விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | உயிரியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Biology : Organ Systems in Animals
V. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக
விடை:
அ) கழிவு நீக்கம் மற்றும் சுரத்தல்:
• கழிவு நீக்கம்
உயிர் வாழும் செல்களில் வளர்ச்சிதை மாற்ற விளை பொருட்களின் கழிவுகளை உடலிலிருந்து நீக்கப்படுதல்
• சுரத்தல்
உடலில் உள்ள சில செல்கள், சுரப்பிகள், உறுப்புகள் நொதிகளை சுரத்தல். எ.கா. உமிழ் நீர்ச்சுரப்பி
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
• உறிஞ்சுதல்
செரிமானத்திற்குப் பின்னர் ஊட்டச் சத்துக்கள் குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு, இரத்தம் மற்றும் நிணநீரில் கலத்தல்.
• தன்மயமாதல்
உறிஞ்சப்பட்ட உணவுப் பொருட்கள் திசுக்களோடு கலத்தல்.
இ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்:
• உட்கொள்ளுதல்
நமது உடலில் உணவானது உட்புகுவதிலிருந்து செரிமானத்தின் செயல்பாடுகள் துவங்குதல்.
• வெளியேற்றுதல்
செரிக்காத மற்றும் தன்மயமாகாத உணவுப் பொருள். உடலிலிருந்து வெளியேற்றப்படுதல்.
ஈ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்புப் பல்வரிசை :
• இரட்டைப் பல்வரிசை
மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு தொகுப்பாக உருவாகின்றன.
• கலப்புப் பல்வரிசை
32 நிரந்தர பற்கள் அமைப்பு மற்றும் பணிகளின் அடிப்படையில் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
உ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்:
• வெட்டுப் பற்கள்
1. இவை உணவை வெட்டவும், கடிக்கவும் பயன்படுகின்றன.
2. இவை மனிதனில் 8 என்ற எண்ணிக்கையில் உள்ளன
3. தாவர உண்ணிகளில் வெட்டுப் பற்கள் நன்றாக வளர்ச்சி பெற்றும் உள்ளன.
• கோரைப் பற்கள்
1. இவை கிழிக்கவும் துளையிடவும் பயன்படுகின்றன.
2. இவை 4 என்ற எண்ணிக்கையில். உள்ளன.
3. மாமிச உண்ணிகளில் இவை நன்றாக வளர்ச்சி பெற்றும் உள்ளன.
VI. சுருக்கமாக விடையளி
1.
செரிக்கப்பட்ட
உணவை
உட்கிரகிக்க
எவ்வாறு
சிறுகுடலானது
அமைக்கப்பட்டுள்ளது?
விடை:
1. பின்சிறுகுடலில் மிகச்சிறிய விரல் போன்ற குடல் உறிஞ்சிகள் உள்ளன. 2. இவை ஒவ்வொன்றும் 1மி.மீ. நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும்.
3. இவற்றில் தான் உணவு உறிஞ்சப்படுகிறது.
4. இதன் உட்பகுதியில் மெல்லிய இரத்தக் குழாய்களும் நிணநீர் கொண்ட குடற்பால் குழல்களும் உள்ளன.
2.
நமக்கு
ஏன்
வியர்க்கிறது?
விடை:
1. மனித உடல் இயங்க 37°C வெப்பநிலை தேவை.
2. வெப்பம் அதிகரிக்கும் பொழுது வியர்வைச் சுரப்பிகள் வியர்வையை சுரக்கிறது. இதனால் நமக்கு வியர்க்கிறது.
3.
மனித
சிறுநீரகத்தின்
ஏதேனும்
இரண்டு
முக்கிய
பணிகளைக்
குறிப்பிடுக.
விடை:
1. மனித உடலில் நீரையும், மின்பகு பொருட்களையும் சமநிலைப்படுத்த உதவுகிறது.
2. இரத்தத்தில் அமில-கார சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
4.
சிறுநீர்
கழிக்க
வேண்டும்
என்ற
தூண்டுதல்
எவ்வாறு
நடைபெறுகிறது?
விடை:
1. சிறுநீர்ப்பை சுருக்குத் தசை சுருங்கி மூடிக்கொள்ளும்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் கட்டுப்படுத்தப்படுகிறது.
2. சுருக்குத் தசை சுருங்கி விரியும்போது சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.
5.
முதிர்ச்சியடைந்த
மனிதனில்
காணப்படும்
பற்களின்
பெயர்களை
எழுதி
அவற்றின்
பணிகளைக்
குறிப்பிடுக.
விடை:
பற்களின் பெயர்கள் - பற்களின் பணிகள்
1. வெட்டுப் பற்கள் - வெட்டவும், கடிக்கவும்
2. கோரைப் பற்கள் - கிழிக்கவும், துளையிடவும்
3. முன்கடைவாய்ப் பற்கள் - நசுக்கவும், அரைக்கவும்
4. பின்கடைவாய்ப் பற்கள் - நசுக்கவும், அரைக்கவும், மெல்லவும்
6.
