காந்தவியல் | அலகு 7 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - புவிக் காந்தம் | 8th Science : Chapter 7 : Magnetism
புவிக் காந்தம்
புவியானது, மிகப்பெரிய இருமுனையினை உடைய காந்தமாக அறிவியல் அறிஞர்களால்
கருதப்படுகிறது. இருந்தபோதிலும், புவிக்காந்த முனைகளின் நிலைகளை தெளிவாக வரையறுக்க
அவர்களால் இயலவில்லை. புவியின் உட்பகுதியில் உள்ள கற்பனையான காந்தத்தின் தென்முனையானது,
புவியியல் வடமுனைக்கு அருகிலும் வடமுனையானது, புவியியல் தென்முனைக்கு அருகிலும் அமைந்துள்ளது.
இந்த காந்தத் துருவங்களை
பால்வழி
விண்மீன் திரளில் அமைந்துள்ள மேக்னிட்டார்
என்று அழைக்கப்படும் காந்த நியூட்ரான் விண்மீனே நடைமுறையில் காணப்படும் அதிக திறன்
மிகுந்த காந்தமாகும். மேக்னிட்டார், 20 கிலோ மீட்டர் விட்டமும், சூரியனைப் போன்று
2 அல்லது 3மடங்கு நிறையும் கொண்டது. இதன் மிக அதிக காந்தப்புலம் ஊறு விளைவிக்கக் கூடியது.
அதன் நிலையிலிருந்து ஓர் உயிரி 1000 கிமீ. தூரத்தில் இருந்தாலும் கூட அந்த உயிரியின்
இரத்த ஓட்டத்திலுள்ள அனைத்து இரும்பு அணுக்களையும் (ஹீமோகுளோபின்) உறிஞ்சும் திறன்
கொண்டது.
காந்தத்தின் அச்சானது புவியியல் வடமுனையினைச் சந்திக்கும் புள்ளியானது
வட புவிக்காந்த முனை அல்லது காந்த வடமுனை என்றழைக்கப்படுகிறது. காந்தத்தின் அச்சானது
புவியியல் தென் முனையினை சந்திக்கும் புள்ளியானது தென் புவிக்காந்த முனை அல்லது காந்த
தென்முனை என்றழைக்கப்படுகிறது. காந்த அச்சு மற்றும் புவியின் அச்சு (சுழல் அச்சு) ஒன்றுக்கொன்று
இணையாக இருப்பதில்லை. காந்த அச்சானது புவியின் அச்சிற்கு 10° முதல் 15° வரை சாய்வாக
அமைந்துள்ளது.
இன்றளவிலும் புவியின் காந்தப் பண்பிற்கான காரணத்தினைமிகச்சரியாக
அறிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் புவியின் காந்தத்தன்மைக்கான காரணங்கள், சில
கீழே தரப்பட்டுள்ளன.
• புவியில் உள்ள காந்தப் பொருள்களின் நிறை
• சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுகள்
• நிலவின் செயல்திறன்.
பூமியின் உள்ளகப் பகுதியில் உருகிய நிலையில் உள்ள உலோகப் பொருள்களின்
காரணமாகவே புவிகாந்தப்புலம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இந்த உருகிய பொருள்கள்
6400 கிலோ மீட்டர் ஆரம் கொண்ட புவியின் மையத்தில் அமைந்துள்ள 3500 கிலோ மீட்டர் ஆரம்
கொண்ட உட்கருவில் காணப்படுகின்றன.
புறாக்கள்
அசாதரணமாக நீண்ட தூரம் பயணித்துத் திரும்பும் திறன் இதுவரை கொண்டுள்ளன. சென்றிறாத பகுதிகளில்
கொண்டுசென்று விட்டாலும் அவை தங்களது இருப்பிடத்திற்கே வரக்கூடியவை புவியின் காந்தப்புலத்தினை
அறிந்திடும் மேக்னடைட் என்னும் காந்தப்பொருள் அவற்றின் அலகுகளில் இருப்பதால் புவியின்
காந்தப்புலத்தை அறியும் ஆற்றலை அவை பெற்றுள்ளன. அத்தகைய காந்த உணர்வு
(magneto-reception) காந்த ஏற்கும் பண்பு என்று அழைக்கப்படுகிறது.
புவிக்காந்தப்புலம்
புவியின் ஒரு புள்ளியில் தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்த ஊசியானது
புவியின் வட- தென் திசையில் தோராயமாக வந்து நிற்கும். பூமியானது மிகப்பெரிய காந்த இருமுனையாகச்
செயல்படுகிறது என்பதனையும் அதன் காந்த முனைகள் புவியியல் துருவங்களுக்கு அருகில் உள்ளன
என்பதனையும் இது காட்டுகிறது. ஒரு காந்த ஊசியின் வடமுனை தோராயமாக புவியியல் வட முனை
நோக்கி (NG) நிற்கிறது. எனவே, காந்தஊசியின் வடமுனை, புவியின் தென் முனையால் (Sm) கவரப்படும்.
இது புவியியல் வட முனைக்கு (NG) அருகில் அமைந்திருக்கும். அதேபோல் காந்தஊசியின் தென்முனை
புவியின் வடமுனையால்(Nm) கவரப்படும் இது புவியியல் தென் முனைக்கு (SG) அருகில் அமைந்திருக்கும்.
காந்தப் புல வலிமையின் எண்மதிப்பானது புவிப்பரப்பின் மீது
25 முதல் 65 மைக்ரோ டெஸ்லா வரை இருக்கும்.
குளிர்பதனிகளில்
பயன்படுத்தப்படும் காந்தத்தைவிட புவிக்காந்தமானது 20 மடங்கு அதிக திறன் கொண்டதாகும்.