நகராட்சி மற்றும் மாநகராட்சி | பருவம் 1 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 1 Unit 3 : Municipality and Corporation
மதிப்பீடு
அ .கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தமிழ்நாட்டின் மிகப்பழைமையான மாநகராட்சி சென்னை
ஆகும்.
2. உள்ளாட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர். ரிப்பன் பிரபு
3. 1957 ஆம் ஆண்டு பல்வந்த்ரா ராய் மேத்தா குழு
அறிக்கையின்படி இந்தியாவில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
4. நகராட்சியின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
ஆ. பொருத்துக.
1. கிராமப்புற உள்ளாட்சி - குடவோலை
2. ரிப்பன் கட்டிடம் - நகரியம்.
3. நெய்வேலி - கிராம ஊராட்சி
4. பேரூராட்சி - மாநகராட்சி
5. மேயர் - ரிப்பன் பிரபு
விடை :
1. கிராமப்புற உள்ளாட்சி - கிராம ஊராட்சி
2. ரிப்பன் கட்டிடம் - ரிப்பன் பிரபு
3. நெய்வேலி - நகரியம்.
4. பேரூராட்சி - குடவோலை
5. மேயர் - மாநகராட்சி
இ. காலி இடங்களை நிரப்புக.
ஈ. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. மாநகராட்சியின்
பணிகள் யாவை?
மாநகராட்சியின் பணிகளாவன:
• நகரச் சாலைகள் அமைத்து பராமரித்தல்.
• குடிநீர் வசதி செய்து கொடுத்தல்.
• குப்பைகளை அகற்றுதல்.
• நூலகங்களை அமைத்துப் பராமரித்தல்.
• பூங்காக்களை அமைத்துப் பராமரித்தல்.
• பிறப்பு மற்றும் இறப்புப் பதிவேடுகளைப் பராமரித்தல்
2. உள்ளாட்சியின்
அமைப்பு பற்றி குறிப்பு வரைக?
3. நகராட்சியின்
தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
நகராட்சியின் தலைவரை மக்களே நேரடியாக வாக்களித்துத்
தேர்ந்தெடுக்கின்றனர்
4. தமிழ்நாட்டில்
மாநகராட்சிகளின் எண்ணிக்கை யாது?
தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 14 ஆகும்.
• சென்னை
• தூத்துக்குடி
• மதுரை
• திருப்பூர்
• கோயம்புத்தூர்
• ஈரோடு .
• திருச்சிராப்பள்ளி
• தஞ்சாவூர்
• சேலம்
• திண்டுக்கல்
• திருநெல்வேலி
• ஓசூர்
• வேலூர்
• நாகர்கோவில்
5. நகராட்சியின்
வருவாய் ஆதாரங்கள் யாவை?
• மத்திய, மாநில அரசு வழங்கும் நிதி.
• வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் வரி, கடை வரி,
சாலை வரி மற்றும் கழிவுநீர் அகற்றல் வரி.