பருவம் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் - வந்த பாதை | 2nd Tamil : Term 3 : En ninaivil

   Posted On :  02.07.2022 05:57 am

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : என் நினைவில்

வந்த பாதை

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : என் நினைவில்




கற்றல் விளைவுகள்


1. கேட்டல்

படங்கள், ஓவியங்கள், கதைப்படங்களை நுட்பமாக உற்றுநோக்கியும் சொல்லக்கேட்டும் சுவைப்பர்.

கேட்டறியாத, எளிய சொற்களமைந்த பாடல்களைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.

சிந்தனையைத் தூண்டும் எளிய கதைகளைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.

எளிய வாய்மொழி அறிவுரைகளையும் கட்டளைகளையும் வினாக்களையும் கேட்டுப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவர்.

• பிறர் பேசுவதைப் பொறுப்புடனும் கவனத்துடனும் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர்.

 

2. பேசுதல்

ஓசை நயமிக்க பாடல்களைத் தனியாகவும் குழுவாகவும் உரிய ஒலிப்புடன் பாடுவர்.

படக்கதையைப் பார்த்து நிகழ்வைக் கூறுவர்.

• செய்திகளைத் திரட்டும் பொருட்டு வினா எழுப்புவர்.

• பார்த்தவை, கேட்டவை பற்றிப் பேசுவர்.

• கேட்டும் படித்தும் அறிந்த பாடல்கள், கதைகளிலிருந்து கேட்கப்படும் எளிய  வினாக்களுக்கு முழுமையான சொற்றொடரில் விடை கூறுவர்.

• சொற்கள், தொடர்களை முறையாகவும் சரியாகவும் ஒலிப்பர்.

• கேட்டறிந்த கதைகள், பாடல்களைத் தம் கற்பனையின் அடிப்படையில் கூறுவர். தமக்குரிய நடையில் பேசுவர்.

• கேட்டவற்றுடன் தம் அனுபவங்களைத் தொடர்புபடுத்திப் பொருள் விளங்கும் வகையில் தெளிவாக வெளிப்படுத்துவர்.

 

3. படித்தல்

• தமிழ்மொழியின் அனைத்து எழுத்துகளின் ஒலிவடிவ, வரிவடிவத் தொடர்புகளை இனங்கண்டு முறையாக உச்சரிப்பர்.

• வடமொழி ஒலிப்புகளுக்குரிய, கிரந்த வரிவடிவங்களை அறிந்து படிப்பர்.

• எளிய சொற்கள், சிறுசிறு தொடர்களை உரிய ஒலிப்புடன் உரக்கப் படிப்பர்.

• எளிய சந்தப் பாடல்களை உரிய ஓசையுடன் படிப்பர்.

• எளிமையான சிறுசிறு படக்கதைகளையும் பாடல்களையும் படிப்பர்.

• படிக்கும் பகுதியின் பொருளுணர்ந்து கேட்கப்படும் சிறுசிறு வினாக்களுக்கு விடையளிப்பர்.

 

4. எழுதுதல்

• படங்களைப் பார்த்து பெயர்கள், சிறுசிறு தொடர்களைத் தெளிவாகவும் வரிவடிவம் சிதையாமலும் எழுதுவர்.

• வடமொழி ஒலிப்புகளுக்குரிய, கிரந்த வரிவடிவங்களை அறிந்து எழுதுவர்.

• சொற்களையும், சிறுசிறு தொடர்களையும் சொல்லக்கேட்டு எழுதுவர்.

• எளிய பாடல்கள், கதைகள், உரைநடைப்பகுதிகளிலிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு முழுமையான தொடர்களில் விடையளிப்பர்.

• சிறுசிறு தொடர்களைத் தம்முடைய நடையில் எழுதுவர்.

• கேட்டவற்றை / படித்தவற்றை / சிந்தித்து உணர்ந்தவற்றைப் படங்களாகவோ, சொற்களாகவோ, தொடர்களாகவோ வெளிப்படுத்துவர்.


