இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - நீர் | 3rd Science : Term 2 Unit 2 : Water

   Posted On :  28.05.2022 04:26 am

3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : நீர்

நீர்

இந்தப் பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: ❖ நீரின் தேவையைப் புரிந்து கொள்ளுதல் ❖ நீரின் முதன்மை ஆதாரங்களைப் பட்டியலிடுதல் ❖ நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை அறிதல் ❖ நீர் நிலைகளின் பாதுகாப்பு முறைகளைப் பற்றி அறிதல் ❖ நீர் தேங்குவதால் ஏற்படும் விளைவுகளை அறிதல்

அலகு 2

நீர்



கற்றல் நோக்கங்கள்

இந்தப் பாடத்தைக் கற்றபின் மாணவர்கள் பெறும் திறன்களாவன: 

நீரின் தேவையைப் புரிந்து கொள்ளுதல் 

நீரின் முதன்மை ஆதாரங்களைப் பட்டியலிடுதல் 

நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகளை அறிதல்

நீர் நிலைகளின் பாதுகாப்பு முறைகளைப் பற்றி அறிதல் 

நீர் தேங்குவதால் ஏற்படும் விளைவுகளை அறிதல்


பாடல் நேரம்

தண்ணீர்... தண்ணீர்...

தாகமெடுத்த குருவியொன்று தண்ணீர் தேடி வந்ததாம் 

ஆறு குளம் ஏரியெல்லாம் காய்ந்துபோய் கிடந்ததாம்...


தெருக்குழாய் திருகு எல்லாம் திறந்து தானே ஒழுகுதாம் 

வழியில் வந்த சிறுவனை அழைத்து மூடச் சொன்னதாம்.. 


காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் கண்ணீர் கதையை உரைத்ததாம் 

கவனமாக கேட்ட சிறுவன் நீரின் அருமை உணர்ந்தானாம் 

திருகை மூடி அடைத்தானாம் நன்றி கூறி நடந்தானாம்....


I. நீர் - வாழ்வின் முதன்மை ஆதாரம்


நீர் பூமியில் உள்ள வளங்களுள் மிக முக்கியமான ஒன்றாகும். சிறு உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள் போன்ற அனைத்து உயிரினங்களும் வாழ நீர் இன்றியமையாதாகும். மக்கள் பல்வேறு தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துகின்றனர். நீரின் முக்கிய ஆதாரமாக மழை விளங்குகிறது.

உங்களுக்குத் தெரியுமா? 

ஒட்டகத்தால் ஒரே நேரத்தில் 60 முதல் 100 லிட்டர் வரை நீரைக் குடிக்க முடியும். மேலும், நீரின்றி பல நாள்கள் வாழமுடியும். 

உலக நீர் தினம் மார்ச் 22-ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

நிரப்புவோமா! 

படத்தை உற்றுநோக்கி, கோடிட்ட இடங்களை நிரப்புக.

நம் முகத்தைக் கழுவ நீர் தேவை .

நம் பற்களை துலக்க  நீர் தேவை.

உணவு சமைக்க நமக்கு நீர் தேவை .

நாம் பாத்திரங்களை சுத்தம் நீர் தேவை.

நாம் குடிக்க  நீர் தேவை.

பதிலளிப்போமா! 

அ. நீர் தேவைப்படும் செயல்களுக்கு () குறியிடுக.


ஆ. நீரின்றி உங்களால் செய்யக்கூடிய ஏதேனும் நான்கு செயல்களை எழுதுக.

படித்தல், உறங்குதல், நடத்தல், குதித்தல்.

கலந்துரையாடுவோமா!

இப்படத்தில் விலங்குகள் நீர் நிலையின் அருகில் காணப்படுகின்றன. அவை ஏன் அங்கு கூடி உள்ளன?

இப்படத்தைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதுக.

விலங்குகளுக்கு மனிதனைப் போல் நீர் தேவை. அவைகளுக்கு தாகம் ஏற்படும்போது நீர் குடிக்க, நீர்நிலையைத் தேடி வரும். 

காட்டில் வாழும் விலங்குகளுக்கும் நீர்த் தேவை. எனவேதான், அவை காட்டில் உள்ள நீர் நிலைகளைத் தேடி வருகின்றன. நம்மைப் போலவே விலங்குகளும் தாகம் ஏற்படும் போது நீரைப் பருகுகின்றன.

உங்கள் ஆசிரியரிடம் கேட்க. 

காட்டு விலங்குகள் மனிதனின் வாழ்விடத்திற்குள் நுழைவது ஏன்?


II. குடிநீர்

பருக உகந்த நீரையே குடிநீர் என்கிறோம். இந்த நீரே பருகவும், உணவு தயாரிக்கவும் சிறந்தது. 

குடிநீரானது, 

நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள்கள் இல்லாமல் இருக்க வேண்டும். 

தெளிவாக இருக்க வேண்டும். 

மணம், சுவையின்றி இருக்க வேண்டும். 

நோய்க்குக் காரணமான பாக்டீரியா இல்லாமல் இருக்க வேண்டும்.

