Home | 4 ஆம் வகுப்பு | 4வது அறிவியல் | கேள்விகள் மற்றும் பதில்கள்

நீர் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு அறிவியல் - கேள்விகள் மற்றும் பதில்கள் | 4th Science : Term 2 Unit 2 : Water

   Posted On :  01.09.2023 10:32 pm

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர்

கேள்விகள் மற்றும் பதில்கள்

4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், மதிப்பீடு, சரியான விடையைத் தேர்ந்தெடு, கோடிட்ட இடத்தை நிரப்புக, சரியா அல்லது தவறா எனக் கூறுக, பொருந்தாத ஒன்றை வட்டமிடு, பொருத்துக, சுருக்கமாக விடையளி, விரிவாக விடையளி, உயர் சிந்தனை வினாக்கள்.

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பூமியில் நீர் மிகவும் ----------- வளமாகும்.

) விலை மதிப்புள்ள

) திட

) வாயு

[விடை : ) விலை மதிப்புள்ள]

 

2. நீரானது ----------- நிலைகளில் காணப்படுகிறது.

) இரண்டு

) மூன்று

) நான்கு

[விடை : ) மூன்று]

 

3. நீரானது ------------ வெப்பநிலைக்குக் கீழ் உறைந்து பனிக்கட்டியாக மாறுகிறது.

) 10°C

) 100°C

) 0°C

[விடை : ) 0°C]

 

4. நீரானது நீராவியாக மாறும் முறை ---------- ஆகும்.

) சுருங்ககல்

) ஆவியாதல்

) உறைதல்

[விடை : ) ஆவியாதல்]

 

5. சுற்றுப்புறத்திலுள்ள உயிரினங்களின் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது எது?

) மிதிவண்டி

) நீர் சுழற்சி

) நீரின் மறுசுழற்சி

[விடை : ) நீர் சுழற்சி]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. நீரானது வெப்பப்படுத்தப்படும்போது -------------- [பனிக்கட்டி / நீராவி) ஆக மாறுகிறது.

விடை : நீராவி

2. நீரானது --------- (வெப்பப்படுத்துவதால் / உறைவதால்) பனிக்கட்டியாக மாறுகிறது.

விடை : உறைவதால்

3. நீர்த் திவலைகள் இணைவதால் --------- (மழை / மேகம்) உருவாகிறது.

விடை : மேகம்

4. நீர் சுழற்சியானது ----------  (நீர்த்தொட்டி / நிலத்தடிநீர்) அளவை அதிகரிக்கிறது.

விடை : நிலத்தடிநீர்

5. ----------- (மேற்கூரை நீர் சேகரிப்பு / நீர் சுழற்சி) மழைநீர் சேகரிப்பு முறைகளுள் ஒன்றாகும்.

விடை : மேற்கூரை நீர் சேகரிப்பு

 

III. சரியா அல்லது தவறா என எழுதுக.

1. பொருள்களின் அனைத்து நிலைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது நீர் ஆகும்.

விடை : சரி

2. பூமியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது நீர் சுழற்சி ஆகும்.

விடை : சரி

3. வெப்பப்படுத்துவதால் நீர் நீராவியாக மாறுவது ஆவியாதல் எனப்படும்.

விடை : சரி

4. நமது மூளை தனது நிறையில் 37% நீரைக் கொண்டுள்ளது.

விடை : தவறு

5. மேற்கூரை நீர்சேகரிப்புமுறை வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.

விடை : தவறு

 

IV. சுருக்கமாக விடையளி.

1. நீரின் நிலைகளை எழுதுக.

விடை:

பனிக்கட்டி (திண்மம்), நீர் (திரவம்), நீராவி (வாயு)

 

2. உறைதல் என்றால் என்ன?

விடை:

ஒரு திரவப் பொருள் குளிர்ச்சியினால் திண்மப் பொருளாக மாறுவது உறைதல் எனப்படுகிறது.

 

3. நீர் சுழற்சியில் உள்ள முறைகளை எழுதுக.

விடை:

ஆவியாதல்

சுருங்குதல்

வீழ்படிவாதல்

மீண்டும் கடலை அடைதல்

 

4. 2001ஆம் ஆண்டில் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்கிய மாநிலம் எது?

விடை:

தமிழ்நாடு

 

5. மழைநீர் சேகரிப்புக் குழி அமைக்கத் தேவையானவை எவை?

