நீர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography: Hydrosphere
IV. சுருக்கமான விடையளி.
1.
'நீர்க்கோளம்’
பொருள்
கூறுக.
விடை:
புவியின் நீர்சூழ் பகுதி நீர்க்கோளம். இது புவியில் காணப்படும் அனைத்து நிலையிலும் உள்ள (திண்ட, நீர்ம, வாய்) நீரை உள்ளடக்கியது.
2.
நீரியல்
சுழற்சி
என்றால்
என்ன?
விடை:
புவியின் நீரானது நிலைத்த தன்மையற்ற, நகரும் தன்மையுடையது. புவியில் உள்ள நீர் தனது நிலைகளை (பனிக்கட்டி, நீர், நீராவி) தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பது நீரியல் சுழற்சி ஆகும்.
3.
கடலடி
நிலத்தோற்றங்கள்
யாவை?
விடை:
• கண்டத்திட்டு
• கண்டச்சரிவு
• கண்ட உயர்ச்சி
• கடலடி சமவெளிகள் (அ) அபிசல் சமவெளி
• கடல் பள்ளம் (அ) அகழிகள்
• கடலடி மலைத் தொடர்கள்.
4.
கடல்
நீரோட்டங்களைத்
தோற்றுவிக்கும்
காரணிகள்
யாவை?
விடை:
• புவியின் சுழற்சி
• வீசும் காற்று
• கடல் நீரின் வெப்பம்
• உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு.
5.
கடல்
அலைகளைப்
பற்றிச்
சுருக்கமாக
விடையளி.
விடை:
• கடல் நீர் இயக்கங்களில் மிகவும் வலிமை வாய்ந்தவை அலைகளே. காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகள் உருவாகின்றன. காற்றின் வேகம், நீடிக்கம் காலம், திசை ஆகியவற்றைப் பொறுத்து அலைகளின் உயரம் அமையும்.
• ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினால் ஏற்படும் அலைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஆழிப் பேரலைகள்.