Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | சமூகக் கட்டமைப்பு
   Posted On :  06.10.2023 08:41 pm

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்

சமூகக் கட்டமைப்பு

மனித வளங்களை மேம்படுத்துவதும், பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணை செய்வதுமான அமைப்புகளை சமூகக் கட்டமைப்புகள் என்கிறோம்.

சமூகக் கட்டமைப்பு 

மனித வளங்களை மேம்படுத்துவதும், பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுகமாகத் துணை செய்வதுமான அமைப்புகளை சமூகக் கட்டமைப்புகள் என்கிறோம். இந்த அமைப்புகள் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு வெளியே இருக்கின்றன. இந்த சமூக அமைப்புகளின் மேம்பாடு மனித வளங்களின் திறமையையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கின்றன. (.கா) பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது வசதி மற்றும் இதர குடிமை வசதிகள். குறைவான சமூக அடிப்படைக் கட்டமைப்பு, இந்தியப் பணியாளர்களின் உற்பத்தித் திறன் குறைவாக இருக்க காரணமாக உள்ளது.


1. கல்வி


. இந்தியாவில் கல்வி

இந்தியாவில் குருகுல முறையில் பன்னெடுங்காலமாக கல்வி போதிக்கப்பட்டது. தற்போது வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளுக்கேற்ப இந்தியக் கல்விமுறை வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் (MHRD) நம் நாட்டின் கல்விக் கொள்கைகளையும், திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது.


. இந்திய கல்வி முறை

1976 வரை மாநில அரசின் பொறுப்பில் இருந்த கல்வி, அதன்பிறகு மத்திய மாநில அரசுகளின் கூட்டுப்பொறுப்பில் வந்தது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுதுறை கல்விக்கான வரவு செலவுகளை மேற்கொள்கிறது.

இந்திய கல்வி முறை, அடிப்படையில் ஆறு நிலைகளைக் கொண்டுள்ளது.

குழந்தைக்கல்வி

தொடக்க கல்வி

இடைநிலைக் கல்வி

மேல்நிலைக்கல்வி

இளம்நிலைப் பட்டம்

முதுநிலைப் பட்டம் 


. இந்திய கல்வி நிறுவனங்கள்

இந்திய கல்வி முறை 10, +2 முறையைக் கொண்டுள்ளது. உயர் கல்வியைப் பொறுத்த அளவில், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பல்வேறு படிப்புகளை மற்றும் பாடங்களை வழங்கி வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுச் (UGC) சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களின் தரம் அளவிடப்படுகிறது. கல்வித்துறை என்பது பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கியது. இது சமூதாயத்தின் எல்லா பிரிவு மக்களுக்கும் நடுநிலையான கல்வியளிக்கும் அமைப்பு ஆகும். வரவு செலவுத் திட்டத்தில் 3% (GDP) நிதி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டு, பெருமளவு நிதி பள்ளிக் கல்விக்கே செலவிடப்படுகிறது. இருப்பினும் ஒரு மாணவருக்கு ஆகும் கல்விச் செலவு இன்னமும் குறைவாகவே இருக்கிறது.


2. உடல் நலம் 


. இந்தியாவில் உடல்நலம்

இந்தியாவின் உடல்நலம் மாநில அரசின் பொறுப்பில் வருகிறது. மத்திய சுகாதாரம் மற்றும் நலவாழ்வு கழகம் (Central Council of Health and Welfare) பல்வேறு நலக்கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய நலத்துறை அமைச்சகம் நலத்துறையின் நிர்வாகத்தையும், அதற்கான தொழில்நுட்ப தேவைகளையும் கவனித்துகொள்கிறது.

இந்தியாவில் உடல்நலம் பேணுதல் பல முறைகளில் (பலவடிவங்களில்) நடக்கிறது. ஆயுர்வேதம், சித்தா, யுணானி, மூலிகை மருத்துவம், ஹோமியோபதி, ஆங்கில மருத்துவம், யோகா போன்ற பல முறைகள் இங்குண்டு. ஒவ்வொன்றிலும் தனித்தனி சிகிச்சை முறைகள் மற்றும் சிறப்புக் குணங்கள் உள்ளன. இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நடுவண் நலத்துறை அமைச்சகத்திடமிருந்து முறையான அனுமதி பெறவேண்டும். அனைத்து மருத்துவ நடைமுறைகளும் ஒரே அமைச்சகத்தின் கீழ் (ஆயுஷ் AYUSH) தற்போது உள்ளன


. இந்தியாவில் உடல்நலப் பணிகள்

இந்தியாவில் உடல்நலப்பணிகள் மத்திய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றன. மாநிலங்களைப் பொறுத்த வரையில் கேரளா மற்ற மாநிலங்களை விட உடல் நலம் பேணுதலில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறது. மற்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உடல்நலம் பேணுதல் திருப்திகரமானதாக இல்லை. இலங்கையை விட இந்தியாவில் உடல் நலம் பேணுதல் குறைவாக உள்ளது.








4. பி.ஆர்.அம்பேத்கர்


பி.ஆர்.அம்பேத்கர் (1891-1956) ஒரு பன்முகத்திறன் பெற்றவர். அவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி, சமதர்ம காவலர், சமூக நீதி பாதுகாவலர் மற்றும் அரசின் திட்டங்களை வடிவமைத்தவர். "பழங்கால இந்திய வர்த்தகம்" (1915 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை) "இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றிய வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை" (முனைவர் பட்டத்திற்காக சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை) என்ற இரண்டு நூல்களிலும் அவருடைய பொருளாதார கருத்துக்கள் காணப்படுகின்றன. மேலும் "பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதிகளின் மதிப்பீடு: மாகாண ஏகாதிபத்தியத்தின் நிதிகள் பரவலாக்கம் பற்றிய ஓர் ஆய்வு" கட்டுரையாக வெளியிடப்பட்டது.

1921ல் அம்பேத்கருடைய பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி பரவலாக்கள் என்ற ஆய்வுக் கட்டுரை M.Sc பட்டத்திற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் 1923ல் 'ரூபாயின் பிரச்சனைகள்' என்ற ஆய்வறிக்கையை ஏற்று லண்டன் பொருளாதார பள்ளி D.Sc பட்டம் வழங்கியது. ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இந்திய ரிசர்வ் வங்கியானது அம்பேத்கர் நூலான "ரூபாயின் பிரச்சினைகள் அதன் தோற்றமும் அதன் தீர்வும்" என்பதில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கருத்தாக்கம் பெற்றது. அவருடைய பொருளாதார கருத்துக்கள் நான்கு தலைப்புகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


1. நிதிப்பொருளாதாரம்: அம்பேத்கருடைய பெரும்பாலான நூல்கள் அவர் வெளிநாட்டில் தங்கியிருந்த 1913-1923 வரையிலான காலத்தில் எழுதப்பட்டவை. அவர் நிதிப் பொருளாதாரம் குறித்து நிறைய எழுதி இருக்கிறார். மாகாணநிதிபெருக்கத்தை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்.(i) ஒப்படைப்பு வரவு செலவுத் திட்டம் (1871 - 72 முதல் 1876 - 77 முடிய) (ii) ஒதுக்கீடு வரவு செலவுத் திட்டம் (1877 - 78 முதல் 1881 - 82 முடிய) மற்றும் (iii) வருவாய் பங்கீடு வரவு செலவுத் திட்டம் (1882 – 83 முதல் 1920 - 1921முடிய). 


2. வேளாண்மை பொருளாதாரம்: 1918 ஆம் ஆண்டில் அம்பேத்கர் "இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள்" என்ற கட்டுரையை எழுதினார். ஆடம்ஸ்மித்தின் 'நாடுகளின் செல்வத்தைப் போல்' நிலவுடைமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலவுடைமை விரிவாக்கம் இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை கூறுகிறார்.