நெஃப்ரானின்
அமைப்பினை
விளக்குக.
விடை:
1. ஒவ்வொரு நெஃப்ரானிலும் சிறுநீரக கார்ப்பசல் அல்லது மால்பீஜியன் உறுப்பு மற்றும் சிறுநீரக நுண்குழல்கள் ஆகிய இரு பகுதிகள் உள்ளன.
2. சிறுநீரக கார்ப்பசலில் கிண்ண வடிவில் பௌமானின் கிண்ணம் அமைந்துள்ளது.
3. இரத்தமானது நுண் நாளத் தொகுப்பினுள் உட்செல் நுண் தமனி வழியாக உட்சென்று, வெளிச் செல் நுண் தமனி வழியாக வெளியேறுகிறது.
4. பௌமானின் கிண்ணம் சிறுநீரக நுண்குழலாக தொடர்கிறது. இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
5. இச்சுருள் நுண் குழல் சேகரிப்பு நாளத்தில் திறக்கிறது.
VII. விரிவாக விடையளி
1.
மனிதனின்
உணவுப்
பாதையை
விவரி.
விடை:
1. வாய்:
• வாய் உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும்.
• இது வாய்க்குழிக்குள் திறக்கிறது.
• இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப் பட்டுள்ளது.
உமிழ் நீர் சுரப்பிகள்:
• வாய்க் குழிக்குள் மேலண்ணச் சுரப்பிகள், நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி என்ற இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன.
• இவை உமிழ்நீரை சுரக்கின்றன.
நாக்கு:
• நாக்கு ஒரு தசையாலான உணர்ச்சி உறுப்பு ஆகும்.
• இது உமிழ் நீருடன் உணவை கலக்க உதவுகிறது.
2. தொண்டை :
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும்.
3. உணவுக்குழல்:
• இது 22செ.மீ நீளமுடைய தசைப்படலக்குழலாகும்.
• இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் அலை போன்ற இயக்கம் மூலமாக கடத்துகிறது.
4. இரைப்பை :
• இது உணவுக்குழலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே 'J' போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும்.
• இரைப்பையின் உள் அடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது.
5. சிறுகுடல்:
• இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான 5-7 மீ நீளமுள்ள சுருண்ட குழலாகும். மூன்று பகுதிகளை உடையது.
• டியோடினம் என்பது சிறுகுடலின் மேல் பகுதியாகும். 'C' வடிவத்தில் காணப்படுகிறது.
• பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து டியோடினத்தில் திறக்கின்றது.
• நடு சிறுகுடல் (அ) ஜூஜிணம் சிறுகுடலின் சிறிய நடுப்பகுதி ஆகும்.
• பின்சிறுகுடல் (அ) இலியம் சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இது பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்.
6. கல்லீரல்:
• உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி ஆகும்.
• நாளமுள்ள சுரப்பியின் பகுதியாயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி லிப்பேஸ், டிரிப்சின், அமைலேஸ் நொதிகளைக் கொண்டுள்ள கணைய நீரைச் சுரக்கின்றது.
7. பெருங்குடல்:
• இது பின்சிறு குடலிலிருந்து மலவாய் வரை பரவியுள்ளது.
• இதனுடைய நீளம் சுமார் 1.5மீட்டர் ஆகும்.
• இது மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை
(i) முன் பெருங்குடல் (அ) சீக்கம்
(ii) பெருங்குடல் (அ) கோலன்
(iii) மலக்குடல் (அ) ரெக்டம்.
• சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் உள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு சீக்கம் ஆகும்.
• சீக்கம் மனிதனில் பயனற்ற, பணி ஏதுமற்ற எச்ச உறுப்பாகும்.
8. மலக்குடல்:
இது இறுதியாக மலவாயில் திறக்கிறது.
9. மலவாய்:
• மலவாயில் வளையங்கள் போன்ற மூடிய நிலையிலிருக்கும் மலச்சுருள் தசை உள்ளது.
• மலவாய் வழியாக செரிக்காத, தன்மயமாகாத உணவு கழிவாக வெளியேற்றப்படுகிறது.
2.
சிறுநீரகத்தின்
அமைப்பினையும்,
சிறுநீர்
உருவாதலிலுள்ள
படிநிலைகளையும்
விளக்குக.
விடை:
சிறுநீரகத்தின் வெளி அமைப்பு:
• இது முதுகெலும்பின் இரு பக்கத்திலும் வயிற்றுப் பகுதியின் அடிப்பாகத்திலுள்ள சுவர் பகுதியோடு ஒட்டிக் காணப்படுகிறது.
