காந்தவியல் | பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்து விடுமா? எப்பொழுது? | 6th Science : Term 3 Unit 1 : Magnetism
காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந்து விடுமா? எப்பொழுது?
வெப்பப்படுத்தும் பொழுதோ, உயரத்திலிருந்து கீழே போடும்பொழுதோ,
சுத்தியால் தட்டும் பொழுதோ காந்தங்கள்
கைபேசி,
குறுந்தகடு, கணினி போன்றவற்றிற்கு அருகில்
காந்தங்களை வைத்தால், காந்தங்கள் அதன் காந்தத்தன்மையை இழந்து விடும். அந்தப் பொருள்களும்
பாதிப்புக்கு உள்ளாகும்.
செயல்பாடு 3: காந்த திசைகாட்டியை
உருவாக்குவோமா!
நீங்கள்
செயல்பாடு - 2 இல் காந்தமாக்கிய காந்த ஊசியை இரு ஸ்டைரோஃபோம் (தெர்மோகோல்) பந்துகளில்
செருகி, அதனை குவளையிலுள்ள நீரில் மிதக்க விடவும். காந்த ஊசி வடக்கு - தெற்கு திசையில்
ஓய்வு நிலைக்கு வருகிறதா? எனச் சரிபார்க்கவும்.
குறிப்பு: உங்களிடம் தெர்மோகொகோல்
பந்துகள் இல்லையெனில் காய்ந்த இலையையோ,கார்க் துண்டையோ பயன்படுத்தலாம்.