இந்தியா - வளங்கள் மற்றும் தொழிலகங்கள் | புவியியல் | சமூக அறிவியல் - பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும். | 10th Social Science : Geography : Chapter 5 : India - Resources and Industries
V. பின்வரும் வினாக்களுக்கு
விரிவான விடையளிக்கவும்.
1. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி
எழுதுக.
• மும்பை மற்றும் அதன் புறநகர்பகுதியில் பருத்தியாலைகள் செரிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் “மான்செஸ்டர்” என்று அழைக்கப்படுகிறது.
• மகாராஷ்டிரம், குஜராத்,
மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகிறது.
• தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி
நெசவாலைகள் உள்ளன.
• இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
• தமிழ்நாட்டில் உள்ள 435 நெசவாலைகளில் 200 நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதிகளில்
அமைந்துள்ளன.
• ஈரோடு, திருப்பூர்,
கரூர், சென்னை, திருநெல்வேலி,
மதுரை, தூத்துக்குடி, சேலம்
ஆகியன முக்கிய நெசவாலை நகரங்கள் ஆகும்.
2. இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்
பற்றி எழுதுக.
• மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்.
• தொழிலகங்கள் நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை.
• கடன் பெருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.
• கடனுக்கான அதிக வட்டி விகிதம்.
• மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
• ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சிகள் இல்லாமை.
• தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.