• ஒவ்வொரு சிறுநீரகமும் சுமார் 11 செ.மீ. நீளம், 5 செ.மீ. அகலமும் மற்றும் 3 செ.மீ. பருமனும் கொண்டதாயிருக்கிறது.
• சிறுநீரகத்தினுள் கார்டெக்ஸ் என்ற வெளிப் பகுதியும் மெடுல்லா என்ற உட்பகுதியும் உள்ளன.
• இவ்விரண்டு பகுதிகளிலும் சிறுநீரக நுண்குழல்கள் உள்ளன. இவை சிறுநீரகத்தின் அடிப்படை செயல் அலகுகள் ஆகும்.
• மெடுல்லா பகுதியில் கூம்பு வடிவில் சிறுநீரக பிரமிடுகள் உள்ளன.
• ஒவ்வொரு சிறுநீரகத்தின் உட்குழிவுப் பகுதி ஹைலம் எனப்படும். இவ்வழியே இரத்த நாளங்களும் மற்றும் நரம்புகளும் உள்ளே நுழைகிறது. இதன் வழியே சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.
சிறுநீர் உருவாகும் முறை:
மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது.
1. கிளாமருலார் வடிகட்டுதல்
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்
3. குழல்களில் சுரத்தல்
1. கிளாமருலார் வடிகட்டுதல்:
• கிளாமருலஸ் மற்றும் பௌமானின் கிண்ணம்
அகியவற்றின் எப்பித்தீலிய சுவர்களின் மூலமாக இரத்தம் வடிகட்டப்படுகிறது.
• இவ்வாறாக வடிகட்டப்பட்ட திரவத்திற்கு கிளாமரூலார் வடி திரவம் என்றுபெயர்.
2. குழல்களில் மீள உறிஞ்சப்படுதல்:
• அண்மை சுருள் நுண் குழலில் வடிதிரவத்தில் உள்ள குளூக்கோஸ், அமினோ அமிலங்கள் வைட்டமின்கள், சோடியம், பொட்டாசியம், பைகார்பனேட் மற்றும் நீர் ஆகியவை தேர்ந்தெடுத்து மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.
3. குழல்களில் சுரத்தல்:
• ஹைட்ரஜன் அல்லது பொட்டாசியம் அயனி போன்ற பொருட்கள் நுண் நாளங்களுக்குள் சுரக்கின்றன,
• பொட்டாசியம் மற்றும் பிற வேதிப்பொருள்களை பென்சிலின் மற்றும் ஆஸ்பிரின் போன்ற பொருள்கள சேய்மை சுருள் நுண்குழல்களில் வடிதிரவமாக சுரக்கின்றன.
• இந்த நுண்குழல் வடிதிரவமே இறுதியாக சிறுநீர் எனப்படுகிறது. இது மனிதனில் உயர் உப்படர்வு தன்மையுடைய திரவமாக இருக்கிறது.
• இறுதியில் சிறுநீரானது பெல்விஸ் பகுதிக்குச் சென்று சிறுநீர்க்குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பையை அடைந்து பெரிஸ்டால்ஸிஸ் இயக்கத்தின் மூலம் வெளியேறுகிறது.
VIII. கூற்று மற்றும் காரணம்
கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும்,
ஒரு
கூற்றும்
அதன்
கீழே
அதற்கான
காரணமும்
கொடுக்கப்பட்டுள்ளன.
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
நான்கு
வாக்கியங்களில்
ஒன்றை
சரியான
பதிலாகக்
குறிக்கவும்.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட
கூற்றிற்கான
சரியான
விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட
கூற்றிற்கான
சரியான
விளக்கமில்லை
.
இ) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1.
கூற்று:
சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது.
காரணம்:
யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள். இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும்.
விடை:
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
2.
கூற்று:
இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன.
காரணம்:
பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
IX. உயர் சிந்தனை
வினாக்கள்
1.
இரைப்பை
நீரில்
பெப்சின்
குறைவுபட்டால்
இரைப்பையில்
எச்செயலானது
பாதிக்கப்படும்?
விடை:
அ) ஸ்டார்ச்சிலிருந்து சர்க்கரையாக மாறும் செரிமான மாற்றம்.
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்
இ) நியூக்ளிக் அமிலங்களின் செரிமானம்
ஈ) கொழுப்புகள் கிளிசராலாகவும், கொழுப்பு அமிலங்களாகவும் உடைதல். விடை:
ஆ) புரதங்கள் பெப்டைடுகளாக உடைதல்
2.
மால்பீஜியன்
காப்ஸ்யூலுக்குள்
செல்லும்
மற்றும்
மால்பீஜியன்
காப்ஸ்யூலை
விட்டு
வெளியேறும்
இரத்த
நாளங்களைப்
பெயரிடுக.
