நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 10 : Changes Around Us

   Posted On :  09.09.2023 10:49 pm

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்

வினா விடை

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. காகிதம் எரிதல் என்பது ஒரு -------------- மாற்றம்

அ) இயற்பியல்

ஆ) வேதியியல்

இ) இயற்பியல் மற்றும் வேதியியல்

ஈ) நடுநிலையான.


விடை: ஆ) வேதியியல்

 

2. தீக்குச்சி எரிதல் என்பது ------------------- அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

அ) இயல் நிலையில் சேர்தல்

ஆ) மின்சாரம்

இ) வினைவேக மாற்றி

ஈ) ஒளி


விடை: அ) இயல் நிலையில் சேர்தல்

 

3. -------------- உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.

அ) வெள்ளீயம்

ஆ) சோடியம்

இ) காப்பர்

ஈ) இரும்பு


விடை: ஈ) இரும்பு

 

4. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி -----------

அ) நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு

ஆ) மெலனின்

இ) ஸ்டார்ச்

ஈ) ஓசோன்         

                

விடை: ஆ) மெலனின்

 

5. பிரைன் என்பது ---------------- இன் அடர் கரைசல் ஆகும்.

அ) சோடியம் சல்பேட்

ஆ) சோடியம் குளோரைடு

இ) கால்சியம் குளோரைடு

ஈ) சோடியம் புரோமைடு


விடை: ஆ) சோடியம் குளோரைடு

 

6. சுண்ணாம்புக்கல் ----------------- ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.

அ) கால்சியம் குளோரைடு

ஆ) கால்சியம் கார்பனேட்

இ) கால்சியம் நைட்ரேட்

ஈ) கால்சியம் சல்பேட்


விடை: ஆ) கால்சியம் கார்பனேட்

 

7. கீழ்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலைத் தூண்டுகிறது?

அ) வெப்பம்

ஆ) ஒளி

இ) மின்சாரம்

ஈ) வினைவேக மாற்றி


விடை: இ) மின்சாரம்

 

8. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் --------------- வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.

அ) நைட்ரஜன்

ஆ) ஹைட்ரஜன்

இ) இரும்பு

ஈ) நிக்கல்


விடை: இ) இரும்பு

 

9. மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டைஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் --------------------- உருவாக்குகின்றன.

அ) அமிலமழை

ஆ) காரமழை

இ) அதிகமழை

ஈ) நடுநிலைமழை


விடை: அ) அமில மழை

 

10. ---------------------- புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாகின்றன.

அ) கார்பன் டைஆக்சைடு

ஆ) மீத்தேன்

இ) குளோரோ புளூரோ கார்பன்கள்

ஈ) கார்பன் டைஆக்சைடு, மீத்தேன், குளோரோ புளூரோ கார்பன்கள்


விடை: ஈ) கார்பன் டை ஆக்சைடு

 


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1. ஒளிச்சேர்க்கை என்பது ஒளி முன்னிலையில் நிகழும் ஒரு வேதி வினையாகும்.

2. இரும்பாலான பொருள்கள் நீர் மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் துருப்பிடிக்கின்றன.

3. அம்மோனியா தொழிற்சாலைகளில் யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.

4. பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல் குளோரின், ஹைட்ரஜன் வாயுக்களைத் தருகிறது.

5. வினைவேக மாற்றி என்பது ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும் வேதிப்பொருள் எனப்படும்.

6. வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் பாலிபீனால்  ஆக்சிடேஸ் (அ) டைரோசினேஸ் என்ற நொதியாகும்.

 

III. சரியா அல்லது தவறா என் தவறான வாக்கியத்தை திருத்தி எழுதுக.


1. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.

விடை : தவறு - ஒரு வேதிவினை என்பது நிரந்தர வினையாகும்

2. லெட் நைட்ரேட் சிதைவடைதல் ஒளியின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.

விடை : தவறு - லெட் நைட்ரேட் சிதைவடைதல் வெப்பத்தின் உதவியால் நடைபெறும் ஒரு வேதிவினைக்கு எடுத்துக்காட்டாகும்.

3. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பம்கொள் வினையாகும்.

