காலம் | இரண்டாம் பருவம் அலகு 4 | 3 ஆம் வகுப்பு கணக்கு - நேரத்தை மணிகளில் கணக்கிடல் | 3rd Maths : Term 2 Unit 4 : Time
அலகு 4
காலம்
நேரத்தை மணிகளில் கணக்கிடல்
வகுப்பறையில்
குழந்தைகள்: வணக்கம் அய்யா.
ஆசிரியர் : வணக்கம் குழந்தைகளே. ரம்யா பள்ளிக்கு நீ எந்த நேரத்தில் வந்தாய்?
ரம்யா : 8 மணிக்கு வந்தேன், அய்யா.
ஆசிரியர் : நீ எவ்வாறு நேரத்தைக் கணக்கிட்டாய்?
ரம்யா : என் அம்மா கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைச் சொல்வார்கள்.
ஆசிரியர் : உனக்குக் கடிகாரம் பார்த்து நேரம் சொல்லத் தெரியுமா?
ரம்யா : எனக்குத் தெரியாது அய்யா.
ஆசிரியர் : குழந்தைகளே! இன்று நாம் கடிகாரம் பார்த்து நேரத்தைக் கணக்கிட கற்றுக் கொள்வோமா?
கடிகாரத்தை உற்று நோக்குங்கள்.
கடிகாரத்தில் 1 முதல் 12 வரையான எண்கள் குறிக்கப்பட்டிருக்கும். கடிகாரத்தில் இரண்டு முள் இருக்கும்.
பெரிய முள் நிமிட முள் ஆகும். அது நேரத்தை நிமிடங்களில் காட்டும்.
சிறிய முள் மணி முள் ஆகும். அது நேரத்தை மணிகளில் காட்டும்.
நிமிடமுள் 12-இல் இருக்கும் போது, மணி முள் மணியைக் குறித்துக்காட்டுகிறது.
5 மணி
கடிகாரத்தின் சிறிய முள் 5 இல் உள்ளது.
கடிகாரத்தின் பெரிய முள் 12 இல் உள்ளது.
எனவே, நேரம் 5 மணி ஆகும்.
இதனை நாம் 5:00 மணி என எழுதுகிறோம்.
ஒரு மணி நேரம் கழித்து.
6 மணி
கடிகாரத்தின் சிறிய முள் 6 இல் உள்ளது.
கடிகாரத்தின் பெரிய முள் 12 இல் உள்ளது.
எனவே, நேரம் 6 மணி ஆகும்.
இதனை நாம் 6:00 மணி என எழுதுகிறோம்.
செயல்பாடு 1
மணி முள் இருக்கும் இடத்தைப் பார்த்து நேரத்தைக் கீழே உள்ள கட்டங்களில் எழுதவும்.
செயல்பாடு 2
கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக்காட்டப் பின்வரும் கடிகாரங்களில் முட்களை வரைக.
செயல்பாடு 3
கீழே குறிப்பிட்டுள்ள நேரத்தைக் காட்டும் சரியான கடிகாரத்தை [✔]குறியிடவும்