காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 7 : Magnetism
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. பின்வருவனவற்றுள்
காந்தத்தால் கவரப்படும் பொருள்
அ) மரப்பொருள்கள்
ஆ) ஏதேனும் ஓர் உலோகம்
இ) தாமிரம்
ஈ) இரும்பு மற்றும் எஃகு
விடை: ஈ) இரும்பு மற்றும் எஃகு
2 கீழ்க்காணும்
ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
அ) மின்காந்தம்
ஆ) முமெட்டல்
இ) தேனிரும்பு
ஈ) நியோடிமியம்
விடை: ஈ) நியோடிமியம்
3. ஒரு
சட்டக் காந்தத்தின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும்
அ) ஒன்றையொன்று கவரும்
ஆ) ஒன்றையொன்று விலக்கும்
இ) ஒன்றையொன்று கவரவோ, விலக்கவோ செய்யாது
ஈ) மேற்கண்டவற்றுள் எதுவுமில்லை
விடை: அ) ஒன்றையொன்று கவரும்
4. கற்பனையான
புவிக் காந்தப்புலம் எந்த வடிவத்தினைப் போன்றது?
அ) U வடிவ காந்தம்
ஆ) மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி
இ) வரிசுருள்
ஈ) சட்டக் காந்தம்
விடை: ஈ) சட்டக் காந்தம்
5.
MRI என்பதன் விரிவாக்கம்
அ) Magnetic Resonance Imaging
ஆ) Magnetic Running Image
இ) Magnetic Radio Imaging
ஈ) Magnetic Radar Imaging
விடை: அ) Magnetic Resonance Imaging
6. காந்த
ஊசி பயன்படுகிறது.
அ) காந்தவிசைக் கோடுகளை வரைய
ஆ) காந்தப்புலத்தின் திசையை அறிய
இ) கடல் பயணத்திற்கு
ஈ) மேற்காண் அனைத்தும்
விடை: ஈ) மேற்காண் அனைத்தும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் அதிகம்
2. ஒரு காந்தம் இரு (வட, தென்) முனைகளைக் கொண்டது.
3. மின்சார உற்பத்திக்குப் பயன்படும் காந்தங்கள் டைனமோ
4. கனமான இரும்புப் பொருள்களை உயர்த்தப் பயன்படுவது மின்காந்தங்கள்
5. தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் புவியின்
வட தென் முனைகளை நோக்கி இருக்கும்.
II. பொருத்துக.
1. மேக்னடைட் - காந்த விசைக்கோடுகள்
2. ஒரு சிறு சுழலும் காந்தம் - இயற்கைக் காந்தம்
3. கோபால்ட் - காந்த ஊசிப்பெட்டி
4. வளைபரப்புகள் - ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
5. பிஸ்மத் - டயா காந்தப் பொருள்கள்
விடைகள்
1. மேக்னடைட் - இயற்கைக் காந்தம்
2. ஒரு சிறு சுழலும் காந்தம் - காந்த ஊசிப்பெட்டி
3. கோபால்ட் - ஃபெர்ரோ காந்தப் பொருள்கள்
4. வளைபரப்புகள் - காந்த விசைக்கோடுகள்
5. பிஸ்மத் - டயா காந்தப் பொருள்கள்
IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான
ஒன்றைத் தேர்வு செய்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம்
கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம்
கூற்றுக்கு விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் தவறு.
1.கூற்று: இரும்புத்
துருவல்களின் செறிவு காந்தத்துருவப் பகுதிகளில் அதிகம்.
காரணம்: காந்தங்கள்மிகவும்
கூர்மையானவை.
விடை: இ) கூற்று சரியானது.
ஆனால் காரணம் தவறு.
2. கூற்று: புவியின்
காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால் உருவாகிறது.
காரணம்: உயர்
வெப்பநிலையில் ஒரு காந்தமானது அதன் காந்தப்பண்பினை இழக்கும்.
விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம்
கூற்றுக்கு விளக்கமல்ல.
V. சுருக்கமாக விடையளி.
1. காந்தப்புலம்
- வரையறு.
> காந்தப்புலம் என்பது காந்ததத்தினைச் சுற்றி
காந்த விளைவு அல்லது காந்த விசை உணரும் பகுதி ஆகும்.
> அலகு - டெஸ்லா அல்லது காஸ் (1 டெஸ்லா =
10,000 காஸ்)
2. செயற்கைக் காந்தம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக
> ஆய்வகம் மற்றும் தொழிற்சாலைகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காந்தங்களே செயற்கைக் காந்தங்கள் ஆகும்.
> (எ.கா.) சட்டக் காந்தங்கள், U-வடிவக்காந்தங்கள், குதிரை லாட வடிவகாந்தங்கள், வளைய வடிவகாந்தங்கள், மின்காந்தங்கள்.
3. இயற்கை
மற்றும் செயற்கைக் காந்தங்களை வேறுபடுத்துக.
இயற்கைக் காந்தங்கள்
இயற்கையில் காணப்படும் ஒழங்கற்ற வடிவங்களும்,
பரிமாணங்களும் கொண்ட காந்தங்கள்.
இவை மாற்ற முயைாத நன்கு திடமான வலிமை கொண்ட காந்தமாகும்
இவை நீண்ட காலம் காந்தப் பண்புகளை இழக்காதவை.
மிகக் குறைந்த பயன்பாடு உடையவை
செயற்கைக் காந்தங்கள்
மனிதர்களால் உருவாக்கப்பட்ட
காந்தங்கள் வெவ்வேறு வடிவங்களிலும், பரிமாணங்களிலும் உருவாக்கிட முடியும்.
தேவையான குறிப்பிட்ட வலிமை கொண்ட
செயற்கைக் வெவ்வேறு வடிவங்களிலும், பரிமாணங்களிலும்
இவற்றின் பண்புகள் குறிப்பிட்ட
கால அளவு உடையது.
அன்றாட வாழ்வில் பெரும் அளவில்
பயன்படக்கூடியது.
4. புவியானது
மிகப்பெரிய சட்டக் காந்தமாகும். ஏன்? காரணம் தருக.
> பூமி ஒரு சட்டக் காந்தம் போல செயல்படுகிறது.
> இது ஒரு நிரந்தர காந்தம் அல்ல. ஆனால் ஒரு
மின் காந்தம்.
> பூமியில் ஆழமான பகுதிகளில்
காணப்படும் உலோமானது அதிக வெப்பத்தின் காரணமாக உருகிய நிலையில் காணப்படுகிறது. இதன்
காரணமாக பூமியானது ஒரு காந்தத்தைப் போல செயல்படுகிறது.
5. காந்தத்
தன்மையற்ற பொருள்களை எவ்வாறு அடையாளம் காண்பாய்? காந்தத் தன்மையற்ற பொருளுக்கு ஓர்
எடுத்துக்காட்டு தருக.
> காந்தத்தால் கவரப்படாத பொருட்களை
காந்தத் தன்மையற்ற பொருள்கள் என்கிறோம்.
> (எ.கா.) கண்ணாடி, மரம், நெகிழி, ரப்பர் போன்றன.
VI. விரிவாக விடையளி.
1. காந்தத்தின்
அன்றாட வாழ்வியல் பயன்களைப் பட்டியலிடுக.
> பழங்காலத்தில் கடலில் பயணம் செய்வோருக்கு
திசையினை அறிவதற்கான திசைக்காட்டும் கல்லாக' காந்தம் உதவி இருக்கிறது.
> மின்சார மணிகளிலும், மின் மோட்டார்களிலும்,
ஒலிப் பெருக்கிகளிலும், நுண்பேசிகளிலும் காந்தங்கள் பயன்படுகின்றன.
> வங்கிகளில் கணினிகளைக் கொண்டு காசோலையில்
அச்சடிக்கப்பட்ட MICR எண்களை அறிந்துக்கொள்ள பயன்படுகிறது.
> தொழிற்சாலைகளில் காந்தப்பொருள்களோடு கலந்திருக்கும்
காந்தம் அல்லாத கழிவுக் கூளப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் 'காந்த கடத்தும் பட்டையாகப்
பயன்படுகிறது.
> மருத்தவ மனைகளில் வலிமையான மின்காந்தங்களைப்
பயன்படுத்தி MRI (காந்த ஒத்ததிர்வு நிழலுரு படம்) மூலம் குறிப்பிட்ட உள்ளுறுப்பின்
நிழலுருக்களை உருவாக்கிட உதவுகிறது.
2. ஓர்
ஆணியை எவ்வாறு தற்காலிக காந்தமாக மாற்றுவாய்?
> குண்டூசிகளை மரத்தாலான பலகையினில்
பரப்பி வைத்து அதனருகே இரும்பு ஆணியினைக் கொண்டு செல்லவும். அவை கவரப்படுவது இல்லை.
> சட்டக்காந்தத்தின் ஒரு முனையினால் ஆணியின்
ஒரு முனையினைத் தொடவும்.
> மெதுவாக ஆணியின் மீது ஒரே திசையில் மறுமுனைவரை
நகர்த்தவும்.
