Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 2 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 2 Chapter 2 : Nagarigam panbadu

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆழ்வோம்

 

கேட்டல்

 நாள்தோறும் வழிபாட்டுக்கூடத்தில் சொல்லப்படும் திருக்குறளைக் கேட்டறிக.

 வானொலிதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகும் கட்டடக்கலைகள் பற்றிய செய்திகளைக் கேட்டு அறிந்துகொள்க.

 

பேசுதல்

 நீங்கள் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் குறித்து 5 மணித்துளி பேசுக.

விடை

வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் :

அனைவருக்கும் வணக்கம்!

நான் கண்டுகளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் மதுரைஇம்மதுரை தூங்கா நகர்கோவில் நகர்தமிழர் நாகரிகத் தொட்டில்தென்னிந்தியாவின் ஏதென்சுதமிழ் வளர்த்த நகரம் என்றெல்லாம் சிறப்பிக்கப் பெறுகிறது.

மதுரை என்றாலே முதலில் நினைவிற்கு வருவது மீனாட்சியம்மன் கோவில்இக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளதுசிலைகள்ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் எனக் காட்சிப் பொருள்கள் ஏராளமாக உள்ளன.

மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மதுரை நகரின் நடுவில் அமைந்து மதுரைக்கே அழகூட்டுகிறதுஇராமர்லட்சுமணர்இந்திரன்தேவர்கள் போன்றவர்களால் வழிபடப்பட்ட பெருமைக்குரியதுமீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பகுளம் உள்ளதுஇக்குளத்திலிருந்து திருமலை நாயக்கர் மகாலுக்குச் செல்வதற்குச் சுரங்கப்பாதை இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருமலை நாயக்கர் மகால் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டதுஇது கலைநயத்தில் தாஜ்மகால்’ போன்றதுஅந்த மகாலில் மிகச்சிறந்த ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளனஅதில் அமைந்துள்ள தூணின் உயரம் 82 அடிசுற்றளவு 19 அடி ஆகும்.

அடுத்ததாக நாங்கள் பார்த்தது காந்தி மியூசியம்இவ்விடம் இராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்த இடம் ஆகும்இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய ஆடைகள்கடைசியாக அவர் அணிந்திருந்த உடை ஆகியவை இடம்பெற்றுள்ளனநல்ல நூலகம் ஒன்றும் அமைந்துள்ளது.

மதுரைக்கு அருகே திருப்பரங்குன்றம் சென்றோம்இது ஒரு குகைக் கோவில்ஒரே கல்லில் குடைந்த கோவில் ஆகும்மதுரையில் இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன.

 

 நற்பண்புகள் கொண்ட சான்றோர் ஒருவரைப்பற்றி 5 மணித்துளி பேசுக.

விடை

அனைவருக்கும் காலை வணக்கம்!

நான் பாலம் என்ற அமைப்பை நடத்திவரும் பாலம் கல்யாணசுந்தரம்’ அவர்களைப் பற்றிக் கூறவிருக்கிறேன்.

இவர் திருநெல்வேலி மேலக்கருவேலங்குளம் என்ற ஊரில் 1940ஆம் ஆண்டில் பிறந்தவர்தமிழ்மீது பற்றுக் கொண்டவர்கல்லூரியில் வேறு பாடம் எடுக்கச் சொல்லி வற்புறுத்தினாலும் அவர் தமிழையே படித்தவர்.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கலைக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இவர் முப்பத்தைந்து ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காகச் செலவிட்டுத் தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் உணவு பரிமாறுபவராக வேலை பார்த்தவர்அவர் ஈட்டிய மொத்த வருவாயைக் கொடுத்து வரலாறு படைத்தவர்.

இவரைப் போன்று உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த எவரும் செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” என்ற விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 6.5 மில்லியன் டாலர் (இந்தியப் பணம் 30 கோடிபரிசாகப் பெற்றவர்அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியவர்.

குடும்பப்பங்காகக் கிடைத்த ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புடைய சொத்தைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து மகிழ்வுற்றவர்ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்து கொள்ள ஏழு ஆண்டுகள் நடைபாதைவாசியாக வாழ்ந்தவர்.

தனக்கென வாழாமல் பிறருக்கென வாழும் அவரைப் போற்றுவோம்அவரைப் போல நாமும் நற்பண்புகளுடன் வாழ்வோம் என்று உறுதியேற்போம்.

 

படித்தல்

 திருக்குறளைப் பொருள் விளங்கப் படித்துக்காட்டுக.

 புத்தகப் பூங்கொத்தில் விளையாட்டுகள் தொடர்பான கதைகளைப் படித்துக்காட்டுக.

 

எழுதுதல்

1. சொல்லக் கேட்டு எழுதுக.

1. பண்பு உடையவராக வாழ்தல் நல்வழியாகும்.

2. திருக்குறள் உலகப்பொதுமறை என்றழைக்கப்படுகிறது.

3. கங்கை கொண்ட சோழபுரம் உலகப் பாரம்பரியச் சின்னமாகும்.

 

2. தொடரில் அமைத்து எழுதுக.

1. வெற்றி – குமரன் மல்யுத்த போட்டியில் முதல் பரிசு பெற்று வெற்றி வாகை சூடினான்.

2. நாகரிகம் – தனக்கென்று தனித்த நாகரிகமும் பண்பாடும் உடையது தமிழ் மரபு.

3. உழவுத்தொழில் – கண்ணன் தன் விடாமுயற்சியால் உழவுத்தொழிலில் வளம் பெருக்கினான்.

4. கலையழகு – கண்ணன் வரைந்த ஓவியம் கலையழகின் மொத்த உருவமாகும்.

 

3. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக,

அரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை படைத்திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான்புறப்பகையை ஒழிப்பான்முன்னாளில் தேர்ப்படையானைப்படைகுதிரைப்படைகாலாட்படை என்னும் நாற்படையுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப்பெற்றான்நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படைபோர்க்களத்தில் வீறுகொண்டு செம்போர் விளைப்பதும்மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப்படையே ஆகும்வலிமை சான்ற அழகிய யானைபட்டத்து யானை என்று பெயர் பெற்றதுஉயர்ந்த மேனியும்ஓங்கிய நடையும்சிறந்த கொம்பும்பரந்த அடியும்சிறிய கண்ணும்செந்நிற வாயும் உடைய யானையே அப்பதவிக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1. நால்வகைப் படைகள் யாவை?

விடை

தேர்ப்படையானைப்படைகுதிரைப்படைகாலாட்படை.

2. நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது எது?

விடை

நால்வகைப் படைகளுள் ஏற்றமும் தோற்றமும் பெற்றது யானைப்படை.

3. மாற்றார் என்னும் சொல்லின் பொருள் யாது?

விடை

மாற்றார் என்னும் சொல்லின் பொருள் பகைநாட்டரசர் (பகைவர்).

4. உரைப்பகுதியில் இடம்பெற்றுள்ள வருணனைச் சொற்களை எடுத்து எழுதுக.

விடை

உயர்ந்த மேனியும்ஓங்கிய நடையும்சிறந்த கொம்பும்பரந்த அடியும்சிறிய கண்ணும்செந்நிற வாயும்.

5. காலாட்படை – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.

விடை

கால் + ஆள் + படை.

 

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. மக்களுக்கு உரிய பண்பில்லாதவர் மரத்தைப் போன்றவர் என வள்ளுவர் கூறுகிறார்.

2. கங்கை கொண்ட சோழபுரம் கங்காபுரி என்று புலவர்களால் போற்றப்பட்டது.

3. கம்பைக் குறிக்கும் வீரக்கலை சிலம்பாட்டம் ஆகும்.

 

5. பிறமொழிச் சொற்களையும் பேச்சுத்தமிழையும் நீக்கிச் சரியாக எழுதுக.

1. டுமாரோ ஈவினிங் என் ஸிஸ்டர் ஊருக்குப் போவா.

நாளை மாலை என் தங்கை ஊருக்குச் செல்வாள்.

2. ஷேர் ஆட்டோவில பைவ் பாசுஞ்சர்ஸ் இருக்காங்க.

விடை : பகிர் தானியங்கியில் ஐந்து பயணிகள் இருக்கிறார்கள்.

3. என் வீட்டில் வாசிங் மிஷின் ரிப்பேராக இருக்கு.

விடை : என் வீட்டில் சலவை இயந்திரம் பழுதாகி இருக்கிறது.

 

6. பொருத்துக,


 

7. பாடலை நிறைவு செய்க


திருவிழாவாம் திருவிழா

எங்கள் ஊர்த் திருவிழா

ஊர் கூடும் திருவிழா

உறியடிக்கும் திருவிழா


விடை

பெண்கள் கூடும் திருவிழா

கும்மியடிக்கும் திருவிழா

கரகமாடும் திருவிழா

கொண்டாடும் திருவிழா.

 

8. கீழ்க்காணும் குறட்பாக்களிலுள்ள சொற்களைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்துக.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு,

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புஉடைமை என்னும் வழக்கு

விடை

உயிர் எழுத்து இடம்பெறாத சொற்கள்

 நயனொடு

 நன்றி

 புரிந்த

 பயனுடையார்

 பண்புபா

 ராட்டும்

 குடிப்பிறத்தல்

 வழக்கு

மெய் எழுத்து இடம்பெறாத சொற்கள்

 உலகு

 நயனொடு


நிறுத்தக்குறிகளை அறிந்து கொள்வோம்

காற்புள்ளி ( , )

ஒரு தொடரில் பல பொருள்கள் அடுக்கி வரும்போது குறிக்கப்படுவது.

