Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இந்தியாவில் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள்

அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவில் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள் | 8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy

   Posted On :  14.06.2023 06:44 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 6 : பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை

இந்தியாவில் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள்

1. இந்திய ஆயுதப் படைகள் (Indian Armed Forces) 2. துணை இராணுவப் படைகள் (Paramilitary Forces) 3.மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces)

இந்தியாவில் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள்

இந்திய ஆயுதப் படைகள் (Indian Armed Forces) - ஆயுதப் படையானது நாட்டின் இராணுவப் படை, கடற்படை, விமானப்படை மற்றும் கடலோரக் காவல்படை ஆகியவற்றை உள்ளடக்கிய முதன்மைப் படைகள் ஆகும். அவைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றன.

துணை இராணுவப் படைகள் (Paramilitary Forces) - அசாம் ரைபில்ஸ், சிறப்பு எல்லைப்புறப் படை ஆகியன துணை இராணுவப் படைகளாகும்.

மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces) - BSF, CRPF, ITBP, CISF மற்றும் SSB ஆகியன மத்திய ஆயுதக் காவல் படைகளாகும். அவைகள் மத்திய உள்துறை அமைச்சத்தின் கீழ் செயல்படுகின்றன. CAPF என்ற படைப்பிரிவுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு ஏற்றவாறு இராணுவம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து பணியாற்றுகின்றன.


 

1. இந்திய ஆயுதப் படைகள்


இராணுவப் படை (Army)

இந்திய இராணுவப் படை என்பது நில அடிப்படையிலான ஒரு பிரிவு ஆகும். இது உலக அளவில் மிகப்பெரிய தன்னார்வப் படைப்பிரிவு ஆகும். இது ஜெனரல் (General) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட இராணுவப் படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது. தேசிய பாதுகாப்பு, தேசிய ஒற்றுமை, அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டை பாதுகாத்தல், உள்நாட்டு அச்சுறுத்தல்கள் மற்றும் நாட்டின் எல்லைக்குள் அமைதியையும், பாதுகாப்பையும் பேணுதல் ஆகியன இந்திய இராணுவப் படையின் முதன்மைப் பணிகளாகும். மேலும் இது இயற்கை பேரழிவு மற்றும் பேரிடர் காலங்களில் மனிதாபிமான மீட்புப் பணிகளையும் செய்கிறது. இந்திய இராணுவம் 'ரெஜிமென்ட்' என்ற ஒரு அமைப்பு  முறையைக் கொண்டது. இது செயல்பாட்டு ரீதியாகவும் புவியியல் அடிப்படையிலும் ஏழு படைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆயுதப் படைகளைக் கௌரவிப்பதற்காக இந்திய அரசால் தேசியப் போர் நினைவுச் சின்ன ம் (National War Memorial) கட்டப்பட்டுள்ளது. இந்நினைவுச் சின்னம் புது டெல்லியில் உள்ள இந்தியா கேட் அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. போரின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களின் பெயர்கள் நினைவுச் சின்னத்தின் சுவர்களில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.



கடற்படை (Navy)

கடற்படையின் முதன்மை நோக்கம் நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதாகும். மேலும் நாட்டின் பிற ஆயுதப்படைகளுடன் இணைந்து இந்திய நிலப்பகுதி, மக்கள், கடல்சார் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் (அ) ஆக்கிரமிப்புகளைத் தடுக்க அல்லது தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுகிறது. இது அட்மிரல் (Admiral) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட கடற்படைத் தளபதியால் வழிநடத்தப்படுகிறது. இது மூன்று கடற்படைப் பிரிவுகளைக் கொண்டது.


விமானப்படை (Air Force)

இந்திய விமானப்படை என்பது இந்திய ஆயுதப்படைகளின் வான்வெளி படை ஆகும். இந்திய வான்வெளியைப் பாதுகாப்பதும், ஆயுத மோதலின் போது வான்வழிப் போரை நடத்துவதும் இதன் முதன்மை நோக்கம் ஆகும். இது ஏர் சீப் மார்ஷல் (Air Chief Marshal) என்றழைக்கப்படும் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட விமானப்படை தளபதியால் வழிநடத்தப்படுகிறது. இது ஏழு படைப்பிரிவுகளைக் கொண்டது.