 

3. சமூக நீதிப் பொருளாதாரம்: சமூக முன்னேற்றத்திற்கு சாதி மிகப் பெரிய தடையாக இருப்பதாக அம்பேத்கர் நம்பினார். சாதி சமூக பிரிவினைக்கு வழிவகுக்கிறது. தனி நபர்கள் தங்களுக்குள் வேலைகளை பரிமாறிக்கொள்ளும் வழி இருக்கவேண்டுமென்று அவர் சொன்னார். மேலும் சாதிய முறை சமூக பதட்டத்திற்கு காரணமாக அமைகிறது. சாதி முறை அரசியல் ஜனநாயத்தை விடவும், சமூக ஜனநாயத்தை அமைப்பதில் தோல்வியடைந்திருக்கிறது என்று அவர் கூறுகிறார்


4. சமதருமப் பொருளாதாரம்: அம்பேத்கர் ஒரு சமதர்மவாதி; சமூக நீதியின் பாதுகாவலர். அவர் அனைத்து முக்கியமான தொழில்களையும் நாட்டுஉடமைஆக்கவேண்டுமென்றும், நிலத்தை அரசே நிர்வகிக்க வேண்டும் என்றும் கூட்டு வேளாண்மை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அரசே காப்பீடு வணிகம் செய்ய வேண்டும் என விரும்பினார். அனைத்து மக்களுக்கும் கட்டாயமாக காப்பீட்டு வசதி அளிக்கப்பட வேண்டுமென்று கூறினார்.


அம்பேத்கர் மிகச்சிறந்த பொருளியல் அறிஞர் என்பதில் ஐயமில்லை . ஆனால் சட்டம் மற்றும் அரசியலில் அவரது அளப்பரிய பங்களிப்புகள் அவருடைய பொருளாதார பங்களிப்பை குறைத்து காட்டிவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி.


5. J.C குமரப்பா


ஜோசப்  செல்லத்துரை குமரப்பா தமிழ் நாட்டின் தஞ்சாவூரில் 1892 ஆம் ஆண்டில் ஜனவரி 4இல் பிறந்தார். கிராமப் பொருளாதார முன்னேற்றக் கொள்கைகளின் முன்னோடியாக அறியப்படுகின்ற குமரப்பா அவரது அனைத்து பொருளாதார கருத்துக்களையும் காந்தியம் என்பதன் அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டார். மேலும் "காந்தியப் பொருளாதாரம்" என்ற கருத்தையே அவர் உருவாக்கினார்


காந்தியப் பொருளாதாரம்

J.C. குமரப்பா, காந்தியின் கருத்தான கிராமத் தொழில்கள், கிராமத் தொழில் வளர்ச்சி சங்கம் ஆகியவற்றை வலுவாக ஆதரித்தார். கிருஸ்துவ மற்றும் காந்திய மதிப்பீடுகளை உள்ளடக்கி அவர் கோட்பாடுகளைக் கொண்டு வந்தார். அதில் அஹிம்சைக் கொள்கை, மனித நடத்தைகளை மையப்படுத்துதல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை பொருள் முதல் வாதத்திற்குப் பதிலாக பயன்படுத்தினார். சோசலிசம் எடுத்துரைக்கும் வர்க்கப் போர் முக்கியத்துவத்தை நிராகரிக்கும் அதே வேளையில், தடையில்லா சந்தையில் உள்ள பருப்பொருள் வளர்ச்சி, போட்டி மற்றும் திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நிராகரித்தார்

காந்தியும் குமரப்பாவும் மனிதனின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற வேண்டுமானால் சமூக பொருளாதார பிரச்சினைகள், வேலையின்மை, வறுமை, மற்றும் ஆதரவற்ற நிலை ஆகியவற்றை களையவேண்டும் என்று கூறுகின்றனர்.