குடிநீரின் பல்வேறு ஆதாரங்கள்

மழை, கிணறு, ஆறு, ஏரி மற்றும் ஓடை போன்ற பல்வேறு இயற்கை மூலங்களிலிருந்து நீர் கிடைக்கிறது. இவை அனைத்தும் பருகத் தகுந்ததாக இருப்பதில்லை. இவற்றை கொதிக்க வைத்து அதிலுள்ள கிருமிகளை நீக்குவதால் மட்டுமே அது பருகத் தகுந்த நீராகிறது.

மாற்றியமைப்போமா!

மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, பல்வேறு நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து எழுதுக.

எ.கா. மழை (ழைம்)

ஏரி (ரி ஏ)

ஓடை  (டை ஓ)

குளம் (ம் கு ள)

கிணறு (ண கி று)

கடல்  (ல் ட க)

பெருங்கடல்  (ரு பெ ல் ங் ட க)

கலந்துரையாடுவோமா!

பின்வரும் படங்களை உற்றுநோக்கி, அவற்றுள் எந்த நீர் பருக உகந்தது என்பதை () குறியிட்டு, அதைப்பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுக.


கண்டுபிடிப்போமோ!

குளிர்ச்சியாய் இருக்கும்போது உறைவேன்.

பனிபோல் மென்மையாக விழுவேன்.

சூரிய வெப்பத்தால் உருகி, மலையில் இருந்து வழிந்து ஓடி வருவேன்.

நான் யார்? விடை : பனி 

செய்து மகிழ்வோமா!

எளிய குழாய்

தேவைப்படும் பொருள்கள் : உலோகம் அல்லது நெகிழியால் ஆன ஒரு உள்ளீடற்ற குழாய் அல்லது பப்பாளிச் செடியின் நீளமான இலைக்காம்பு 

செய்முறை:

உள்ளீடற்ற குழாயை உங்களது இடது கையால் பிடித்துக் கொண்டு வாளியில் உள்ள நீரில் மேலும் கீழுமாக நகர்த்த வேண்டும். உங்களின் வலது உள்ளங்கையால் குழாயின் மேற்பகுதியை மூடியும் திறந்தும், நீரில் குழாயை மேலும் கீழும் அசைக்க வேண்டும். உடனே நீர் வெளியே வேகமாக வருவதைக் காணலாம். இங்கு இடது கையால் மேலும் கீழும் அசைப்பது நீர் இறைக்கும் செயலைச் செய்கிறது. வலது உள்ளங்கை அடைப்பானாகச் (வால்வு) செயல்படுகிறது.

அறிந்து கொள்வோம்

இப்பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் பருகவும் பிற செயல்களை மேற்கொள்ளவும் ஒரு நாளைக்கு 20 முதல் 50 லிட்டர் தூய, பாதுகாப்பான நீர் தேவைப்படுகிறது.


III. நாம் ஏன் நீரைச் சேமிக்க வேண்டும்?


பூமியில் உள்ள நீரில் 3% அளவு நீரே பயன்படுத்தும் வகையில் உள்ளது. நீர் விலை மதிப்பற்றது. ஆதலால் அதனை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். 

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வழிமுறைகள்: 

வாளியில் நீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க வேண்டும். 

பழங்களையும் காய்கறிகளையும் நேரடியாக குழாயைத் திறந்து கழுவாமல் பாத்திரத்தில் நீரைப் பிடித்து கழுவுதல் வேண்டும். 

பல் துலக்கும் போது குழாயை மூடி வைக்க வேண்டும்.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது உங்கள் நீர்ப்புட்டியில் மீதமுள்ள நீரை தாவரங்களுக்கு ஊற்ற வேண்டும். 

ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் குடிநீர்க் குழாயை மூட வேண்டும். 

தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச தெளிப்பானைப் பயன்படுத்த வேண்டும்.

பதிலளிப்போமா! 

நீரைச் சேமிக்க உதவும் சில வழிமுறைகளை எழுதுக.

• பயன்பாடு இல்லாதபோது குழாயை அடைக்க வேண்டும்.

• செடிகளுக்கு சொட்டு நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும்.

• தண்ணீர் நிரம்பி வழிந்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


முயற்சிப்போமா!

பின்வரும் வினாக்களுக்கு () குறியிடுக. உங்கள் பதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மாறுபட்டால் அருகிலுள்ள கட்டத்தில் அதன் பெயரை எழுதுக.

1. நீர் அருந்த பின்வருவனவற்றுள் எதைப் பயன்படுத்துவீர்கள்?

2. உங்கள் வீட்டில் எந்தப் பாத்திரத்தில் குடிநீர் சேமித்து வைக்கப்படுகிறது?


3. உங்களுக்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது?

முயற்சிப்போமா!

புள்ளிகளை இணைத்து, படத்திற்கு வண்ணம் தீட்டி, வாக்கியத்தை முழுமைப்படுத்துக.

உங்களுக்குத் தெரியுமா? 

பழங்காலத்தில் மக்கள் நீரை எவ்வாறு சேமித்தனர்? 