இந்தியக் கடலோரக் காவல்படை (Indian Coast Guard)

இந்தியப் பாராளுமன்றத்தின் 1978ஆம் ஆண்டு கடலோர காவல் படைச் சட்டத்தின்படி, இந்தியாவின் சுதந்திர ஆயுதப் படையாக இந்தியக் கடலோரக் காவல்படை 1978இல் நிறுவப்பட்டது. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த கடலோரக் காவல் படையானது கடற்படை, மீன்வளத் துறை, சுங்கத்துறை, மத்திய - மாநில காவல்படை ஆகியவற்றுடன் ஒத்துழைத்துச் செயல்படுகிறது.


2. துணை இராணுவ பாதுகாப்புப் படைகள்

உள்நாட்டு பாதுகாப்பைப் பராமரிக்கவும், கடலோரப் பகுதியைப் பாதுகாக்கவும், இராணுவத்திற்கு உதவுவதற்கும் பயன்படுத்தப்படும் படைகள் துணை இராணுவப் படைகள் என்றழைக்கப்படுகின்றன. இரயில் நிலையங்கள், எண்ணெய் வயல்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகிய முக்கியமான பகுதிகளைப் பாதுகாக்கும் பணியைச் செய்கிறது. இயற்கை மற்றும் மனித பேரழிவுகளிலிருந்து மக்களை மீட்கும் பணியிலும் இப்படைகள் ஈடுபடுகின்றன. அமைதி காலங்களில் 

பீல்டு மார்ஷல் (Field Marshal) - இது ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட பொது அதிகாரி பதவி. இது இந்திய இராணுவத்தின் உயர்ந்த பதவி ஆகும்.



இந்திய விமானப்படையில் ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட மார்ஷல் பதவிக்கு உயர்வு பெற்ற முதல் மற்றும் ஒரே அதிகாரி அர்ஜுன் சிங் ஆவார்.


சாம் மானஷா என்பவர் இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் ஆவார். கே.எம். கரியப்பா இரண்டாவது பீல்டு மார்ஷல் ஆவார்.


1758ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட 'மெட்ராஸ் ரெஜிமென்ட் (The Madras Regiment) இந்திய இராணுவத்தின் மிகப்பழமையான காலாட்படை பிரிவுகளில் ஒன்றாகும். இந்த 'ரெஜிமென்ட்' தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் உள்ள வெல்லிங்டன் எனுமிடத்தில் அமைந்துள்ளது.


1962இல் நடந்த சீன- 500 இந்திய போரா இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தியது. இந்திய இராணுவத்தின் அவசர -ஆணையத்திற்கான அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்க பூனா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 'அதிகாரிகள் பயிற்சிப் பள்ளிகள்' (Officers Training Schools - OTS) நிறுவப்பட்டது. 1998 ஜனவரி 1 முதல் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியானது 'அதிகாரிகள் பயிற்சி அகாடமி' (Officers Training Academy - OTA) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


இந்த துணை இராணுவப் படைகள் சர்வதேச எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை வகிக்கின்றன. அவைகள்:

1. அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR)

2. சிறப்பு எல்லைப்புறப் படை (SFF)


அஸ்ஸாம் ரைபிள்ஸ் (Assam Rifles - AR)

இது அஸ்ஸாம் பகுதியில் 1835ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. இது கச்சார் லெவி எனப்பட்ட குடிப்படை (இராணுவ பயிற்சி பெற்ற மக்கள் குழு) ஆகும். தற்போது இதில் 46 படைப்பிரிவுகள் உள்ளன. இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.


சிறப்பு எல்லைப்புற படை (Special Frontier Force - SFF)

சிறப்பு எல்லைப்புற படை என்பது ஒரு துணை இராணுவ சிறப்புப்படை ஆகும். இது 1962இல் உருவாக்கப்பட்டது. இப்படை புலனாய்வு பணியகத்தின் (IB) நேரடி மேற்பார்வையில் இருந்தது. பின்னர் இது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் கீழ் செயல்பட்டு வருகிறது.


3. மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces - CAPF)

துணை இராணுவப் படையில் இருந்த பின்வரும் ஐந்து படைப்பிரிவுகள் மத்திய ஆயுதக் காவல் படையாக மறுவரையறை செய்யப்பட்டு மார்ச், 2011 முதல் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

1. மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF)

2. இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் (ITBP)

3. எல்லை பாதுகாப்புப் படை (BSF)

4. மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (CISF)

5. சிறப்பு சேவை பணியகம் (SSB)


மத்திய ரிசர்வ் காவல் படை (Central Reserve Police Force - CRPF)

அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காகவும் தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பதற்கும், சமூக நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், சட்டம், ஒழுங்கு மற்றும்


இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் (Indo-Tibetan Border Police - ITBP)

இது எல்லையைப் பாதுகாக்கும் ஒரு காவல்படை ஆகும். இப்படை அதிக உயரமான பகுதியில் செயல்படுவதில் சிறப்பு வாய்ந்தது. இந்திய - சீன எல்லைப்பகுதிகளில் லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான எல்லைப் பகுதிகளைக் காக்கும் பணிகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது.