குமரப்பா உப்பு சத்தியாக் கிரகத்தின் போது 'யங் இந்தியா' பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டே, அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யா பீடத்தில் பொருளாதார பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை 1935-ல் தோற்றுவித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது ஓராண்டிற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது "நிலைத்த பொருளாதாரம்", "இயேசுவின் வழிமுறைகள்" (1945) மற்றும் "கிறிஸ்துவம்: அதன் பொருளாதாரமும் வாழ்க்கை முறையும்" (1945) ஆகிய புத்தகங்களை எழுதினார்.

காந்தியைப் பின்பற்றுபவர்கள் சுற்றுப்புற சூழலியல் குறித்து நிறைய கோட்பாடுகளை உருவாக்கினர். குமரப்பா 1930-1940 ஆண்டுகளுக்குகிடையே இதுகுறித்து நிறைய புத்தகங்களை எழுதினார். வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா அவர்கள் குமரப்பாவை 'பச்சை காந்தி' என்று அழைத்து சிறப்பிக்கிறார். இந்தியாவின் சுற்றுச் சூழலியல் குறித்து அடித்தளமிட்டதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார். இந்தியத்திட்டக் குழுவிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் பணியாற்றி வந்த குமரப்பா, வேளாண்மைக்கான தேசிய கொள்கைகள் மற்றும் கிராம முன்னேற்றம் குறித்து பல கொள்கைகளை வகுத்து தந்தார். சீனா, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் சென்று அங்கு இருந்த கிராம வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்டு நம் நாட்டில் அமல்படுத்த முனைந்தார்.


6. V.K.R.V ராவ்


P.R பிரமானந்தாவின் கூற்றுப்படி, "சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் இந்தியாவின் தலைசிறந்த பொருளியல் அறிஞர்களாக D.R.காட்கில், C.N.வக்கில் மற்றும் V.K.R.V இராவ் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்த அறிஞர்கள் சிறந்த கனவுகளோடும், இந்தியப் பொருளாதார பிரச்சனைகளை ஆராய்ந்து கொள்கைகளையும் திட்டங்களையும் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக வழங்கியிருக்கிறார்கள்".

V.K.R.V இராவ் ஒரு தேர்ந்த எழுத்தாளர். அவர் மூன்று முக்கிய கருத்துக்களில் ஆர்வமுடையவராக இருந்தார்.

i. நாட்டு வருமானம் 

ii. உணவு, ஊட்டச்சத்து, பண்டங்களின் பகிர்வு 

iii. வேலைவாய்ப்பும், தொழில்பகிர்வு


1. நாட்டு வருமானம் கணக்கீட்டுமுறை:

தேசிய வருமான கணக்கீட்டு முறையின் வாயிலாக ராவ் ஒரு நடைமுறைப் பொருளாதார வாதியாக நினைவில் கொள்ளப்படுகிறார். ராவ் J.M.கீன்சின் மாணவர் மட்டுமல்லாது கோலின் கிளார்க் அவர்களுடன் பணி செய்து இருக்கிறார். H.W சிங்கர், "கீன்சன் மாணவர்களில் சிறந்தவராக V.K.R.V இராவ்" அவர்களைக் கருதுகிறார். ராவின் கணக்கீட்டு முறை (i) பொதுவாக வளரும் நாடுகள், குறிப்பாக இந்தியாவிற்கு உகந்த தேசிய வருமானக் கருத்துக்கள். (ii) முன்னேறிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் முதலீடு, சேமிப்பு, பெருக்கி ஆகியவற்றை ஆய்வு செய்தல். (iii) வளர்ச்சி குன்றிய நாடுகளின் தொழில்மயமாக்கலின் விளைவுகளை, தேசிய வருவாயை இணைத்துப் படிக்க வேண்டும்.

'முழு வேலை வாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும்' என்ற ராவின் ஆய்வுக் கட்டுரை வேலை வாய்ப்புத் துறையில் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.