பழங்காலத்தில் மக்கள் ஏரி, கிணறு, நீர்த்தொட்டிகள், குளம், நீர்த்தேக்கம், அணை போன்றவற்றில் நீரைச் சேமித்தனர்.

ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும்.


IV. நீர்நிலைகளைப் பாதுகாத்தல்


பூமியில் நமக்குக் கிடைக்கும் நீர் அனைத்தும் மழை மூலமாகவே கிடைக்கிறது. மழைப்பொழிவின்போது சிறிதளவு நீர், நிலத்தின்மீது விழுந்து வழிந்தோடி ஓடை மற்றும் ஆறாக மாறுகிறது. குறைந்த, தாழ்வான பகுதிகளான குளங்கள் மற்றும் ஏரிகளில் நீர் சேகரிக்கப்படுகிறது. ஆற்றின் குறுக்கே அணைகட்டுவதன் மூலம் அதன் ஓட்டம் தடுக்கப்பட்டு நீர் சேகரிக்கப்படுகிறது. மேலும், சிறிதளவு மழைநீர் நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீராகிறது.

ஏரி

நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர் நிரம்பிய ஒரு பகுதியே ஏரி எனப்படும். பொதுவாக, இது நதியின் ஒரு பகுதியாகவோ அல்லது வேறு ஏதேனும் நீர் ஆதாரத்தின் பகுதியாகவோ இருக்கலாம்.

குளம்

தேங்கி நிற்கும் நீர் குளம் எனப்படும். இது இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ இருக்கலாம். இது அளவில் ஏரியைவிட சிறியது.

நீர்த்தேக்கங்கள்

குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் அல்லது பெரியநதி இல்லாத பகுதிகளில் நீர்த்தேக்கங்கள் கட்டப்படுகின்றன. பெரும்பாலான நீர்த்தேக்கங்கள் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி கிராமத்தில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.

நீர்த்தேக்கத் தொட்டி

இது நமது அன்றாட பயன்பாட்டிற்கான நீரைச் சேமிப்பதற்கான ஒரு கொள்கலன் ஆகும்.


நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள்

குளங்கள் மற்றும் ஏரிகளை ஆழமாக்குவது. 

ஏரி மற்றும் குளத்தின் கரைகளில் மரங்களை நடுவது. 

நீர் மாசுபடுவதைக் குறைப்பது. 

ஒரே இடத்தில் அதிகமான கிணறுகளைத் தோண்டுவதைத் தவிர்ப்பது. 

கலந்துரையாடுவோமா! 

காடுகளில் உள்ள மரங்கள் தாங்கள் வளர்வதற்குத் தேவையான தண்ணீரை எங்கிருந்து பெறுகின்றன?


நீர் தேங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்

நோயைப் பரப்பும் கொசுக்களுக்கு தங்கள் இனத்தைப் பெருக்கும் இடமாக நீர் தேங்குமிடம் விளங்குகிறது. மலேரியாவும் டெங்கு காய்ச்சலும் குறிப்பிடத்தக்க நோய்களாகும். 

அசுத்தமான நீரைப் பருகுவதால் நீர் மூலம் பரவும் நோய்களான காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்றவை ஏற்படுகின்றன.

டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள்:

கடுமையான தலைவலி 

கை, கால்களில் தடிப்பு (Rashes)

அதிக சோர்வு

திடீர் காய்ச்சல் - 3 முதல் 7 நாள்களுக்கு மேல் நீடிக்கும்



அசுத்தமான நீரைப் பருகுவதால் என்ன நிகழும் என்பதை உங்கள் நண்பர்களுடன்  கலந்துரையாடி எழுதுக.

காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படும்.

விடையளிப்போமா! 

அ. கீழ்க்காண்பனவற்றுள் நீரைச் சேமிக்கும் சரியான செயல்களுக்கு () குறியும், தவறான செயல்களுக்கு ( X ) குறியும் இடுக.

1. நாம் தினமும் நமது வாகனங்களைக் கழுவ வேண்டும். (X)

2. அதிக மரங்களை நடுவது மழைப் பொழிவினை ஏற்படுத்தும். ()

3. நீர்த்தூவி குழாயில் (Shower) குளித்தால் நீரைச் சேமிக்கலாம். ()

4. மழைநீரைச் சேகரிப்பது அவசியம். ()

ஆ. படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி.


நாம் இவற்றில் நீர் நிரப்பும்பொழுது, 

1. எது குறைந்த அளவு நீரைக் கொண்டிருக்கும்? ஆ. டம்ளர்

2. எது அதிக அளவு நீரைக் கொண்டிருக்கும்? அ. வாளி

3. எப்படி அவ்வாறு கூற முடியும்? வாளியின் கன அளவு அதிகம்

செய்வோமா!

பல்வேறு செயல்களுக்குப் பயன்படும் நீர் ஆதாரங்களைப் பின்வரும் அட்டவணையில் () குறியிட்டு காட்டுக.


பொது வளங்களான நீர் நிலைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.




Tags : Term 2 Chapter 2 | 3rd Science இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 2 Unit 2 : Water : Water Term 2 Chapter 2 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : நீர் : நீர் - இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : நீர்