பருவம் 1 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம் : சொற்றொடர் அமைப்பு முறை | 5th Tamil : Term 1 Chapter 3 : Iyarkai
கற்கண்டு
சொற்றொடர் அமைப்பு முறை
எழுவாய்
ஒரு தொடரில், யார், எது,
எவை, யாவர்
என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே எழுவாய் (எழுவாய் எப்போதும்
பெயர்ச்சொல்லாகவே இருக்கும்)
எடுத்துக்காட்டு : தென்றல் நடனம்
ஆடினாள்
செயப்படுபொருள்
ஒரு தொடரில் யாரை, எதனை, எவற்றை என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே செயப்படுபொருள்
எடுத்துக்காட்டு : தென்றல் நடனம்
ஆடினாள்
பயனிலை
ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே பயனிலை என்கிறோம்.
எடுத்துக்காட்டு : தென்றல் நடனம்
ஆடினாள்
ஆடினாள் – என்பது வினைமுற்று
● எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் ஒரு தொடரில் இடம் பெற்றிருக்கும்.
● எழுவாயோ, செயப்படுபொருளோ இல்லாமலும் தொடர் அமையும்.
எ.கா. நடனம் ஆடினாள் - இத்தொடரில் எழுவாய் இல்லை.
● தென்றல்
ஆடினாள் - இத்தொடரில் செயப்படுபொருள் இல்லை
● ஒரு தொடர் எழுவாய் அல்லது செயப்படுபொருள் இல்லாமல் அமையலாம். ஆனால், பயனிலை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.