2. பன்னாட்டு உணவு உதவி : உலக வறுமையை ஒழிப்பதில் ராவ் சிறந்த கொள்கைகளை வகுத்துத் தந்தது மட்டுமல்லாது, உணவுப் பொருட்களை பன்னாட்டு அளவில் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், தேர்ச்சி பெற்ற பன்னாட்டு சாதனங்களின் பங்களிப்பு கருத்தையும் முன்வைத்தார். தனது பங்களிப்பு மட்டுமன்றி, பன்னாட்டு உதவி மற்றும் வெளி வளங்களின் மூலம் உணவுக்கான நிதி வாய்ப்புகளை உருவாக்கினார்.


3. சமதர்மத்திற்கு ஆதரவு: இந்திய திட்டமிடலின் முந்தைய காலங்களில் ராவ் சமதர்ம இந்தியாவை வலியுறுத்தினார். அரசாங்கமே பொருளியல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டது என்றும், பொதுத்துறை பொருளாதார வளர்ச்சியின் உச்சத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்து பொருளாதார முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்க வேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருந்தார்


4. ராவின் பார்வையில் தொழில்மயமாதல்: இராவ் எழுதிய 'இந்தியப் பொருளியல் வாழ்வில் என்ன தவறு?' (1938) என்ற சிறு புத்தகத்தில் இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைவிற்கும், தனிநபர் ஊட்டச்சத்து குறைவிற்கும் பின்வரும் காரணங்களை விளக்குகிறார்.

i. முறையற்ற நிலவுடைமை, நிலம் துண்டாடல், நிலம் பிரிக்கப்படுதல்.

ii. பயிர்களுக்கு குறைவான நீர்பாசன வசதி கிடைத்தல்

iii. பேரளவு தொழில்துறை இன்மையால், வேளாண்மையில் அதிக மக்கள் தொகை அழுத்தம் ஏற்படுகின்றது

iv. முதலீடு இன்மை

v. நாணயத்தில் சுயாட்சி கொள்கையின்மை மற்றும் பணம் பற்றிய கருத்துக்களில் தங்கத்தை உடமையாகக் கொள்வதை ஊக்குவித்தது


5. கிராம தொகுதிகள் : கிராம முன்னேற்றத்திற்காக கிராம குழுக்கள் அமைக்கப் படவேண்டும். ஊரக வளர்ச்சிக்காக கிராமங்கள் தொகுப்பாக ஒரே அலகாக செயல்பட வேண்டும். அதனால் கிராமங்கள் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு அடையும். அக்குழுக்கள் திறம்பட சுயமுன்னேற்றத்திற்கு பொதுமக்கள் பங்கேற்புடன் தங்களை வடிவமைத்துக் கொள்ளும். குழுக்கள் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்பவராகவும், அதன் மூலம் சமூக பொருளாதார தொடர்பு கிராமத்தில் அதிக வளர்ச்சியையும், ஆற்றல் மிக்க உற்பத்தியையும், தன்னாக்க முறையில் செய்ய பொதுமக்கள் அதன் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்பவராகவும் இருக்க வேண்டும் என்று ராவ் கருதினார்


6. முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி: 'முன்னேற்றம் அடையாத நாடுகளின் முதலீடு, வருமானம் மற்றும் பெருக்கி ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு (1952) என்ற ராவ் அவர்களின் புத்தகம் பேரியியல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு வழங்கியது

சிந்தனையாளர்,ஆசிரியர்,பொருளாதார ஆலோசகர் மற்றும் நேரடி கொள்கை வடிவமைப்பாளர் என்ற பார்வையில் J.M. கீன்சின் அடிகளை பின்பற்றியவர்


7. நிறுவனக் கட்டமைப்பாளர்: ராவ் தேசிய அளவிலான மூன்று ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்கினார். அவை டெல்லி பொருளாதாரப் பள்ளி (டெல்லி), பொருளாதார வளர்ச்சிக் கழகம் (டெல்லி), சமூக பொருளாதார மாற்றத்திற்கான கழகம் (பெங்களூரு) ஆகியனவாகும்.


