ஐரோப்பாவில் அமைதியின்மை - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 12 : Europe in Turmoil
பாடச் சுருக்கம்
• மக்களாட்சி கோரி தாராளவாதமும், தேசியவாதமும்
கைகோர்த்தமையும், தொழிற்புரட்சி உழைப்பாளர் இயக்கங்களுக்கு ஏற்றமளித்ததும் சோஷலிசம்
பரவ வழி ஏற்படுத்திக் கொடுத்தமையும் விளக்கப்பட்டுள்ளது.
• ஆரம்பகால சோஷலிசவாதிகள் மற்றும் மார்க்ஸ்
போன்றோரின் பங்களிப்பு பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
• இங்கிலாந்தின் மக்கள் உரிமை சாசன இயக்கம்
பற்றியும் அது கவலை கொள்ளும் வகையில் தனது இலக்குகளை அடையாமல் முடிவை எட்டியதும் பகுப்பாய்வு
செய்யப்பட்டுள்ளது.
• மேற்கு ஐரோப்பாவில் 1830ஆம் மற்றும்
1848ஆம் ஆண்டுகளில் புரட்சிகள் தேசியவாதத்தை எவ்வாறு தாராள சிந்தனையில் இருந்து பிரித்தெடுத்து
முரட்டுப்பாதையில் கொண்டுசென்றது என்று அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
• இத்தாலியிலும் ஜெர்மனியிலும் தேசியவாதம்
ஏற்றமடைந்து அவை எவ்வாறு தனியரசுடைய நாடுகளாய் உருவாயின என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
• முதலாளித்துவத்திற்குள் ஒளிந்திருந்த பலவீனங்கள்
எவ்வாறு 1873 முதல் 1896 வரையான காலத்தில் நீண்ட பெருமந்தமாக வடிவம் கொண்டது என்பதும்
தொழிலாளிகளின் போராட்ட உணர்வு எவ்வாறு இரக்கமின்றி முதலாளிகளால் அரசின் துணையோடு ஒடுக்கப்பட்டது
என்பதும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.