பருவம் 3 அலகு 1 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - காந்தங்களைக் கொண்டு திசையறிதல் | 6th Science : Term 3 Unit 1 : Magnetism
காந்தங்களைக் கொண்டு திசையறிதல்
சட்டகாந்தத்தின் நடுவில் ஒரு நூலைக் கட்டி அதனைத் தொங்கவிடவும்.
காந்தம் எந்தத் திசையில் ஓய்வுநிலைக்கு வருகிறது எனப் பார்க்கவும்.
காந்தம் ஓய்வுநிலைக்கு வரும் திசைக்கு இணையாக (அதாவது சட்டகாந்தத்திற்கு
இணையாக) ஒரு கோட்டினை ஒரு அட்டையிலோ அல்லது மேசையிலோ வரைந்து கொள்ளுங்கள்.
காந்தத்தை மெதுவாகத் திருப்பி மறுபடியும் அது ஓய்வுநிலைக்கு
வரும் வரை காத்திருக்கவும். இதுபோல் மூன்று அல்லது நான்கு முறை மறுபடியும் செய்து பார்க்கவும்.
ஒவ்வொரு முறையும் காந்தம் அதே திசையில்தான் ஓய்வுநிலைக்கு வருகிறதா?
________________________________________
எந்த திசையில் அது ஒவ்வொரு முறையும் ஓய்வுநிலைக்கு வருகிறது?
________________________________________
தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதும் வடக்கு தெற்கு திசையிலேயே
ஓய்வுநிலைக்கு வருவதைக் காணலாம். வடக்கே நோக்கும் முனை காந்தத்தின் வடதுருவம் எனவும்,
தெற்கே நோக்கும் முனை காந்தத்தின் தென்துருவம் எனவும் அழைக்கப்படுகிறது.
தடையின்றி தொங்க விடப்பட்டுள்ள கா ந்தமானது எப்பொழுதும்
வடக்கு-தெற்கு திசையிலேயே ஓய்வு நிலைக்கு வரும்.
உங்களுக்குத்
தெரியுமா
காந்தத்தின்
திசைகாட்டும் பண்பு பல ஆண்டுகளாக திசையை அறியப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏறத்தாழ
800 ஆண்டுகளுக்கு முன்பு சீனர்கள் காந்த கற்களைக் கட்டி தொங்கவிட்டால், அவை வடக்கு
- தெற்கு திசையிலேயேஓய்வுநிலைக்கு வருவதைக் கண்டறிந்தனர். காந்தத்தன்மையுடைய கற்களைக்
கொண்டு திசைகாட்டும் கருவிகள் செய்து பயன்படுத்தினர்.
சீன
மாலுமிகள் தங்கள் படகுகளிலும் கப்பல்களிலும் இத்தகைய கற்களைக் கொண்டு, புயல்காலங்களிலும்,
மூடுபனி காலங்களிலும் திசையையறிந்து பாதுகாப்பான கடல் பயணங்களை மேற்கொண்டனர்.