பருவம் 3 இயல் 4 | 3 ஆம் வகுப்பு தமிழ் - மழைநீர் | 3rd Tamil : Term 3 Chapter 4 : Malinir
4. மழை நீர்
மழைநீர் வெள்ளம் ஓடியே
மண்ணில் வீணாய்ச் செல்லுதே
உழைப்பின் வியர்வை போலவே
உயர்வாய் எண்ண வேண்டுமே!
பொன்னும் பொருளும் போலவே
பொழியும் நீரும் செல்வமே
விண்ணின் கொடை என்பதில்
வியப்பு ஒன்றும் இல்லையே!
குளங்கள் ஏரி நிரம்புமே
குருவி கொக்கும் வாழுமே
வானின் அமுதம் சேமித்தே
வாழ்வைச் செம்மை செய்வமே!
நாடும் வீடும் செழிக்கவே
நல்ல தண்ணீர் வேண்டுமே
ஓடும் நீரைத் தேக்கியே
உலகின் பசியைத் தீர்ப்பமே!
உழவும் தொழிலும் ஓங்கவே
உற்ற துணை மழைதானே
வளமும் நலமும் நிறைந்திட
வணங்கி மழையைப்
போற்றுவோம்!
மனிதர் பறவை விலங்குகள்
மகிழ்ந்து வாழத்தேவையே
இனிய மழை வரும்போது
இல்லம் முழுதும் சேமிப்போம்!