விடை : தவறு - சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச் சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்ப உமிழ் வினையாகும்

4. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும். விடை : சரி

5. வேதிவினைகள் நிகழும் பொழுது ஒளி ஆற்றல் வெளிப்படலாம். விடை : சரி

 

 

IV. பொருத்துக.

 

அ. துருப்பிடித்தல் ஒளிச்சேர்க்கை

மின்னாற்பகுத்தல் ஹேபர் முறை

வெப்ப வேதி வினை இரும்பு

ஒளி வேதி வினை பிரைன்

வினைவேக மாற்றம் சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்

 

விடைகள்

துருப்பிடித்தல் - இரும்பு

மின்னாற்பகுத்தல் - பிரைன்

வெப்ப வேதி வினை - சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்

ஒளி வேதி வினை - ஒளிச்சேர்க்கை

வினைவேக மாற்றம் - ஹேபர் முறை

 

ஆ. கெட்டுப்போதல் சிதைவடைதல்

ஓசோன் உயிரி வினையூக்கி

மங்குதல் ஆக்சிஜன்

ஈஸ்ட் வேதிவினை

கால்சியம் ஆக்சைடு உணவு

 

விடைகள்

கெட்டுப்போதல் - உணவு

ஓசோன் - ஆக்சிஜன்

மங்குதல் - வேதிவினை

ஈஸ்ட் - உயிரி வினையூக்கி

கால்சியம் ஆக்சைடு - சிதைவடைதல்

 

 

V. சுருக்கமாக விடையளி.

 

1. வேதிவினை என்பதை வரையறு.

வேதிவினை என்பது நிரந்தரமான, மீளாத்தன்மையுடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் (வினைபடு பொருள்கள்) வினைக்குட்பட்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை (வினை விளை பொருள்கள்) உருவாக்கக் கூடிய மாற்றமாகும்.

 

2. ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.

வேதிவினை நிகழத் தேவையான நிபந்தனைகள்:

> இயல்நிலையில் சேர்தல்

> கரைசல் நிலையில் உள்ள வினைபடுபொருள்கள்

> மின்சாரம்

> வெப்பம்

> ஒளி

> வினைவேக மாற்றி

 

3. வினைவேக மாற்றம் என்பதை வரையறு.

> வேதிவினைக்கு உட்படாமல் வினையின் வேகத்தை மாற்ற உதவும் வேதிப்பொருட்கள் வினைவேக மாற்றிகள் எனப்படும்.

> வினைவேகமாற்றியினால் வினையின் வேகம் மாறுபடுகின்ற வேதிவினைகள் வினைவேக மாற்ற வினைகள் எனப்படும்.

 

4. ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும்போது என்ன நிகழ்கிறது?

> ஒரு இரும்பு ஆணியை காப்பர் சல்பேட் கரைசலில் வைக்கும் பொழுது காப்பர் சல்பேட் கரைசலின் நீல நிறம் மெதுவாக பச்சை நிறமாக மாறுகிறது. > காரணம், இரும்பு, காப்பர் சல்பேட் கரைசலுடன் வேதி வினைக்கு உட்படுகிறது.

 

5. மாசுபடுதல் என்றால் என்ன?

சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத் தகாத மாற்றங்கள் மாசுபடுதல் எனப்படும்.

 

6. மங்குதல் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

பளபளப்பான உலோகங்கள் மற்றும் பாத்திரங்களின் மேற்பரப்பு, வேதி வினைகளின் காரணமாக பளபளப்புத் தன்மையை இழப்பது மங்குதல் எனப்படும். (எ.கா.) வெள்ளிப் பொருட்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்புக்கு வரும்போது கருமை நிறமுடையதாக மாறுகின்றன.

 

7. பிரைன் கரைசலை மின்னாற்பகுக்கும் பொழுது நிகழ்வது என்ன?

பிரைசன் கரைசலை மின்னாற் பகுக்கும் பொழுது குளோரின், ஹைட்ரஜன் வாயுக்கள் மற்றும் சோடியம் ஹைட்ராக்சைடு ஆகியன உருவாகிறது.

