காற்று | பருவம் 2 அலகு 4 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையில் காற்றின் முக்கியத்துவம் | 6th Science : Term 2 Unit 4 : Air
தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கையில்
காற்றின் முக்கியத்துவம்
தாவரங்களின் சுவாசம்
தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே தாவரங்களிலும்
சுவாசம் நடைபெறுகிறது. சுவாசித்தலின்பொழுது, தாவரங்கள் விலங்குகளைப் போலவே ஆக்சிஜனை
உள்ளிழுத்து கார்பன்-டை- ஆக்சைடை வெளிவிடுகின்றன. தாவரங்கள் வளிமண்டலக் காற்றுடன் நிகழ்த்தும்
வாயுப்பரிமாற்றம் அவற்றின் இலைகளிலுள்ள ஸ்டொமட்டா என்ற மிகச்சிறிய இலைத்துளைகள் மூலம்
நடைபெறுகிறது.
ஒளிச்சேர்க்கை
தாவரங்கள் அவற்றிற்கான உணவினை ஒளிச்சேர்க்கை மூலம் உற்பத்தி
செய்கின்றன. ஒளிச்சேர்க்கையின் பொழுது, காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடும் மண்ணிலுள்ள
நீரும் சூரிய ஒளியின் துணையுடன் வினை புரிந்து உணவை உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலான
தாவரங்களில் பச்சையம் எனும் ஒரு நிறமி காணப்படுகிறது.
இது ஒளிச்சேர்க்கையின் பொழுது சூரிய ஒளியினை உறிஞ்ச பயன்படுகிறது.
கீழுள்ள சமன்பாடு ஒளிச்சேர்க்கையை விளக்குகிறது.
தாவரங்கள், சுவாசித்தலின்பொழுது எடுத்துக் கொண்ட ஆக்சிஜனை விட
அதிக அளவு ஆக்சிஜனை ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவிடுகின்றன.
விலங்குகளின் சுவாசம்
உயிரினங்கள் அனைத்தும் உயிர் வாழக் காரணமாக இருக்கும் மிக முக்கியமான
தனிமமான ஆக்சிஜன் காற்றில் உள்ளது என்பதை நாம் அறிவோம். நாம் சுவாசிக்கும் காற்றில்
ஆக்சிஜன் 21% உள்ளது. ஆக்சிஜன் இன்றி உயிர்கள் வாழ இயலாது.
நாம் சுவாசிக்கும்பொழுது, அதிலுள்ள ஆக்சிஜன், செரிக்கப்பட்ட
உணவுப் பொருளுடன் வேதி வினைபுரிந்து, கார்பன்- டை-ஆக்சைடு, நீராவி மற்றும் ஆற்றலை உருவாக்குகிறது.
இவ்வினையில் உருவாகும் ஆற்றலானது, நமது உடலின் பல்வேறு செயல்களான இயக்கம், வளர்ச்சி
மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இவ்வினையில் செரிக்கப்பட்ட உணவுப் பொருளுடன்
ஆக்சிஜன் வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி மற்றும் ஆற்றல் உருவாகும் நிகழ்வு
"சுவாசம்" எனப்படும். இவ்வினையை சமன்பாட்டில் பின்வருமாறு எழுதலாம்.
சுவாசத்தின் போது உருவாகும் கார்பன்-டை- ஆக்சைடு இரத்தத்தில்
கலந்து, நுரையீரல்கள் மூலம் வெளியேற்றபடுகின்றது.
நாம் உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் காற்றில் ஒரே மாதிரியான
வாயுக்கள் உள்ளன. ஆனால் நைட்ரஜனைத் தவிர, மற்ற வாயுக்களின் அளவுகளில் மாற்றம் ஏற்படும்.
உள்ளிழுக்கும் காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகம், வெளியிடும் காற்றில் கார்பன்-டை- ஆக்சைடின்
அளவு அதிகம்.
உள்ளிழுக்கும் மற்றும் வெளியிடும் இயைபுகளைக் காற்றின் கீழ்கண்ட
அட்டவணையில் காண்க.
நீரில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் சுவாசம்
குளங்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் போன்றவற்றில் உள்ள நீரில்
கடல்கள் குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் கரைந்திருக்கும். இந்த ஆக்சிஜனை நீர்நிலைகளில் வாழும்
தாவரங்கள் மற்றும் விலங்குகள் தங்களது சுவாசத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக
தவளைகள் தோல்வழியாகவும், மீன்கள் செதில்களின் துணை கொண்டும் சுவாசிக்கின்றன.
கார்பன்
– L ஆக்சைடை -57°C க்கு குளிர்விக்கும் பொழுது, அவை திரவ நிலையை அடையாமல்,
நேரடியாக திட நிலைக்கு மாறுகிறது. இதனை உலர்பனிக்கட்டி என்றழைக்கின்றனர். இது குளிர்விக்கும்
காரணியாகப் பயன்படுகின்றது. இறைச்சி மற்றும் மீன்கள் போன்றவற்றை சரக்குந்து மற்றும்
சரக்குப் பெட்டிகளில் ஏற்றுமதி செய்யும் பொழுது, அப்பொருள்களைப் பதப்படுத்த உலர்பனிக்கட்டியைப்
பயன்படுத்துகின்றனர்.