7. அமர்த்தியாகுமார் சென்


நோபல் குழு, சென்னின் பங்களிப்பைப் பற்றி குறிப்பிடும் போது, அவருடைய சமூகத் தெரிவு கொள்கை, வளர்ச்சிப் பொருளாதாரம், வறுமை மற்றும் பஞ்சங்கள் பற்றிய ஆய்வு மற்றும் உரிமங்கள் திறன் முன்னேற்றம் பற்றிய கருத்து (1998) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.


1. வறுமையும், பஞ்சமும்

வறுமை மற்றும் பஞ்சம்: 'உரிமம் மற்றும் இழப்பு பற்றிய ஓர் கட்டுரை (1981) சிறந்த ஒன்றாக இருக்கிறது. அவருடைய புத்தகத்தில் பல்வேறு பஞ்சங்கள் பற்றி ஆய்வு செய்து அவற்றின் உண்மையான காரணங்களை எடுத்து காட்டியிருக்கிறார். வறுமை பற்றிய பல்வேறு விளக்கங்களை ஆராய்ந்து முழு வறுமை மற்றும் தொடர்புடைய வறுமை ஆகியவைப் பற்றிய காரணங்களைக் கூறி கவனத்தை ஈர்க்கின்றனர்.


2. வறுமை மற்றும் சமத்துவமின்மை :

சென் இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம் இன்மை பற்றி நிறைய எழுதி இருக்கிறார். வருமானப் பகிர்வு மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் நுகர்வு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது சென் அவர்களின் முக்கியக் கருத்தாகும்.


3. திறன் பற்றிய கருத்து: பொருட்கள் அல்லது பயன்பாடுகளைவிட திறன்களை வளர்ப்பது பற்றிய சென்னின் கருத்துக்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. சென் அவர்களின் கருத்துப்படி திறன் என்பது அடிப்படை கச்சாப் பொருட்களை மக்கள் நலத்திற்காக மாற்றி அமைப்பது ஆகும்.


4. உரிமைகள்: ஊட்டச்சத்து உணவு, மருத்துவம், உடல் நலப் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, பஞ்சத்தின் போது வழங்கப்படும் உணவு ஆகியவை நமது உரிமைகளாக மாறவேண்டும் என்று சென் கருதினார். இத்தகைய உரிமைகளை வழங்குவதில் ஏற்பட்ட தோல்வியே பஞ்சம் ஏற்படுவதற்கு காரணமாகும் என அவர் கருதினார்


5. தொழில் நுட்பத் தெரிவு: மூலதன செறிவு நுட்ப முறையில், உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் என்றுதொழில் நுட்பத் தெரிவு' என்ற புத்தகத்தில் சென் குறிப்பிடுகிறார்.

முடிவாக அமர்த்தியா சென் பொருளியியல் அறிஞர் மட்டுமல்ல நன்னெறி தத்துவ அறிஞரும் ஆவார். அவர் சுதந்திரத்தை நேசிப்பவர் மற்றும் மனித நேய ஆதரவாளர். அவர் ஏழைகளைக் குறித்து அதிக அக்கரை எடுத்துக்கொண்டார். மேலும் அவர்களை இரக்கத்திற்கு உரியவர்களாக பார்க்காமல், உரிமைகள் வழங்கப்பட அதிகார உரிமைகள் கொண்டவர்களாக பார்க்க வேண்டும். அதிகாரம் வழங்குதல், கல்வி, உடல்நலம், ஊட்டச்சத்து, பாலின சமநிலை, துன்பம் நேரும் காலங்களில் பாதுகாப்பு ஆகியவை வழங்கப்பட வேண்டியவர்களாக கருதுகிறார்.

11th Economics : Chapter 7 : Indian Economy : Indian Social Infrastructure in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம் : சமூகக் கட்டமைப்பு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 7 : இந்தியப் பொருளாதாரம்