பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பணம்: அறிமுகம் | 4th Maths : Term 3 Unit 5 : Money
அறிமுகம்
ஒன்றின் விலை கூடுதல், மொத்த மதிப்பு, மீதம் இவற்றிற்கான கணித செயல்பாடுகளைப் பயன்படுத்துதல்.,
பன்னீர் செல்வமும், அவருடைய மூன்று நண்பர்களும் கடற்கரைக்குச் சென்றனர். அவர்கள் விளையாடி ஓய்வெடுத்தனர். கடைக்காரரிடம் ₹ 20 ஐக் கொடுத்து 4 பாக்கெட்டுகள் தானியங்கள் வாங்கினர். பன்னீருக்கு ஒரு பாக்கெட்டின் விலை தெரியாததனால், தன்னுடைய நண்பனைக் கேட்டார்
அவனுடைய நண்பன் விலையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று அவனுக்கு விளக்கினான்.
4 பாக்கெட் தானியங்களின் விலை = ₹ 20
1 பாக்கெட் தானியத்தின் விலை = ₹ 20 ÷ 4
1 பாக்கெட் தானியத்தின் விலை = ₹ 5
எனவே, ஒரு பாக்கெட் தானியத்தின் விலை = ₹ 5
பன்னீரும், அவருடைய நண்பர்களும், தானியங்கள் சாப்பிட்டுவிட்டு தேநீர் கடைக்குச் சென்றனர். ஒரு கோப்பை தேநீரின் விலை ₹ 5 ஆக இருந்தது.
பன்னீரும் அவரது நண்பர்களும் தேநீர் அருந்திவிட்டு கடைக்காரரிடம் ₹ 20 ஐக் கொடுத்தனர்.
பன்னீருக்கு தேநீரின் மொத்த விலை தெரியாது. அவன் தன்னுடைய நண்பனிடம் தனக்கு விளக்குமாறு கேட்டான்.
ஒரு கோப்பை தேநீரின் விலை = ₹ 5
நான்கு கோப்பை தேநீரின் விலை = ₹5 × 4
எனவே, நான்கு கோப்பை தேநீரின் விலை ₹ 20 ஆகும்.
முயற்சி செய்வோம்
மொத்த விலைக் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது ஒவ்வொரு பொருளின் விலையைக் காண்க. ஒன்று தங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது.
பின்வருவனவற்றை நிரப்புக.:
பன்னீரும் அவருடைய நண்பர்களும் தானியத்திற்காக ₹ 20, தேநீருக்காக ₹ 20, குதிரை சவாரிக்காக ₹ 40 செலவழித்தனர். மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றனர். பின்னர், பன்னீர் வீட்டிற்குச் சென்று ₹ 100 இல் மீதமுள்ள பணத்தைக் கணக்கிட்டான்.
பன்னீருக்கு உதவி செய்வோம்,
செயல்பாடு
1. மாணவர்களை மாதிரிச் சந்தை அமைக்கச் செய்து பொருட்களின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த செய்து அவற்றின் கூடுதல், கழித்தலைக் கற்கச் செய்தல்
அன்பு சந்தைக்கு சென்று 1 கி.கி வெங்காயம் ரூ.101.50-க்கும், 1 கி.கி உருளைக்கிழங்கு ரூ.56.50-க்கும், 1 கி.கி பீன்ஸ் ரூ 40.60-க்கும் வாங்கினான் எனில் அவன் செலவழித்த தொகை எவ்வளவு?
தீர்வு:
2. ஒரு மாணவனை வியாபாரி போல் நடிக்கச் செய்து மற்ற மாணவர்களை வாடிக்கையாளர்கள் போல் நடிக்கச் செய்து, பணத்தாளின் மதிப்புகளை காகிதத்தில் எழுதி பொருட்களின் விலையைக் கணக்கிட்டு கூடுதல் மற்றும் கழித்தலைக் கற்கச் செய்தல்.
ஆல்வின் மளிகைக் கடைக்குச் சென்று 1 கி.கி சுரைக்காய் ரூ.10.50-க்கும், 1 கி.கி பூசணிக்காய் ரூ.20.50-க்கும் வாங்கினான். அவன் கடைக்காரரிடம் ரூ.50.00 கொடுத்தான் எனில் மீதி எவ்வளவு பணம் கடைக்காரர் திரும்பிக் கொடுத்தார்?
தீர்வு:
எடுத்துக்காட்டு 1
நந்தகுமார் 10லி பெட்ரோலுக்கானத் தொகையாக ₹ 750 ஐச் செவழித்தார் எனில், 1 லி பெட்ரோலின் விலை என்ன?
நந்தகுமார் பெட்ரோலுக்காகச் செலவழித்த தொகை = ₹ 750
1 லி பெட்ரோலுக்கான விலை = ₹750 ÷ 10
= ₹ 75
எடுத்துக்காட்டு 2
மதுமிதா 8 பாக்கெட் இனிப்புகள் வாங்கினார். ஒரு பாக்கெட்டின் விலை ₹ 65 எனில், 8 பாக்கெட்டின் விலை எவ்வளவு?
ஒரு பாக்கெட்டின் விலை = ₹ 65
8 பாக்கெட்டின் விலை = ₹65 × 8
= ₹ 520
எனவே, 8 பாக்கெட்டுகளின் விலை ₹ 520 ஆகும்.
எடுத்துக்காட்டு 3
செல்வம் காய்கறிகடைக்குச் சென்று வெங்காயம் ₹ 10.50 இக்கும், வெள்ளரிக்காய் ₹8.75 வாங்கினான். கடைக்காரரிடம் ₹ 20 கொடுத்தான் எனில், அவன் பெற்ற மீதித் தொகை எவ்வளவு?