போக்குவரத்து | பருவம் 2 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 2 Unit 3 : Transport
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. பின்வருவனவற்றுள்
நிலவழிப் போக்குவரத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?
அ) மகிழுந்து
ஆ) கப்பல்
இ) ஹெலிகாப்டர்
ஈ) விமானம்
விடை: அ) மகிழுந்து
2.
--------------------- ஆம் ஆண்டு முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
அ) 2019
ஆ) 1853
இ) 1947
ஈ) 1950
விடை: ஆ) 1853
3. தங்க
நாற்கரச் சாலை, முக்கிய நகரங்களுள் ஒன்றான
அ) சென்னை
ஆ) கன்னியாகுமரி
இ) மதுரை
ஈ) திருச்சி
விடை: அ) சென்னை
4.
-------------- பழமையான போக்குவரத்து வகையாகும்.
அ) கப்பல்
ஆ) மிதிவண்டி
இ) நடைப்பயணம்
ஈ) மாட்டு வண்டி
விடை: அ) கப்பல்
5. போக்குவரத்து
வகைகள் --------------- ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அ) 3
ஆ) 4
இ) 5
ஈ) 6
விடை: ஆ) 4
II. பொருத்துக
1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம் - பேருந்து
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து - சென்னை
3. கன்னியாகுமரியிலிருந்து ஐம்மு வரை செல்லும் இரயில் - திருச்சிராப்பள்ளி
4. தமிழ்நாட்டில் உள்ள
முக்கிய கப்பல் துறைமுகம் – 2015
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு - ஹிம்சாகர் விரைவு
ரயில்
விடை :
1. தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையம்
- திருச்சிராப்பள்ளி
2. முக்கியமான மக்கள் போக்குவரத்து - பேருந்து
3. கன்னியாகுமரியிலிருந்து ஐம்மு வரை செல்லும்
இரயில் - ஹிம்சாகர் விரைவு ரயில்
4. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கப்பல் துறைமுகம்
– சென்னை
5. சென்னை மெட்ரோ இரயில் தொடங்கப்பட்ட ஆண்டு
- 2015
III. சரியா அல்லது தவறா எனக் கூறுக.
1. மக்களுக்குப் போக்குவரத்து தேவையானது அல்ல.
விடை : தவறு
2. துறைமுகங்கள் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. விடை : சரி
3. நாட்டின் பல பகுதிகளை சாலைவழிப் போக்குவரத்து இணைக்கவில்லை.
விடை : தவறு
4. சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே மிகச் சிறியதாகும்.
விடை : தவறு
5. தமிழ்நாட்டில் ஐந்து பெரிய துறைமுகங்கள் உள்ளன. விடை : தவறு
IV. குறுகிய விடையளி.
1. போக்குவரத்து-
வரையறு.
மனிதர்கள், விலங்குகள் மற்றும் பொருட்கள் முதலியன
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வது போக்குவரத்து ஆகும்.
2. பல்வேறு
போக்குவரத்து வகைகளைப் பட்டியலிடுக.
.• சாலை வழி
• இரயில் வழி
• நீர் வழி
• வான் வழி
3. மரயில்
போக்குவரக விளக்கநாட்டிலிருங்கி செல்லும் நீ முச்சியமான இரண்டு இரயில் இணைப்புகளின்
பெயர்களைக் கூறுக.
4. இரயில்
போக்குவரத்தை விவரி. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மிக முக்கியமான இரண்டு இரயில் இணைப்புகளின்
பெயர்களைக் கூறுக.
• இந்தியாவின் பல மாநிலங்களை
இணைக்கும் போக்குவரத்து முறையில் இரயில் போக்குவரத்து
மிக முக்கியமானதாகும்.
• 1853ல் மும்பை மற்றும் தானே
இடையே முதல் இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.
• இரயில் போக்குவரத்து வளர்ச்சி
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
தமிழக முக்கிய இரயில் இணைப்புகள் :
• சென்னை - மும்பை - சென்னை
விரைவு வண்டி
• சென்னை - புதுதில்லி - தமிழ்நாடு விரைவு வண்டி
5. வான்வழிப்
போக்குவரத்து என்றால் என்ன? வான்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும்.
• வான்வழிப் போக்குவரத்து என்பது உலகின் பல்வேறு
பகுதிகளுக்கு மிக விரைவாகப் பயணம் செய்ய உதவும் போக்குவரத்து முறையாகும்.
• விமானங்கள் மற்றும் சிறுவிமானங்கள்
(ஹெலிகாப்டர்கள்) போன்றவை வான்வழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
6. போக்குவரத்தின்
எவையேனும் மூன்று நன்மைகளை எழுதுக.
• வேளாண் மற்றும் தொழில்துறையின்
உற்பத்தியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
• நாட்டின் வர்த்தகத்தை மேம்படுத்துகிறது.
நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
• சுற்றுலாவை மேம்படுத்த உதவுகிறது.
செயல்திட்டம்
செய்தித்தாள்களைப் பயன்படுத்தி பேருந்து, ரயில்,
கப்பல் அல்லது விமானம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு மாதிரியை உருவாக்கி வகுப்பில் காண்பி.