுகுறிப்பு வரைக்
காற்று மோதும் பகுதி
காற்று மோதாத பகுதி மழை மறைவுப்பகுதி
• பருவக்காற்று மலைச்சரிவின்
ஒரு பக்கத்தில் மோதும் போது மேலே எழும்புகிறது.
• இதன் காரணமாக காற்று குளிர்ந்து
அதிக மழைப் பொழிவைக் கொடுக்கிறது.
• இது மழைத்தடை மழை எனப்படுகிறது.
• மலையின் மறுபக்கம் மழை மறைவுப்
பகுதியாகும்.
VI. விரிவான விடையளிக்க.
1 ஜெட்
காற்றோட்டம் பற்றி எழுதுக,
• வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில்
காணப்படும் காற்றோட்டத்தினை ஜெட் காற்றோட்டம் என அழைக்கிறோம்.
• இந்தக் காற்றே இந்தியாவின்
பருவக் காற்றின் தொடக்கக் காலத்தையும், அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிக்கிறது.
குறிப்பாக குளிர்காலத்தையும், வெப்ப காலத்தையும் நிர்ணயிக்கிறது.
2 காற்றின்
வகைகளை விளக்குக,
கோள் காற்று :
பூமியின் சுழற்சிக்கு ஏற்ப ஆண்டு
முழுவதும் ஒரே திசையில் வீசும் காற்றாகும்.
பருவக்காற்றுகள் :
தென்மேற்குப் பருவக்காற்று
இது தென்மேற்குத் திசையில் வீசும்
காற்றாகும்.
வடகிழக்குப் பருவக்காற்று
இது வடகிழக்குத் திசையில் வீசும்
காற்று ஆகும்.
கடல் காற்று
இது மாலையில் கடலிலிருந்து நிலத்தை
நோக்கி வீசும் காற்று ஆகும்.
நிலக்காற்று
இது காலைப் பொழுதில் நிலத்திலிருந்து
கடலை நோக்கி வீசும் காற்று ஆகும்.
"லூ” காற்று
இந்தியாவின் வடமேற்கில் வீசும்
வறண்ட புழுதி படிந்த காற்று ஆகும்.
ஜெட் காற்றோட்டம்
இது வெப்ப மண்டலத்தில் உயர்
அடுக்குகளில் காணப்படும் காற்று ஆகும்.
சூறாவளி காற்று
தனது நிலையையும் திசையையும்
மாற்றி வீசும் காற்று சூறாவளி காற்று ஆகும்.
3.'வானிலைத் தொழிற்சாலை' பற்றி எழுதுக.
• நேர் மற்றும் எதிர் (+, )
மின்னூட்டங்கள் ஒன்றையொன்று தாக்கும் போது, மின்னல், இடி ஆகியவை உற்பத்தியாகின்றன.
• ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்கிறது.
• எனவே இடி மின்னலைத் தொடர்ந்து
பெரும் சத்தமாக ஒலிக்கிறது.
• இவ்வாறு வானின் அனைத்து பண்புகளும்
ஒன்றாக ஒரே நேரத்தில் செயல்படும் போது, அது வானிலை தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிறது.
செயல்பாடு
செயல்திட்டம்
வெப்பமண்டலங்களின்
படத்தை வரைக.
எந்த அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையில் உங்கள் பள்ளி அமைந்துள்ளது?
அட்சரேகை : ___________
தீர்க்கரேகை : ___________