5. நடைமுறை இலக்கணம்

• ஒலி இயைபுச் சொற்களை உருவாக்குவர்.

• ஒருமை, பன்மை விகுதிகளை (கள், க்கள், ங்கள்) அறிந்து பயன்படுத்துவர்.

• பெயர்ச்சொற்கள், பதிலிப் பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களை அறிந்து பயன்படுத்துவர்.

 

6. கற்கக் கற்றல்

படக்கதைகளைப் பார்த்தறிந்து / படித்தறிந்து கதை கூறுவர்.

• பெயர்ப்பலகைகள், அறிவிப்புகளைப் படிப்பர்.

• விரும்பும் நூல்களைத் தேடிப் படிப்பர்.

• கணினியில் எளிய மொழி விளையாட்டுகளை விளையாடுவர்.

 

7. சொல்லாட்சித் திறன்

கீழ்க்காணும் சொற்களைக் கற்றறிந்து பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துவர்.

• பெயர்ச்சொற்கள். வினைச்சொற்கள், பதிலிப் பெயர்ச்சொற்கள்.

• வீடு, பள்ளியில் உள்ள பொருள்களின் பெயர்கள்

• குடும்ப உறுப்பினர் பெயர்கள்

தின்பண்டங்களின் பெயர்கள்

• எளிய வருணனைச் சொற்கள்

• ஆங்கில மாதங்களின் பெயர்கள்

• எதிர்ச்சொற்கள்

• இரட்டைச்சொற்கள்

• உடல் உறுப்புகளின் பெயர்கள்

• காய்கள், பழங்களின் பெயர்கள்

 

8. படைப்புத் திறன்

• முதல் எழுத்தை மாற்றி வேறு சொற்களை உருவாக்குவர்.

• குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் பல்வேறு சொற்களை எழுதுவர்.

கொடுக்கப்பட்ட சொல்லிலிருந்து பல்வேறு சொற்களை உருவாக்குவர்.

முதல் சொல்லின் இறுதி எழுத்தை அடுத்த சொல்லின் முதல் எழுத்தாகக் கொண்டு சொற்களை உருவாக்குவர்.

பாடலின் வரிகளைத் தொடர்ந்து பாடி முடிப்பர்.

கதையின் முடிவை விருப்பம்போல் மாற்றிக் கூறுவர்.

 

9. விழுமியங்கள்

• நேரந்தவறாமையைப் பின்பற்றுவர்.

கூட்டுணர்வு கொள்வர்.

• விதிகளைப் பின்பற்றுவர்.

• தூய்மை பேணுவர்.

• பொருள்களைப் பாதுகாப்பர்.

பிறருக்கு உதவுவர்.

பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவர்.

 

10. வாழ்வியல் திறன்

கீழ்க்காணும் வாழ்வியல் திறன்களைப் பெற்று உரிய நேரங்களில் பயன்படுத்துவர்.

• தன்னை அறியும் திறன்.

• சிக்கல் தீர்க்கும் திறன்.

• முடிவெடுக்கும் திறன்.

• கூர்சிந்தனைத் திறன்.

• படைப்பாக்கச் சிந்தனைத் திறன்.

• சிறந்த தகவல் தொடர்புத் திறன்.

• உறவுகளை இணக்கத்துடன் பேணும் திறன்.

• பிறரை அவர் நிலையிலிருந்து புரிந்துகொள்ளும் திறன்.

• உணர்வுகளைக் கையாளும் திறன்.

• மன அழுத்தத்தைக் கையாளும் திறன்.

Tags : Term 3 | 2nd Tamil பருவம் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 3 : En ninaivil : Vantha Pathai Term 3 | 2nd Tamil in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : என் நினைவில் : வந்த பாதை - பருவம் 3 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 : என் நினைவில்