 

8. கால்சியம் கார்பனேட்டை வெட்டப்படுத்தும் பொழுது கால்சியம் ஆக்சைடும், ஆக்சிஜனும் கிடைக்கின்றன. இது வெப்ப உமிழ்வினையா அல்லது வெப்பம் கொள்வினையா?

கால்சியம் கார்பனேட் -> கால்சியம் ஆக்சைடு + கார்பன் டை ஆக்சைடு மேற்கண்ட வினையில் வெப்பம் செலுத்தப்படுவதால் அது வெப்பம் கொள்வினையாகும்.

 

9. ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்ன?

பொதுவாக வினைவேக மாற்றி ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும்.

 

10. ஒளிச்சேர்க்கை ஏன் ஒரு வேதிவினையாகும்?

ஒளிச்சேர்க்கை:

> கார்பன்டை ஆக்சைடு + நீர் -> ஸ்டார்ச் + ஆக்சிஜன்

> வினைபடுபொருள்கள் = கார்பன் டை ஆக்சைடு, நீர்

> வினை விளை பொருள்கள் = ஸ்டார்ச், ஆக்சிஜன்

> வினையூக்கி = சூரிய ஒளி

> வினைபடுபொருள்கள் ஒளி வினையூக்கி முன்னிலையில் வினைபுரிந்து வினைவிளை பொருள்களைத் தருவதால் ஒளிச்சேர்க்கை ஒரு வேதி வினையாகும்.

 

 

VI. விரிவாக விடையளி.

 

1. வேதிவினை மூலம் சுற்றுசூழல் மீது ஏற்படும் விளைவுகளை விளக்குக.

அ) மாசுபடுதல்:

> தொழிற்சாலை செயல்முறைகள் மற்றும் பெருகிவரும் வாகனங்களால் சுற்றுச்சூழலின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள் மாசுபடுதல் எனப்படும்.

> இம்மாற்றங்களுக்குக் காரணமான பொருட்கள் மாசுபடுத்தி எனப்படும்.

> காற்று, நீர் மற்றும் நிலம் மாசுபடுதல் என மூன்று வகைகள் உள்ளன.

> செயற்கையாக தயாரிக்கப்படும் ஏராளமான வேதிப்பொருள்கள், உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

> அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன.


ஆ) துருப்பிடித்தல்:

> நீர் மற்றும் ஆக்சிஜனுடன் இரும்பு உலோகம் புரியும் வேதிவினை துருப்பிடித்தல் எனப்படும்.

> துருப்பிடித்தல் இரும்பு பொருட்களை வலு இழக்கச் செய்கிறது.

இ) உலோகப் பொருட்களின் நிறம் மங்குதல் (கறுத்து போதல்):

> காற்றுடன் புரியும் வேதி வினைகளால் பளபளப்பான உலோக பொருட்களின் நிறம் மங்கி பளபளப்புத் தன்மை குறைகிறது.

> இதனை கறுத்துப் போதல் என்கிறோம்.

> (எ.கா) வெள்ளிப் பொருட்கள் காற்றுடன் வினைபுரிந்து கருமை நிறமாக மாறுகிறது.

> காப்பர் உலோகத்தைக் கொண்ட பித்தளை காற்றில் நீண்ட காலம் வைக்கப்படும் போது காப்பர் கார்பனேட் மற்றும் காப்பர் ஹைட்ராக்சைடின் பச்சை நிற படலத்தை உருவாக்குகிறது.

 

2. உணவுப்பொருள்கள் எவ்வாறு வேதிவினைகளால் பாதிக்கப்படுகின்றன என்பதை விளக்குக.

> மனிதன் உண்ணத் தகுதியற்றதாக உணவை மாற்றும் எந்த செயல்முறையும் உணவுக்கெட்டுப் போதல் எனப்படும்.

> நொதிகள் மூலம் நடைபெறும் வேதி வினைகளால் உணவு தரம் குறைகிறது. அதாவது கெட்ட சுவை, துர்நாற்றம், சத்துப் பொருள்கள் குறைதல் ஆகியன.

> (எ.கா) ஹைட்ரஜன் சல்பைடு வாயு உருவாவதால் அழுகிய முட்டை துர்நாற்றம் வீசுகிறது.

> காய்கறிகள், பழங்கள் நுண்ணியிரிகளால் கெட்டுப் போதல். மீன் மற்றும் இறைச்சி ஊசிப்போதல்.