> படத்தில் காட்டியவாறு மீண்டும் இதே போன்று
20 அல்லது 30 முறை செய்யவேண்டும்.
> ஆணியின் மீது முன்னும் பின்னும் நகர்த்தாமல்
ஒரே திசையில் நகர்த்த வேண்டும்.
> தற்போது குண்டூசிகளுக்கருகில் இரும்பு ஆணியினைக்
கொண்டு செல்லவும்.
> இரும்பு ஆணி தற்காலிக காந்தமாக மாறுவதால்
குண்டூசிகள் ஆணியின் மீது ஒட்டிக்கொள்கின்றன.
3. புவிக்காந்தம்
பற்றி குறிப்பெழுதுக.
> புவியானது மிகப்பெரிய காந்த இருமுனையினைக்
கொண்டதாக அறிவியல் அறிஞர்கள் கற்பனை செய்திருந்தனர். பு
> வியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின்
தென்முனையானது, புவியில் வடமுனைக்கருகிலும், புவிக்காந்தத்தில் வட முனையானது, புவியில்
தென்முனைக்கருகிலும் அமைந்துள்ளது. இதே காந்தங்களின் துருவங்களை இணைக்கும் நேர்க்கோடானது
காந்த அச்சு என்று அழைக்கப்படுகிறது.
> காந்தத்தின் அச்சானது புவியில் வடமுனையினை
சந்திக்கும் புள்ளியானது புவிகாந்த முனை அல்லது காந்த வடமுனை என்றழைக்கப்படுகிறது.
> காந்தத்தின் அச்சானது புவியில் தென்முனையினை
சந்திக்கும் புள்ளியானது புவிக்காந்த முனை அல்லது காந்த தென்முனை என்றழைக்கப்படுகிறது.
> காந்த அச்சு மற்றும் புவியின் அச்சு ஒன்றுக்கொன்றாக
இணையாக இருப்பதில்லை. புவியின் அச்சிற்கு 10 முதல் 15 வரை காந்த அச்சிற்கு சாய்வாக
உள்ளது.
> புவியின் காந்தத் தன்மைக்கு காரணங்கள்
i) புவியில் உள்ள காந்தப்பொருட்களின் நிறை
ii) சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுகள்
iii) நிலவின் செயல்திறன்.
> புவியின் ஆரம் 6400 கிலோமீட்டருடன் ஒப்பிடும்போது,
புவியின் உட்பரப்பில் சுமார் 3500 கி.மீ. வரை உள்ளகப் பகுதியில் உருகிய நிலையில் உலோகப்
பாய்பொருள்கள் இருப்பதால் புவிகாந்தப்புலம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
VII. உயர்சிந்தனை வினாக்கள்.
1. பூமி
மிகப்பெரிய காந்தம் போன்று செயல்பட்டாலும் பிற காந்தப்பொருள்களை பூமியால் கவரமுடியவில்லை
ஏன்?
> புவியில் காந்தபுல மதிப்பு ஏறத்தாழ 2x
10-5 டெஸ்லா ஆகும்.
> இம்மதிப்பு மிகக் குறைவு என்பதால், பிற காந்தப்
பொருள்களை பூமியால் கவரமுடியவில்லை
2. ஒரு
இரும்புத் துண்டினை ஒரு காந்தத்தினைக் கொண்டு காந்தமாக்கும்போது முன்னும் பின்னும்
நகர்த்த அறிவுறுத்தப்படுவதில்லை. ஏன்?
> ஒரு பொருளை (இரும்புத்துண்டு)
காந்தமாக்க காந்தத்துடன் உரசினால் போதுமானது. அதை முன்னும் பின்னும் நகர்த்த தேவை இல்லை.
> இரும்புத்துண்டினை, காந்தத்திற்கு
அருகில் கொண்டு சென்று முன்னும் பின்னும் நகர்த்தினால், அதனோடு தொடர்புடைய காந்தப்பாயம்
மாறுபட்டு மின்னியக்கு விசையானது தூண்டப்படும்.
3. தமிழ்தாரகா
மற்றும் சங்கமித்திரை ஆகிய இருவரும் சட்டக் காந்தத்தினைக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது காந்தமானது கீழே விழுந்து நான்கு துண்டுகளானது. அவற்றில் எத்தனை காந்தத் துருவங்கள்
கிடைக்கும்?
> எட்டு துருவங்கள் காணப்படும்.
> ஒரு காந்தத்திற்கு இரு (வட-தென்) துருவங்கள்
காணப்படும். எனவே நான்கு துண்டுகளுக்கு (காந்தம்) (4 x 2 = 8) எட்டு துருவங்கள் காணப்படும்.