மாபலாவாழை ஆகியவற்றை முக்கனி என்பர்.

அரைப்புள்ளி ( ; )

ஓர் எழுவாய்பல பயனிலைகளைப் பெற்று வரும்போதுஒவ்வொரு பயனிலையின் இறுதியிலும் குறிக்கப்படுவது.

(.கா.) காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மைவாலைப் பிடித்தல் தாழ்மை.

முற்றுப்புள்ளி ( . )

ஒரு தொடர் முடிவு பெற்றதனை உணர்த்துவதற்காகக் குறிக்கப்படுவது.

(.கா.) எனக்கு மட்டைப்பந்து விளையாடப் பிடிக்கும்,

வினாக்குறி ( ? )

ஒரு தொடர் வினாப்பொருளைத் தரும்போது,? குறிக்கப்படுவது.

(.கா.) அப்பா என்னால் பறக்க முடியாதா?

உணர்ச்சிக்குறி ( ! )

ஒரு தொடர் உணர்ச்சியை வெளிப்படுத்துமானால் குறிக்கப்படுவது.

(.கா.) என்னேகங்கை கொண்ட சோழபுரக் கோவிலின் அழகு!

ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ‘ )

ஒரு தொடரில் நூல் பெயர்கட்டுரை பெயர்பழமொழி முதலியன வந்தால் குறிக்கப்படுவது,

(.கா.) பிரபஞ்சனின் படைப்புகளுள் 'வானம் வசப்படும்என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.

இரட்டை மேற்கோள் குறி (“ “ )

ஒரு தொடரில் ஒருவர் கூறியதை நேர்கூற்றாகக் கூறும்போதும்ஒரு தொடரை மேற்கோளாகப் பயன்படுத்தும் போதும் குறிக்கப்படுவது.

(.கா.) "கண்வனப்பு கண்ணோட்டம்என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது.

 


மொழியோடு விளையாடு

 

1. சுழலட்டையைப் பயன்படுத்திக் குறிப்புகளுக்கு விடை எழுதுக.


1உடலுறுப்புகளுள் ஒன்று கண்

2உப்புநீர் அதிகம் உள்ள இடம் கடல்

3 . அழியாத செல்வம் கல்வி

4பொருள்கள் வாங்கும் இடம் கடை

5சமையலுக்குப் பயன்படுவது கடுகு

6வீடு கட்டப் பயன்படுவது கல்

7ஓவியம் என்பது கலை 

8பாரதியார் இயற்றியவை கவிதை

 

2. நீக்குவோம்சேர்ப்போம்!

1. விதையில் ஓரெழுத்தை நீக்கிவேறோர் எழுத்தைச் சேர்க்க.


2சபையில் ஓரெழுத்தை நீக்கிவேறோர் எழுத்தைச் சேர்க்க.


3. விலையில் ஓரெழுத்தை நீக்கிவேறொர் எழுத்தைச் சேர்க்க.கரம்


4ஆசையில் ஓரெழுத்தை நீக்கிவேறோர் எழுத்தைச் சேர்க்க.


5கடையில் ஓரெழுத்தை நீக்கிவேறோர் எழுத்தைச் சேர்க்க,


 

 

நிற்க அதற்குத் தக...



 பிற உயிரினங்களின் மீது அன்பு காட்டுவேன்.

 விளையாட்டுஉடலுக்கும் மனத்திற்கும் நல்லது என அறிந்துகொண்டேன்.

 நீர்த்தேக்கங்கள்வேளாண்மைக்கு உயிர் என்பதைப் புரிந்துகொண்டேன்.

 

அறிந்து கொள்வோம்

பண்பு

 தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கைதுன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று

 

 

செயல் திட்டம்


தமிழர் கலைகள் குறித்துச் செய்தித்தாளில் படங்களையும் செய்திகளையும் தொகுத்து வருக.

 


கற்பவை கற்றபின்

 

 புத்தகப் பூங்கொத்து கதையொன்றில் இடம்பெற்றிருக்கும் இணைப்புச்சொற்களைக் கண்டறிக.

 வீட்டிலோ பள்ளியிலோ பிறர் பேசும்போதுஎன்னென்ன இணைப்புச்சொற்களைப் பயன்படுத்துகின்றனர்அவற்றைப் பட்டியலிடுக.

Tags : Term 2 Chapter 2 | 5th Tamil பருவம் 2 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 2 Chapter 2 : Nagarigam panbadu : Tamil Language Exercise - Questions and Answers Term 2 Chapter 2 | 5th Tamil in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 2 இயல் 2 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : நாகரிகம், பண்பாடு