வெப்பம் | பருவம் 2 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நீள் மற்றும் பரும விரிவு | 6th Science : Term 2 Unit 1 : Heat
நீள் மற்றும் பரும விரிவு
ஒரு திண்மப் பொருளுக்கு வரையறுக்கப்பட்ட வடிவம் உள்ளது. எனவே
அதைச் சூடுபடுத்தும்பொழுது அது எல்லா பக்கங்களிலும் விரிவடைகிறது. அதாவது அதன் நீளம்,
பரப்பளவு, கனஅளவு போன்றவை அதிகரிக்கின்றன.
வெப்பத்தினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு
நீள்விரிவு என்றும், பொருளின் பருமனில் ஏற்படும் அதிகரிப்பு பருமவிரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
மாட்டு வண்டியின் சக்கரத்தின் இரும்பு வளையத்தைச் சக்கரத்துடன்
பொருத்தும்முன் அதை வெப்பப்படுத்துவது ஏன்? தண்டவாளத்தின் இரு இரும்புப் பாளங்களுக்கு
இடையில் சிறிது இடைவெளி விடப்படுவது ஏன்?
இக்கேள்விகளுக்கான விடையை ஓர் ஆய்வு மூலம் தேடலாமா?
நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் ஒரு மிதிவண்டிச் சக்கரத்தின்
கம்பியைச் சூடுபடுத்துவதுதான்.
செயல்பாடு 5:
நீள் விரிவு
ஒரு மின்விளக்கு, உலர் மின்கலன், மெழுகுவர்த்தி, மிதிவண்டிச்
சக்கரக்கம்பி, நாணயம் மற்றும் இரு மரக்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
மிதிவண்டிச் சக்கரக்கம்பியின் ஒரு முனையை ஒரு மரக்கட்டையின்
மேல் வைத்து அதனுடன் மின்கம்பியைப் பொருத்தவும். மிதிவண்டிச் சக்கரக்கம்பியும், மின்கம்பியும்
மரக்கட்டையில் இணையும் இடத்தில், அவை நகராமல் இருக்க ஒரு சிறு கல்லை படத்தில் காட்டியவாறு
வைக்கவும். மிதிவண்டிச் சக்கரக்கம்பியின் மறு முனையை அடுத்த மரக்கட்டையின் மேல்தளத்துக்கு
இணையாக வரும்படியாக வைக்கவும். நாணயத்தின் மேல் மின்கம்பியைச் சுற்றி அதை இரண்டாவது
மரக்கட்டையின்மேல் வைத்து நிலை நிறுத்தவும்.
நாணயத்தில் சுற்றப்பட்ட மின்கம்பிக்கும் மிதிவண்டிச் சக்கரக்கம்பியின்
முனைக்கும் இடையில் ஒரு மின்கலனையும், மின் விளக்கையும் பொருத்தவும். மிதிவண்டிச் சக்கரக்கம்பியின்
முனையும், நாணயமும் ஒன்றுடன் ஒன்று தொடும்பொழுது மின்சுற்று முழுமையடைந்து மின்விளக்கு
ஒளிர்கிறது. மின்விளக்கு ஒளிரவில்லை எனில் மின்சுற்றுமுழுமையடையவில்லை என்பது பொருள்.
எனவே மின்சுற்று முழுமையடைந்துள்ளதா என்பதனைச் சரிபார்க்கவும். (குறிப்பு - மின்சுற்றுகள்
பற்றி நாம் மின்னியல் பாடத்தில் விரிவாகப் படிக்க இருக்கிறோம்.) தற்பொழுது நாணயத்துக்கும்
மிதிவண்டிச் சக்கரக்கம்பிக்கும் இடையில் ஒரு தாளை வைத்து, தாளின் தடிமனுக்கு இணையான
இடைவெளியை உருவாக்கவும். தற்பொழுது மின்விளக்கு ஒளிர்கிறதா? காரணம் என்ன?
------------------------------------------------------------
மிதிவண்டிச் சக்கரக்கம்பியும் நாணயமும் ஒன்றுடன் ஒன்று தொடாதநிலையில்
மின்விளக்கு ஒளிராது. தற்பொழுது மெழுகுவர்த்தியை ஒளிரச்செய்து மிதிவண்டிச் சக்கரக்கம்பியைச்
சூடுபடுத்தவும்.
________________________________________
❖ கம்பி சிறிதுநேரம் சூடாக்கப்பட்டதும்
மின்விளக்கு ஒளிர்கிறதா?
________________________________________
________________________________________
❖ அப்படியாயின், கம்பியானது
சூடாக்கப்பட்ட பின் எவ்வாறு நாணயத்தைத் தொடுகிறது?
________________________________________
________________________________________
❖ மெழுகுவர்த்தி அணைந்து
சிறிது நேரத்திற்குப்பின் ஏன் மின்விளக்கு அணைகிறது?
________________________________________
________________________________________
❖ மிதிவண்டிச் சக்கரக்கம்பியைச்
சூடாக்கும் பொழுதும், குளிரச் செய்யும் பொழுதும் கம்பியில் நீளத்தில் என்ன மாற்றம்
நிகழ்கிறது?
________________________________________
________________________________________
செயல்பாடு 6: பரும விரிவு
ஓர்
இரும்புக்குண்டு மற்றும் அது மிகச்சரியாக உள்ளே நுழையும் அளவில் ஓர் இரும்புவளையம்
ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
❖ தற்போது இரும்புக்குண்டை நன்கு சூடாக்கவும். சூடாக்கியபின் அது
இரும்புவளையத்தினுள் நுழைகிறதா?
₹
நுழைகிறது
₹
நுழையவில்லை
❖ இரும்புக் குண்டை நன்கு குளிரச்செய்து அது இரும்பு வளையத்தினுள்
நுழைகிறதா? எனச் சரிபார்க்கவும்.
₹
நுழைகிறது
₹
நுழையவில்லை
திடப்பொருள்கள்
வெப்பத்தினால் விரிவடைகின்றன. வெப்பநிலை குறைந்ததும் சுருங்கி, மறுபடியும் பழைய நிலைக்கே
திரும்புகின்றன.