பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography: Disaster Management: Responding to Disasters
II. சுருக்கமாக விடையளி.
1.
பேரிடர்
முதன்மை
மீட்புக்
குழு
என்பவர்
யாவர்?
விடை:
பேரிடர் முதன்மை மீட்புக் குழு:
• காவலர்கள்
• தீயணைப்புத் துறையினர்
• அவசர மருத்துவக் குழுக்கள்
2.
ஜப்பானில்
மிக
அதிக
அடர்த்தியில்
நிலநடுக்க
வலை
காணப்பட்டாலும்
இந்தோனேசியாவில்
தான்
மிக
அதிக
அளவில்
நிலநடுக்கங்கள்
ஏற்படுகின்றன.
ஏன்?
விடை:
• இந்தோனேசியா அதிக நிலநடுக்கப் பகுதிகளைக் கொண்டுள்ளது. ஐப்பானை விட அதிக பரப்பளவைக் கொண்டுள்ளதால் இந்தோனேசியாவில்தான் உலகிலேயே அதிக நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.
3.
இந்தியாவில்
ஒவ்வொருநாளும்
எத்தனை
ஆண்கள்
பெண்கள்
தீவிபத்தினால்
இறக்கின்றனர்?
விடை:
• இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 42 பெண்களும் 21 ஆண்களும் தீ விபத்தினால் இறக்கின்றனர்.
4.
சுனாமிக்கு
பிறகு
என்ன
செய்ய
வேண்டும்?
விடை:
• ஆழிப்பேரலை தொடர்பான அண்மைச் செய்திகளுக்கு வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
• காயமடைந்தவர்களுக்கும் ஆழிப்பேரலையில் சிக்கிக்கொண்ட நபர்களுக்கும் உதவிசெய்யவும்.
• ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்க வேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுனர்களை உதவிக்கு அழைக்கவும்.