Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்

அறிமுகம் | புவியியல - பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் | 9th Social Science : Geography: Disaster Management: Responding to Disasters

   Posted On :  08.09.2023 03:08 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்

பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்

பேரிடர் என்பது உயிருக்கும் உடைமைகளுக்கும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்து.

அலகு 8

பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்


 

கற்றல் நோக்கங்கள்

ஆழிப் பேரலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் புரிந்துகொள்ளுதல்

 நிலநடுக்கம், கலவரம் மற்றும் தீ போன்றவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளை விளக்குதல்

கலவரத்தைக் கையாளும் முறையை விளக்குதல்

 

ஆழிப் பேரலை (சுனாமி) - பற்றிய ஆய்வு

 டிசம்பர் 26, 2004, அன்று காலை 8 மணிக்கு அந்த இடமே அமைதியில் மூழ்கியது. தரை அச்சத்தில் குலுங்கியது மனிதர்களை விழுங்கும் அலையான லாபூன் அவனுடைய பெருங்கடல் குகையிலிருந்து கிளர்ந்து எழுந்துள்ளதை இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அந்தமான் தீவில் தனியாக வாழும் மோக்கேன் என்ற பழங்குடி மனிதன் அறிந்திருந்தான். அவன் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் அறிந்திருந்தான். உயரும் அலையின் சுவர் அந்தத் தீவை கழுவியது. அந்த தீவின் தீங்கையும் அசுத்தத்தையும் அழித்தது. லாபூனின் எச்சரிக்கை சைகையைக் கவனிக்க பெரியோர்கள் குழந்தைகளைப் பார்த்து " கடல் நீர் பின்வாங்கி சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஒடுங்கள் எனச் சொல்வார்கள்

சுமத்ரா கடற்கரைக்கு அப்பால் 9.1 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உருவான பேராழி அலையின் தடத்தில் தான் அந்தமான் நிகோபார் தீவுகள் அமைந்திருந்தன இந்த தீவில் 1879 பேர் இறந்ததாகவும் மற்றும் 5600 பேர் காணமல் போனதாகவும் இறுதி புள்ளிவிவரம் கூறுகிறது. லாபூன் மற்றும் அதுபோன்ற புராணக் கதைகளைக் கேட்ட இத்தீவுக்காரர்கள் பேராழி அலையிலிருந்து காயப்படாமல் தப்பித்திருக்கிறார்கள் தெற்கு நிகோபார் தீவில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் வெளியாட்கள் ஆவர். உள்ளூர் பேராழி அலை எச்சரிக்கை அமைப்பு அவர்களுக்கு உயரமான இடங்களுக்குச் செல்ல வழிகாட்டவில்லை .

 

அறிமுகம்

மனிதர்கள் காலம் காலமாக சொல்லி வந்த கதைகள் பேரிடரின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க சமூகத்திற்கு உதவி புரிந்திருக்கிறது இக்கதைகள் மானுடவியலார் மற்றும் சமூக அறிவியலார்களுக்கு ஆதாரமாக இருந்தது ஆனால் கடந்த பதினெட்பாண்டுகளில் உள்ளூர்வாசிகள் எவ்வாறு பேரிடரை புரிந்துகொண்டு அதற்குத் தயாராகிறார்கள் என்பதையும் புரியவைத்தது. இவ்வகை புராணக் கதைகள் வரப்போகும் பேரிடர்களை எதிர்கொள்ள அறிவியல் அறிஞர்களுக்கு உதவி புரிகின்றன. இந்தப் பாடத்தில் பேரிடர்களை எவ்வாறு எதிர்கொண்டு நெகிழ்திறன் மிக்கவர்களாக மாறுவது என்பதைக் காண்பீர்கள்.

பேரிடர் என்பது உயிருக்கும் உடைமைகளுக்கும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்தும் பேராபத்து.

Tags : அறிமுகம் | புவியியல.
9th Social Science : Geography: Disaster Management: Responding to Disasters : Disaster Management: Responding to Disasters in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் : பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல் - அறிமுகம் | புவியியல : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்