எல்லை பாதுகாப்புப் படை (Border Security Force - BSF)

இது இந்தியாவின் எல்லைக்காவல் படை என அழைக்கப்படுகிறது. அமைதி காலங்களில் இந்திய நில எல்லைப்பகுதிகளைக் காப்பது மற்றும் நாடு கடந்த குற்றங்களைத் தடுப்பது ஆகிய பணிகளைச் செய்கிறது.

தேசிய மாணவர் படை (National Cadet Corps - NCC) –

தேசிய மாணவர் படை என்பது இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முத்தரப்பு சேவை அமைப்பாகும். இந்த அமைப்பு நாட்டின் இளைஞர்களை ஒழுக்கமான மற்றும் தேசபக்தி மிக்க குடிமக்களாக உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளது. தேசிய மாணவர் படை என்பது ஒரு தன்னார்வ அமைப்பாகும். இது இந்தியா முழுவதும் உள்ள உயர் நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது மேலும் மாணவர்களுக்குச் சிறிய ஆயுதங்கள் மற்றும் அணிவகுப்புகளில் அடிப்படை இராணுவப் பயிற்சியும் அளிக்கிறது.


மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (Central Industrial Security Force - CISF)

மத்திய தொழிலக பாதுகாப்புப் படை 1969 மார்ச் 10ஆம் நாள் இந்திய நாடாளுமன்ற சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டது. முக்கிய அரசாங்க கட்டடங்களைப் பாதுகாப்பது, டெல்லி மெட்ரோ பாதுகாப்பு மற்றும் விமான நிலைய பாதுகாப்பு ஆகியன இதன் முக்கிய பணிகள் ஆகும்.


 

சிறப்பு சேவை பணியகம் / சாஷாஸ்திர சீமா பால் (Special Service Bureau / . Sashastra Seema Bal - SSB)

இது இந்தியா-நேபாளம் மற்றும் இந்தியா-பூடான் எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கும் எல்லை ஆயுதப் படைகள் ஆகும்.


ஊர்க்காவல் படை (Home Guard)

இந்திய ஊர்க்காவல் படை ஒரு தன்னார்வப் படை ஆகும். இது இந்தியக் காவல்துறைக்குத் துணையாக பணியாற்றுகிறது. இப்படை உறுப்பினர்கள் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளான தொழில்சார் வல்லுநர்கள், கல்லூரி மாணவர்கள், விவசாய மற்றும் தொழில்துறை பணியாளர்கள் ஆகியோர்களிலிருந்து நியமிக்கப்படுகிறார்கள். 

ஜனவரி 15 - இராணுவ தினம்

பிப்ரவரி 1 - கடலோரக் காவல்படை தினம்

மார்ச் 10 - மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தினம்

அக்டோபர் 7 - விரைவு அதிரடிப் படை தினம்

அக்டோபர் 8 - விமானப்படை தினம்

டிசம்பர் 4 - கடற்படை தினம்

டிசம்பர் 7 - ஆயுதப்படைகள் கொடி தினம்

அவர்கள் சமுதாய முன்னேற்றத்திற்காக தங்கள் ஓய்வு நேரத்தை ஒதுக்குகின்றனர். 18 முதல் 50 வயதுடைய அனைத்து இந்தியக் குடிமக்களும் ஊர்க்காவல் படையில் சேர தகுதியுடையவர்களாவர். ஊர்க்காவல் படையில் சேரும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

நம் நாட்டைப் பாதுகாக்க, இந்திய ஆயுதப் படைகள் எப்போதும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. நாட்டிற்குச் சேவை செய்யவும், நாட்டைக் காப்பதற்கும் இளைஞர்கள் தாமாக முன் வந்து இராணுவத்தில் சேர வேண்டும். இளைஞர்களைப் பணியில் சேர்க்க பாதுகாப்பு துறை தயாராக உள்ளது. நாட்டிற்குச் சேவை செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

Tags : Chapter 6 | Civics | 8th Social Science அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 6 : Defence & Foreign Policy : Security Forces in India can be divided into Chapter 6 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 6 : பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை : இந்தியாவில் பாதுகாப்புப் படைகளின் பிரிவுகள் - அலகு 6 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 6 : பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை