Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை

பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை | 5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai

   Posted On :  20.07.2023 05:25 am

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை

இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

கற்கண்டு

சொற்றொடர் அமைப்பு முறை

 

எழுவாய்

ஒரு தொடரில், யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் (எழுவாய் எப்போதும் பெயர்ச்சொல்லாகவே இருக்கும்)

எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள்

செயப்படுபொருள்

ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள்

எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள்

பயனிலை

ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே பயனிலை என்கிறோம்.

எடுத்துக்காட்டு : தென்றல் நடனம் ஆடினாள்

ஆடினாள் என்பது வினைமுற்று

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரில் இடம் பெற்றிருக்கும்.

எழுவாயோ, செயப்படுபொருளோ இல்லாமலும் தொடர் அமையும்.

எ.கா. நடனம் ஆடினாள் - இத்தொடரில் எழுவாய் இல்லை.

தென்றல் ஆடினாள் - இத்தொடரில் செயப்படுபொருள் இல்லை

ஒரு தொடர் எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால், பயனிலை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

Tags : Term 1 Chapter 3 | 5th Tamil பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai : Grammar: Sorsodar Amaipu murai Term 1 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை : இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை - பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 3 : இயற்கை