தமிழகத்தில் வேளாண்மை | பொருளியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Economics: Tamil Nadu Agriculture
IV. குறுகிய வினாக்களுக்கு விடையளி.
1.
உணவுப்
பயிர்களுக்கு
இரண்டு
எடுத்துக்காட்டுகளும்,
உணவல்லாத
பயிர்களுக்கு
இரண்டு
எடுத்துக்காட்டுகளும்
எழுதுக.
விடை:
உணவுப் பயிர்கள் :
1. நெல்,
2. சோளம்
உணவல்லாத பயிர்கள் :
1. தென்னை ,
2. பருத்தி
2.
பயிர்கள்
பயிரிடப்படும்
பரப்பளவு
மாறுவதற்கான
காரணிகள்
யாவை?
விடை:
• தமிழகத்தில் பயிர் செய்யப்படும் பரப்பளவு 4544000 ஹெக்டேர்கள் ஆகும். இப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு மாறும்.
• மழைப்பொழிவு காலத்தில் போதுமான மழை இருந்தால் இப்பரப்பு கூடும்.
• மழை பொய்த்தாலோ, குறைந்தாலோ இப்பரப்பு குறையும், இவ்வாறு பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு மாறுவதற்கான முக்கியக் காரணி மழைப் பொழிவு ஆகும்.
3.
நிலத்தடி
நீரின்
அளவையும்,
தன்மையையும்
யாரால்
கண்காணிக்கப்படுகிறது?
விடை:
• நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் கண்காணிக்கிறது.
4.
பயிர்களின்
விளைச்சல்
எதனைச்
சார்ந்து
இருக்கிறது?
விடை:
• பயிரிடப்படும் நிலப்பரப்பு
• நிலத்தடி நீர்
• மழைப்பொழிவு
• நீர் இருப்பு
• காலநிலை
• சந்தைவிலை
• உற்பத்தித்திறன்
5.
சிறு
மற்றும்
குறு
விவசாயிகளை
வேறுபடுத்துக.
விடை:
சிறு விவசாயிகள்:
1 1-2 ஹெக்டேர் நிலப் பரப்பில் சாகுபடி செய்வோர் சிறுவிவசாயிகள் ஆவர்.
2 மொத்த விவசாயிகளில் 14 விழுக்காட்டினர் சிறு விவசாயிகள் ஆவர்
3 மொத்த நிலப்பரப்பில் 26 விழுக்காடு நிலத்தில் விவசாயம் செய்கின்றனர்.
குறு விவசாயிகள்:
1. ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர் குறு விவசாயிகள் ஆவர்.
2. மொத்த விவசாயிகளில் 78 விழுக்காட்டினர் குறு விவசாயிகள் ஆவர்.
3. மொத்த நிலப்பரப்பில் 36 விழுக்காடு நிலத்தில் விவசாயம் செய்கின்றனர்.