> மீன் மற்றும் இறைச்சியில் உள்ள பாலி நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் காற்று அல்லது ஒளியுடன் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்பட்டு கெட்டுப்போகும் நிகழ்வு ஊசிப்போதல் எனப்படும்

 

3. ஒரு வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.


 

 

 

VII. உயர் சிந்தனை வினாக்கள்.

 

1. ஒரு பேக்கரியில் கேக்குகள் மற்றும் பன்கள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.

> ஈஸ்ட் பெரிய ஸ்டார்ச் மூலக்கூறுகளை, சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது.

> கேக் மாவில் உள்ள சர்க்கரையை ஈஸ்ட் நொதிக்க செய்து கார்பன்டைஆக்சைடை வெளியேற்றுகிறது

> இது மாவினை துளைகளுடன் உப்பி போகும்படி செய்கிறது.

> எனவே கேக் மிருதுவாக மாறுகிறது

 

2. புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருள்களை எரித்தலே காரணம் என்பதை நியாயப்படுத்துக.

> படிம எரிபொருட்களான கரி, பெட்ரோல், டீசல் அனைத்தும் கார்பன் சேர்மங்களாகும்.

> படிம எரிபொருட்களை எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு உருவாகின்றது.

> புவி வெப்பமாதலுக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணம்.

> எனவே புவி வெப்பமாதலுக்கு படிம எரிபொருட்களின் பயன்பாடு காரணமாகின்றது.

3. கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை அன்றாட வாழ்வியல் வேதிவினை நிகழத் தேவைப்படும் காரணிகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.

அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்

ஆ) வெயிலில் தொடர்ந்து துணிகளை உலர்த்தும்போது அவற்றின் நிறம் மங்குதல்.

இ) கோழி முட்டைகளைச் சமைத்தல்.

ஈ) பேட்டரிகளை மின்னேற்றம் செய்தல்.

விடை: அ) வெப்பம் ஆ) வெப்பம், ஒளி இ) வெப்பம் ஈ) மின்சாரம்

 

4. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதைக் குறித்து விவாதிக்க.

> படிம எரிபொருட்களான பெட்ரோல், டீசலை பயன்படுத்தும் வாகனங்கள் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்களை வெளிவிடுகின்றன.

> கரியை எரிக்கும் தொழிற்சாலைகள் கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு வாயுக்களை வெளிவிடுகின்றன.

> மேலும் தொழிற்சாலைகள் சல்பர் மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளையும் வெளிவிடுகின்றன.

> இந்த கார்பன், சல்பர், நைட்ரஜனின் ஆக்சைடுகள் அனைத்தும் மழைநீரில் கரைந்து கார்பன், சல்பர், நைட்ரஜனின் ஆக்சி அமிலங்களாக மாறுகின்றன.

> இந்த அமிலங்கள் மழைநீரில் கரைந்து அமில மழையாக பூமியை அடைகின்றன.

> அமில மழையால் புவியில் தாவரங்கள், விலங்குகள், கட்டிடங்கள் ஆகியன பாதிப்படைகின்றன.

 

5. துருப்பிடித்தல் இரும்புப் பொருள்களுக்கு நல்லதா?

> துருப்பிடித்தல் இரும்புப் பொருட்களுக்கு நல்லது அல்ல. > துருப்பிடித்தல் என்பது இரும்பின் ஆக்சிஜனேற்ற வினை ஆகும்.

> துரு என்பது நீரேறிய இரும்பு ஆக்சைடு.

> இரும்பு உலோகம் வலிமையானது மற்றும் கடினமானது.

> ஆனால் துரு என்பது வலிமை குறைந்தது மற்றும் மென்மையானது.

 > எனவே இரும்பு பொருட்கள் துரு பிடிக்கும்போது அதன் வலிமை குறைகிறது மேலும் அது மென்மையாகிறது.

> எனவே துருப்பிடித்தல் நல்லதல்ல.

 

8. அனைத்துப் பழங்களும்,காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா? விளக்குக.

> ஆப்பிள்களும், வேறு சில பழங்களும் பழுப்பாதலுக்கு உள்ளாகின்றன.