விடை:

சிறிய கற்கள், பெருமணல்.

 

V. விரிவாக விடையளி.

1. நீர் சுழற்சி என்றால் என்ன? நீர் சுழற்சியின்முக்கியத்துவங்களுள் எவையேனும் மூன்றினை எழுதுக.

விடை:

● “ஆவியாதல், சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் போன்ற முறைகளினால் நீரில் ஏற்படும் தொடர்ச்சியான சுழற்சியே நீர் சுழற்சி எனப்படுகிறது.நீர் சுழற்சியின் முக்கியத்துவம்

நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கிறது.

பூமியின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துகிறது.

தாவரங்கள் மற்றும் விலங்குகள் முக்கியமாக மனிதர்களுக்கு நீர் கிடைக்கச் செய்கிறது.

பூமியில் தொடர்ந்து நீர் காணப்படுவதை உறுதிசெய்ய நீர் சுழற்சி அவசியமாகிறது.

 

2. மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன? மழைநீர் சேகரிப்பின் நன்மைகளை எழுதுக.

விடை:

எதிர்காலப் பயன்பாட்டிற்காக மழைநீரைச் சேகரித்து, சேமித்து வைக்கும் முறைக்கு மழைநீர் சேகரிப்பு என்று பெயர். இயற்கையான நீர்நிலைகள் அல்லது செயற்கையான தொட்டியில் மழை நீரானது சேகரிக்கப்படு கிறது. கட்டடங்களின் மேற்கூரையிலிருந்து மழைநீரைச் சேகரிப்பதும் ஒரு வகையான மழைநீர் சேகரிப்பாகும்.

மேற்கூரையிலிருந்து மழைநீரானது குழாய்களின் வழியாகப் பூமிக்குள் செலுத்தப்படுகிறது. நீரானது குழாய்களின் வழியாக கற்களாலும், பெருமணலாலும் நிரப்பப்பட்டுள்ள குழிகளுக்குள் செல்கிறது. இவ்வாறு செல்லும்போது அதிலுள்ள அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.

வேளாண்மைக்குப் பயன்படுகிறது.

வாழும் உயிரினங்களுக்கு நீர் கிடைக்க வழிவகுக்கிறது.

 

VI. கீழே தரப்பட்டுள்ள படத்திற்கு வண்ணம் தீட்டி தேவையான இடத்தில் கீழ்க்காணும் பெயர்களை எழுதுக.

(சுருங்குதல், ஆவியாதல், நீர் நிலைகள், வீழ்படிவாதல்)



 

VII. செயல்திட்டம்.

மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைந்துள்ள வீட்டு மாதிரியைச் செய்து வருக.



செய்து கற்போம்

கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து அப்பொருள்களின் நிலையை எழுதுக.

(திண்மம்திரவம்வாயு)


கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களைச் சரியான விடையைக் கொண்டு நிரப்புக.

(திரவம்திண்மம்உருகதல்உறைதல்குளிர்தல்வெப்பப்படுத்துதல்வாயு


விடையளிப்போம்

1. பொருள்களின் மூன்று நிலைகளுக்கும் நீர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது ஏன்?

விடை:

இது பூமியில் திண்ம நிலையில் பனிக்கட்டியாகவும்திரவநிலையில் நீராகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது.

பூமியில் பனிக்கட்டி ஆர்ட்டிக் பகுதிகளிலும்நீர் அனைத்து நீர் நிலைகளிலும்நீராவி மேகங்களிலும் உள்ளது. இதனால் நீர் பூமியில் மூன்று நிலைகளிலும் உள்ளது என்பது தெளிவாகிறது.

2. கீழ்க்காண்பனவற்றுள் எது திரவ நிலையில் உள்ளது?

மழை / பனிக்கட்டி / பனித்துளி

விடை : மழை

செய்து கற்போம்

 ஒரு தட்டில் நீரை ஊற்றிஅதை உறையவைப்பானில் (freezer) வைக்கவும். சில மணி நேரத்திற்குப் பின் வெளியே எடுக்கவும் நீரில் என்ன மாற்றம் நடைபெற்றிருக்கும்?

விடை:

நீர் பனிக்கட்டி எனும் திண்மமாக உறைந்திருக்கும்.

 இப்பொழுது அந்த பனிக்கட்டியை அப்படியே மேசையின் மீது சிறிது நேரம் வைக்கவும். பனிக்கட்டிக்கு என்ன நிகழ்கிறது?

