வேளாண்மை | பருவம் 3 அலகு 2 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 3 Unit 2 : Agriculture
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1)
------------ என்பது உணவு உற்பத்திக்காக தாவரங்களை வளர்ப்பதாகும்.
அ) நீர்ப்பாசனம்
ஆ) வேளாண்மை
இ) அகழ்வாராய்ச்சி
விடை: ஆ) வேளாண்மை
2)
---------------- என்பவர் உணவு அல்லது மூலப்பொருள்களுக்காக தாவரங்களையும், விலங்குகளையும்
வளர்க்கிறார்.
அ) மருத்துவர்
ஆ) ஆசிரியர்
இ) விவசாயி
விடை: இ) விவசாயி
3.
-------------- வேளாண்மை என்பது பயிர்களுடன் விலங்குகளை வளர்ப்பதையும் குறிக்கிறது.
அ) வணிக
ஆ) கலப்புப் பொருளாதார
இ) தன்னிறைவு
விடை: ஆ) கலப்புப் பொருளாதார
4)
-------------- நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைக் கண்காணிக்கிறது.
அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம்
ஆ) மெட்ரோ நீர் வாரியம்
இ) யூனியன் குடிநீர் வாரியம்
விடை: அ) மத்திய நிலத்தடி நீர் வாரியம்
5) தமிழகத்தில்
உள்ள ------------. மாவட்டத்தில் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
அ) கோயம்புத்தூர்
ஆ) சென்னை
இ) கடலூர்
விடை: அ) கோயம்புத்தூர்
III. பொருத்துக
1 தோட்ட வேளாண்மை - விலங்குகளை வளர்ப்பது
2 கலப்புப் பொருளாதார வேளாண்மை - பழைமையான முறை
3 வணிக வேளாண்மை - ஒற்றைப் பண பயிர்
4 கிணற்று நீர்ப்பாசனம் - குடும்ப நுகர்வு
5 தன்னிறைவு வேளாண்மை - விற்பனை நோக்கம்
விடை :
1 தோட்ட வேளாண்மை - ஒற்றைப் பண பயிர்
2 கலப்புப் பொருளாதார வேளாண்மை - விலங்குகளை வளர்ப்பது
3 வணிக வேளாண்மை - விற்பனை நோக்கம்
4 கிணற்று நீர்ப்பாசனம் - பழைமையான முறை
5 தன்னிறைவு வேளாண்மை - குடும்ப நுகர்வு
III. சரியா தவறா?
1) தமிழ்நாட்டின் முதன்மையான பயிர் நெல் ஆகும். (விடை: சரி)
2) தமிழ்நாட்டில் இரண்டு மண் வகைகள் உள்ளன.
(விடை : தவறு)
3) சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு வகை நுண் பாசன முறையாகும்.
(விடை: சரி)
4) தோட்டப் பயிருக்குப் பலாப்பழம் ஓர் எடுத்துக்காட்டாகும். விடை : தவறு)
5) மாம்பழம் தமிழ்நாட்டின் முன்னணி பழப் பயிர் ஆகும். (விடை: சரி)
IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.
1. வேளாண்மை
என்றால் என்ன?
வேளாண்மை என்பது சாகுபடிக்கு
மண்ணை உழுதல், பயிர்களை வளர்த்தல் மற்றும் கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைப் பற்றிய
கலை மற்றும் அறிவியல் ஆகும்.
2. விவசாயிகளைப்
பற்றி எழுதுக.
• விவசாயி என்பவர், உணவு அல்லது
மூலப் பொருட்களுக்காகத் தாவரங்களையும், விலங்குகளையும் வளர்ப்பவர் ஆவார்.
• இந்தியப் பொருளாதாரத்தின்
முதுகெழும்பு ஆவார்.
3. வேளாண்மையின்
வகைகளைக் கூறுக.
• தன்னிறைவு வேளாண்மை.
• வணிக வேளாண்மை.
• தோட்ட வேளாண்மை.
• கலப்புப் பொருளாதார வேளாண்மை.
4. கிணற்று
நீர்ப்பாசனம் என்றால் என்ன?
• கிண்ற்றில் கிடைக்கும் ஊற்றுநீர்
மூலம் விவசாயம் செய்வதையே கிணற்றுநீர் பாசனம் என்கிறோம்.
• இது பழமையான முறையாகும்.
5. மத்திய
நிலத்தடி நீர் வாரியம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.
மத்திய நிலத்தடி நீர் வாரியம்,
நிலத்தடி நீரின் நிலை மற்றும் தன்மையைத் தொடர்ந்து கண்கானித்து வருகிறது.
V விரிவான விடையளிக்க.
1. கலப்புப்
பொருளாதாரம் மற்றும் தோட்ட வேளாண்மை பற்றி எழுதுக.
• கலப்புப் பொருளாதார வேளாண்மை
என்பது பயிர்களைப் பயிரிடுவதோடு மட்டுமில்லாமல் விலங்குகளையும் வளர்ப்பதாகும்.
• இதில் விவசாயிகள் பொருளாதாரத்தில்
மேம்பாடு அடைய வாய்ப்பு உள்ளது.
• தோட்ட வேளாண்மை என்பது ஒரு பண்ணையில் ஒற்றைப்
பணப் பயிர் விற்பனைக்காக வளர்க்கப்படுவதாகும். • எ.கா: தேயிலை, காபி, இரப்பர்.
2. ஏதேனும்
இரண்டு வகையான நீர்ப்பாசன முறைகளைப் பற்றி விவரி.
கால்வாய் நீர்ப்பாசனம்:
• இந்தியாவில் உள்ள சில வற்றாத
கால்வாய்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பாசனம் கால்வாய் பாசனமாகும்.
•உத்திரப்பிரதேசம், பஞ்சாப்,
ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் பீஹார் போன்ற பகுதிகளில் கால்வாய் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.
சொட்டு நீர் பாசனம்:
• சொட்டு நீர்ப்பாசனம் என்பது
தாவரங்களின் வேர்களில், நீர் மெதுவாகச் சொட்டுமாறு அமைக்கப்படுவதாகும். இது நுண் பாசன
முறையாகும்.
• இதனால் நீர் ஆவியாதல் குறைகிறது.
3. தமிழகத்தின்
முக்கிய பயிர்களைப் பற்றி விவரி.
• நெல் தமிழகத்தின் அதிகமான
பகுதிகளில் பயிரிடப்படுகிறது. ஏனெனில் அரிசி முக்கிய உணவுப் பொருளாகும்.
• அரிசி, மக்காச்சோளம். கம்பு,
சோளம். கேழ்வரகு மற்றும் பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.
• பணப் பயிர்களான பருத்தி, கரும்பு,
எண்ணெய் வித்துக்கள், காபி, இரப்பர், தேயிலை, தேங்காய் எள் மற்றும் மிளகாய் போன்றவை
பயிரிடப்படுகின்றன.
• மல்லிகை, செவ்வந்திப்பூ, சாமந்திப்பூ
மற்றும் ரோஜா போன்ற மலர்களும் பயிரிடப்படுகின்றன.
செயல்பாடு
செயல் திட்டம்
• அரிசி, மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் பருப்பு
வகைகள் போன்ற சில தானியங்களைச் சேகரிக்க.
• அவற்றைச் சிறிய பொட்டலங்களில் இடுக.
• ஓர் அட்டவணையில் அனைத்து பொட்டலங்களையும் பொருத்துக.