வேளாண்மை | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 3 Unit 2 : Agriculture

   Posted On :  01.09.2023 11:15 pm

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 2 : வேளாண்மை

வினா விடை

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 2 : வேளாண்மை : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

 

1) ------------ என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.

அ) நீர்ப்பாசனம்

ஆ) வேளாண்மை

இ) அகழ்வாராய்ச்சி

விடை: ஆ) வேளாண்மை

 

2) ---------------- என்பவர் உணவு அல்லது மூலப்பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும் வளர்க்கிறார்.

அ) மருத்துவர்

ஆ) ஆசிரியர்

இ) விவசாயி

விடை: இ) விவசாயி

 

3. -------------- வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.

அ) வணிக

ஆ) கலப்புப் பொருளாதார

இ) தன்னிறைவு

விடை: ஆ) கலப்புப் பொருளாதார

 

4) -------------- நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.

அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம்

ஆ) மெட்ரோ நீர் வாரியம்

இ) யூனியன் குடிநீர் வாரியம்

விடை: அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம்

 

5) தமிழகத்தில் உள்ள ------------. மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.

அ) கோயம்புத்தூர்

ஆ) சென்னை

இ) கடலூர்

விடை: அ) கோயம்புத்தூர்

 

III. பொருத்துக

1 தோட்ட வேளாண்மை - விலங்குகளை வளர்ப்பது

2 கலப்புப் பொருளாதார வேளாண்மை - பழைமையான முறை

3 வணிக வேளாண்மை - ஒற்றைப் பண பயிர்

4 கிணற்று நீர்ப்பாசனம் - குடும்ப நுகர்வு

5 தன்னிறைவு வேளாண்மை - விற்பனை நோக்கம்

 

விடை :

1 தோட்ட வேளாண்மை - ஒற்றைப் பண பயிர்

2 கலப்புப் பொருளாதார வேளாண்மை - விலங்குகளை வளர்ப்பது

3 வணிக வேளாண்மை - விற்பனை நோக்கம்

4 கிணற்று நீர்ப்பாசனம் - பழைமையான முறை

5 தன்னிறைவு வேளாண்மை - குடும்ப நுகர்வு

 

 

III. சரியா தவறா?

 

1) தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும். (விடை: சரி)

2) தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன. (விடை : தவறு)

3) சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும். (விடை: சரி)

4) தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும். விடை : தவறு)

5) மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும். (விடை: சரி)

 

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.


1. வேளாண்மை என்றால் என்ன?

வேளாண்மை என்பது சாகுபடிக்கு மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய கலை மற்றும் அறிவியல் ஆகும்.

 

2. விவசாயிகளைப் பற்றி எழுதுக.

• விவசாயி என்பவர், உணவு அல்லது மூலப் பொருட்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார்.

• இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெழும்பு ஆவார்.

 

3. வேளாண்மையின் வகைகளைக் கூறுக.

• தன்னிறைவு வேளாண்மை.

• வணிக வேளாண்மை.

• தோட்ட வேளாண்மை. 

• கலப்புப் பொருளாதார வேளாண்மை.

 

4. கிணற்று நீர்ப்பாசனம் என்றால் என்ன?

• கிண்ற்றில் கிடைக்கும் ஊற்றுநீர் மூலம் விவசாயம் செய்வதையே கிணற்றுநீர் பாசனம் என்கிறோம்.

• இது பழமையான முறையாகும்.    

 

5. மத்திய நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்கானித்து வருகிறது.

 

V விரிவான விடையளிக்க.

 

1. கலப்புப் பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.

• கலப்புப் பொருளாதார வேளாண்மை என்பது பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமில்லாமல் விலங்குகளையும் வளர்ப்பதாகும்.

• இதில் விவசாயிகள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வாய்ப்பு உள்ளது.

• தோட்ட வேளாண்மை என்பது ஒரு பண்ணையில் ஒற்றைப் பணப் பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவதாகும். • எ.கா: தேயிலை, காபி, இரப்பர்.

 

2. ஏதேனும் இரண்டு வகையான நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விவரி.

கால்வாய் நீர்ப்பாசனம்:

• இந்தியாவில் உள்ள சில வற்றாத கால்வாய்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பாசனம் கால்வாய் பாசனமாகும். 

•உத்திரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பீஹார் போன்ற பகுதிகளில் கால்வாய் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.

சொட்டு நீர் பாசனம்:

• சொட்டு நீர்ப்பாசனம் என்பது தாவரங்களின் வேர்களில், நீர் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்படுவதாகும். இது நுண் பாசன முறையாகும்.

• இதனால் நீர் ஆவியாதல் குறைகிறது.

 

3. தமிழகத்தின் முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.

• நெல் தமிழகத்தின் அதிகமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில் அரிசி முக்கிய உணவுப் பொருளாகும்.

• அரிசி, மக்காச்சோளம். கம்பு, சோளம். கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.

• பணப் பயிர்களான பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள், காபி, இரப்பர், தேயிலை, தேங்காய் எள் மற்றும் மிளகாய் போன்றவை பயிரிடப்படுகின்றன.

• மல்லிகை, செவ்வந்திப்பூ, சாமந்திப்பூ மற்றும் ரோஜா போன்ற மலர்களும் பயிரிடப்படுகின்றன.

 

செயல்பாடு

செயல் திட்டம்


• அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் போன்ற சில தானியங்களைச் சேகரிக்க.

• அவற்றைச் சிறிய பொட்டலங்களில் இடுக.

• ஓர் அட்டவணையில் அனைத்து பொட்டலங்களையும் பொருத்துக.

Tags : Agriculture | Term 3 Chapter 2 | 5th Social Science வேளாண்மை | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
5th Social Science : Term 3 Unit 2 : Agriculture : Questions with Answers Agriculture | Term 3 Chapter 2 | 5th Social Science in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 2 : வேளாண்மை : வினா விடை - வேளாண்மை | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 2 : வேளாண்மை