விடை:

பனிக்கட்டி உருகி நீர் எனப்படும் திரவமாக மாறிவிடுகிறது.

 அந்தத் தட்டிலுள்ள நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். வீட்டிலுள்ள பெரியவர்களின் உதவியுடன் அந்தப் பாத்திரத்தை வெப்பப்படுத்தவும். நீர் கொதிக்கும்போது பாத்திரத்தின் வாய்ப்பகுதியை உற்றுநோக்கவும் நீங்கள் காண்பது என்ன?

விடை:

நீர் வெப்பத்தால் நீராவியாக மாறி வாயுவாக வெளி வருகிறது.


சிந்தித்து விடையளி

ஈரமான துணியை உலர்த்தும்போது அதிலுள்ள நீர் என்னவாகிறது?

விடை:

அது  வெளியில் உள்ள வெப்பத்தால் ஆவியாகி வெளியேறுகிறது.

விடையளிப்போம்

சரியான விடையைத் தேர்வு செய்க.

நீர் சுழற்சியில் -----------

அ) ஆவியாதல் மட்டும் நிகழ்கிறது

ஆ) உறைதல் மட்டும் நிகழ்கிறது

இ) ஆவியாதல்சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் நிகழ்கின்றன.

விடை : இ) ஆவியாதல்சுருங்குதல் மற்றும் வீழ்படிவாதல் நிகழ்கின்றன.


விடையளிப்போம்

1. சொற்களிலுள்ள எழுத்துகளைச் சரியாக முறைப்படுத்திகோடிட்ட இடங்களில் எழுதுக. (தருங்கல்கு,ஆல்வியாதடிவீபழ்ல்தா

விடை:

சுருங்குதல்ஆவியாதல்வீழ்படிவாதல்

2. வேளாண்மைக்கு நீர் சுழற்சி அவசியமானதா?

விடை: ஆம்

3. மனிதர்களுக்கு நீர் சுழற்சி ஏன் அவசியமாகிறது? .

விடை:

நீர் சுழற்சியால் மனிதர்கள் உயிர் வாழத் தேவையான நீர் கிடைக்கிறது.

4. குளிர்ந்த நீர் உள்ள குவளைகளின் வெளிப்பரப்பில் நீர்த்திவலைகள் தோன்றும் நிகழ்வின் பெயர் என்ன?

விடை: சுருங்குதல்


விடையளிப்போம்

1. மழைநீர் சேகரிப்பின் இதர பயன்களைப் பட்டியலிடுக.

விடை:

 கோடை காலங்களில் நமக்கு நீர் கிடைக்கிறது.

 தாவரங்கள்பிற உயிரினங்கள் வாழத் தேவையான நீர் தொடர்ந்து கிடைக்கிறது.

2. உமது பள்ளியில் மழைநீரைச் சேமிக்க சில வழிமுறைகளைக் கூறுக.

விடை:

 மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும்.

 பள்ளிக் கூரையிலிருந்து விழுகின்ற மழை நீரை வீணாக்காமல் தொட்டிக்குள் செலுத்த வேண்டும்.

செய்து கற்போம்

பள்ளி / வீட்டில் மழைநீர் சேகரிக்கும் குழி அமைத்திட சில வழிகாட்டுதல்கள்.

ஏதேனும் ஓர் அளவு மற்றும் வடிவத்தில் மழைநீர் சேகரிப்புக் கழியை அமைக்கலாம். பொதுவாக 1 - 2 மீட்டர் அகலம் மற்றும் 2 - 3 மீட்டர் ஆழம் கொண்டதாக அது அமைக்கப்படலாம். இந்தக் குழிகளைகற்கள் மற்றும் பெருமணல் கொண்டு நிரப்பவேண்டும்.


அடிப்பகுதியில் பெருங்கற்களையும்நடுவில் சிறுகற்களையும்மேற்புறத்தில் மணலையும் இட்டு நிரப்பவேண்டும்.

Tags : Water | Term 2 Chapter 2 | 4th Science நீர் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு அறிவியல்.
4th Science : Term 2 Unit 2 : Water : Questions with Answers Water | Term 2 Chapter 2 | 4th Science in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர் : கேள்விகள் மற்றும் பதில்கள் - நீர் | பருவம் 2 அலகு 2 | 4 ஆம் வகுப்பு அறிவியல் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : நீர்