> ஆப்பிள்களும் வேறு சில பழங்களும் நறுக்கி வைத்த பிறகு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வேதி வினையில் ஈடுபட்டு பழுப்பு நிறத்தை அடைகின்றன. இந்நிகழ்வு பழுப்பாதல் எனப்படும்.

> இப்பழங்களின் செல்களில் உள்ள பாலிபீனால் ஆக்சிடேஸ் அல்லது டைரோசினேஸ் என்ற என்சைம் ஆக்சிஜனுடன் சேர்ந்து உயிர் வேதிவினைக்கு உட்படுகின்றது.

> இவ்வுயிர் வேதிவினையில் பழங்களில் உள்ள பீனாலிக் சேர்மங்கள், பழுப்பு நிறமிகளான மெலனின் ஆக மாற்றப்படுகின்றன.

 

 

VIII. நற்பண்பு அடிப்படை வினாக்கள்.

 

1. குமார் என்பவர் வீடு கட்டத் திட்டமிடுகிறார். கட்டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகளை வாங்குவதற்காக அவர் தனது நண்பர் ரமேஷ் உடன் அருகில் உள்ள இரும்புப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் முதலில் புதிதாக, நல்ல நிலையில் உள்ள இரும்புக் கம்பிகளைக் காட்டுகிறார். பிறகு சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகளைக் காட்டுகிறார். புதியதாக உள்ள இரும்புக் கம்பிகளின் விலை அதிகமானதாக இருந்தது. மேலும் அந்த விற்பனையாளர் சற்று பழைய கம்பிகளுக்கு விலையில் நல்ல சலுகை தருவதாகக் கூறினார். குமாரின் நண்பர் விலை மலிவாக உள்ள கம்பிகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

அ) ரமேஷின் அறிவுரை சரியானதா?

ஆ) ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?

இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?

அ) ரமேஷின் அறிவுரை சரியானது.

ஆ) துருப்பிடித்தல் காரணமாக பழைய இரும்பு கம்பிகள் பழுப்பு நிறமாக உள்ளன.

> துருப்பிடித்தல் இரும்பினை மென்மையானதாகவும், வலிமையற்ற தாகவும் செய்கிறது

> எனவே பழைய துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வீடு கட்ட ஏற்றதல்ல.

இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்பு, தனது நண்பர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காட்டும் அக்கறை

 

2. பழனிக்குமார் ஒரு வழக்கறிஞர். அவர் வாடகை அதிகமாக உள்ள ஒரு வீட்டில் குடியிருக்கிறார். அதிகமான வாடகை தர இயலாமல் அருகில் வேதித் தொழிற்சாலை உள்ள ஒரு இடத்தில் குடியேற விரும்புகிறார். அங்கு வாடகை மிகவும் குறைவு. மேலும் மக்கள் நெருக்கமும் குறைவு, 8-வது படிக்கும் அவரது மகன் ராஜசேகருக்கு அப்பாவின் முடிவு பிடிக்கவில்லை. தொழிற்சாலையில்லாத வேறொரு இடத்திற்குச் செல்லலாம் என்று கூறுகிறான்.

அ) ராஜசேகர் கூற்று சரியானதா?

ஆ) ராஜசேகர் தொழிற்சாலை நிறைந்த பகுதிச்குச் செல்ல மறுத்தது ஏன்?

இ) ராஜசேகர் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?

அ) ஆம், ராஜசேகர் கூற்று சரியானது.

ஆ) தொழிற்சாலை நிறைந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம்.

 > அப்பகுதியில் குடியேறுவதால் அநேக உடற்கோளாறுகளும், நோய்களும் ஏற்படலாம்

> இது பற்றி ராஜசேகர் அறிந்துள்ளதால், அப்பகுதியில் குடியேற மறுக்கிறார்.

இ) ராஜசேகர் அவரது குடும்பத்தினரின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டுள்ளது, அவர் வெளிப்படுத்திய நற்பண்பு.

Tags : Changes Around Us | Chapter 10 | 8th Science நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 10 : Changes Around Us : Questions Answers Changes Around Us | Chapter 10 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் : வினா விடை - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் | அலகு 10 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 10 : நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்