விடை:
1. மால்பீஜியன் காப்ஸ்யூலுக்குள் செல்லும் இரத்தக்குழாய் - உட்செல் நுண்தமனி.
2. மால்பீஜியன் காப்ஸ்யூலை விட்டு வெளியேறும் இரத்த நாளம் - வெளிச்செல் நுண் தமனி
3.
மருத்துவ
நோயறிதலில்
சிறுநீர்
பகுப்பாய்வானது
மிக
முக்கியமான
பகுதியாக
இருப்பதாக
ஏன்
கருதுகிறாய்?
விடை:
• இது ஒரு நோயாளியில் பொதுவான உடல் ஆரோக்கியம், பற்றி வருடாந்திர ஆய்வு அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் உடல் நலம் பற்றி அறிதல் அல்லது கருத்தரித்தல் பற்றி ஆராய்தல் போன்றவற்றிற்கு இது உதவுகிறது.
• சிறுநீரகத்தின் செயல்பாடு, சிறுநீர்பாதை அல்லது சிறுநீர் தொற்று பற்றி அறிய உதவுகிறது. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்ற குறைபாடுகளான நீரழிவு நோய் மற்றும் மஞ்சட்காமாலை பற்றி அறிய முடிகிறது.
• ஒரு நோயாளியின் நோய் நிலை பற்றியும் சிகிச்சையின் விளைவு எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் அறிய முடிகிறது.
4.
உனது
மருத்துவர்
ஏன்
அதிக
நீர்
குடிக்க
அறிவுறுத்துகிறார்?
விடை:
காரணங்கள்
• தீவிர உடற்பயிற்சியின் போதும் அல்லது வெப்பம் அதிகரிக்கும் போதும் உடல் செயல் பாதிக்கப்படாமல் அதிகப்படுத்துவதற்கு நீர் உதவுகிறது.
• நீர் சத்து நம் உடலில் ஆற்றல் நிலையையும் மூளையின் செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அதிக நீர் எடுத்துக் கொள்ளாவிட்டால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்.
• மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
• சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
5.
நமது
உள்ளங்கைகளிலும்,
பாதங்களின்
உள்ளங்காலிலும்
ஏன்
வியர்வைச்
சுரப்பிகள்
உள்ளன
என்று
உன்னால்
யூகிக்கமுடிகிறதா?
விடை:
ஆம், யூகிக்க முடிகிறது.
காரணங்கள்:
• வியர்த்தல் மூலம் உடல் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது.
• வியர்த்தல் நிகழ்ச்சி பரிவு நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. • உள்ளங்கை மற்றும் பாதங்களில் வியர்ப்பதால் உடலின் வெப்பநிலை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
• பதட்டம் பயம் போன்ற நேரங்களில் இவற்றின் சுரப்பு அதிகரிப்பால் வியர்த்தல் தூண்டப்பட்டு உள்ளங்கால்களிலும், உள்ளங்கைகளிலும் அதிகம் வியர்க்கிறது.
X. கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத்
தேர்விலிருந்து எடுத்து
பொருத்துக.
விடை:
ஈ. கருப்பை நாளம், அண்டகம், செர்விக்ஸ், கர்பப்பை, யோனி
பிற நூல்கள்
Verma
P.S and Agarwal, V.K. Animal Physiology,
S.
Chand and Company, New Delhi
இணைய தளங்கள்
https://www.britannica.com/science/humandigestive-system
https://biologydictionary.net/e×cretory-system/
https://www.britannica.com/science/humanreproductive-system
கருத்து வரைபடம்
இணையச்செயல்பாடு
மனித செரிமான மண்டலம்
இச்செயல்பாடு செரிமான மண்டலத்தின் அனைத்து உறுப்புகளின் பணிகளையும் ஆராய்ந்தறிய வழிவகை செய்யும்.
படி 1.
கீழ்க்காணும் உரலி விரைவுக் குறியீட்டினைப் பயன்படுத்தி 'The
digestive system என்ற பக்கத்திற்குச் செல்லலாம்.
படி 2.
'Go to Interactive Mode' என்ற பொத்தானை அழுத்தி,
எந்த உறுப்பின் பயன்பாடு குறித்து அறிய வேண்டுமோ, அதனை அறிந்து கொள்ளலாம்.
படி 3.
எந்த உறுப்புகளின் செயல்பாடு குறித்து தெரிய வேண்டுமோ, அந்த குறிப்பிட்ட உறுப்பினைச் சொடுக்கும் போது, நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செரிமான மண்டலத்தின் அனைத்து உறுப்பின் பயன்பாடுகளையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
படி 4.
மேலும், செரிமானச் செயல்முறையை அறிய, 'Go to Animation Mode' என்ற பொத்தானை அழுத்தவும்.
உரலி: http://highered.mheducation.com/sites/0072495855/student_view0/chapter26/animation__ organs_of_digestion.html