புவியியல் - இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் | 10th Social Science : Geography : Chapter 4 : India - Resources and Industries
தொழிற்சாலைகள்
மூலப்பொருள்கள் இயந்திரங்களின் மூலம் உற்பத்தி பொருள்களாக மாற்றப்படும் இடங்களுக்கு தொழிலகங்கள் என்று பெயர். இத்துறை மதிப்புக் கூட்டுத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. மூலப்பொருள்களின் ஆதாரங்களின் அடிப்படையில் தொழிலகங்கள் 1. வேளாண் சார்ந்த தொழிலகங்கள் 2. காடுகள் சார்ந்த தொழிலகங்கள் மற்றும் 3. கனிமம் சார்ந்த தொழிலகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
இத்தொழிலகங்கள்
வேளாண் துறையிலிருந்து மூலப்பொருள்களை பெறுகின்றன. வேளாண் சார்ந்த தொழிலகங்களைப்
பற்றி இங்கு காண்போம்.
அ) பருத்தி நெசவாலைகள்
நெசவாலைகள்
என்பது பருத்தி, சணல், கம்பளி,
பட்டு
மற்றும் செயற்கை இழை ஆகியனவற்றை உள்ளடக்கியதாகும். இந்தியா இத்துறையில் உலகின்
இரண்டாம் இடத்தில் உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின்
முதல் பருத்தி - நெசவாலை 1818ஆம் அண்டு, கொல்கத்தாவிற்கு
அருகில் உள்ள போர்ட் க்ளாஸ்டர் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது.
பாரம்பரிய
தொழில்களான கைத்தறி, கைவினைப்பொருள்கள்,
சிறிய
விசைத்தறிகள் போன்றவை லட்சக்கணக்கிலான கிராமப்புற மற்றும் புறநகர் மக்களுக்கு
வேலைவாய்ப்பினை அளிக்கும் ஆதாரங்களாக உள்ளன.
தற்போது இந்தியா பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகள், நூற்பு கருவிகளின் எண்ணிக்கையில் முதன்மையான நாடாகவும் உள்ளது. தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிக பெரிய நவீன தொழிலக பிரிவாக உள்ளது.
பருத்தி
இழையிலிருந்து, விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங்
என்று பெயர்.
மும்பை
மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை, "இந்தியாவின்
மான்செஸ்டர்" என்று அழைக்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண்,
ஈரப்பத
காலநிலை, மும்பைத் துறைமுகம்,
எளிதில்
கிடைக்கும் நீர்மின் சக்தி, சந்தை வசதி,
சிறந்த
போக்குவரத்து வசதி ஆகியன மும்பையில் அதிக அளவு பருத்தி நெசவாலைகள் இருப்பதற்கு
காரணங்களாக அமைகிறது.
மகாராஷ்டிரம்,
குஜராத்,
மேற்கு
வங்காளம், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய
மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றது. தமிழ்நாட்டில் உள்ள
கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால்
கோயம்புத்தூர் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 435
நெசவாலைகளில்
200 நெசவாலைகள் கோயம்புத்தூர் பகுதியில்
அமைந்துள்ளன. ஈரோடு, திருப்பூர்,
கரூர்,
சென்னை,
திருநெல்வேலி, மதுரை,
தூத்துக்குடி,
சேலம்
மற்றும் விருதுநகர் ஆகியன மாநிலத்தின் பிற முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
சணல்
என்பது குறைவான விலையில் கிடைக்கக்கூடிய இழைநார். இது சிப்பங்கள் மற்றும் சாக்கு
பைகள் தயாரிக்கப் பயன்படுகிறது. தற்காலத்தில் சணலானது பருத்தி மற்றும் ரோமத்துடன்
சேர்த்து நெசவு செய்யப்படுகிறது. பருத்தி நெசவாலைகளுக்கு அடுத்தாற்போல் சணல்
ஆலைகள் இந்தியாவின் இரண்டாவது பெரிய நெசவாலைத் துறையாக உள்ளது. இயற்கையான சணல்
என்பது புதுப்பிக்கக் கூடிய எளிதில் மட்கக்கூடிய,
சுற்றுச்சூழலுக்கும்
உகந்ததாகவும் உள்ளதால் இது தங்க இழைப்பயிர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவின்
முதல் சணல் ஆலை, ஆங்கிலேயேரான ஜார்ஜ் ஆக்லாண்டு என்பவரால் 1854ஆம்
ஆண்டு கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ரா என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
இந்தியா உற்பத்தியில் முதலிடத்திலும், சணல்
பொருள்கள் உற்பத்தியில் வங்காள தேசத்திற்கு அடுத்தாதாக இரண்டாமிடத்திலும் உள்ளது.
சணல் பைகள், கூடார துணிகள்,
சிப்பப்பைகள்,
தரைவிரிப்பு, திரைச்சீலைகள், கயிறுகள், துணிகள், கால்மிதியடிகள்
போன்றவை தயாரிக்க சணல் பயன்படுத்தப்படுகிறது. தற்சமயம் ரோமத்துடன் கலந்துநெகிழிலான
அறைக்கலன்கள் காப்பிடப்பட்ட உறைகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
மேலும் இவை பருத்தியுடன் கலந்து போர்வைகள் மற்றும் கம்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன. சணல் உற்பத்தி பகுதிகள் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றங்கரை நெடுகிலும் அமைந்துள்ளது. டிட்டகார், ஜகட்டட், பட்ஜ்-பட்ஜ், ஹவுரா மற்றும் பத்ரேஸ்வர் முதன்மை சணல் பொருள்கள் உற்பத்தி மையங்களாகும். ஆந்திரப்பிரதேசம், பீகார், அசாம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா சணல்கள் உற்பத்தி செய்கின்ற பிற மாநிலங்களாகும்.
தேசிய
சணல் வாரியத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
மத்திய
பட்டு ஆராய்ச்சி தொழில் நுட்ப நிறுவனம் (CSTRI)
பட்டு
வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் -சார்ந்த ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு
நிறுவனமாகும். இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய
அரசாங்கத்தின் மத்திய பட்டு வளர்ப்பு வாரியத்தால் 1983ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டது.
பழங்காலம்
தொட்டே இந்தியா பட்டு உற்பத்திக்குப் பெயர் பெற்றது. கச்சா பட்டு உற்பத்தியில்
இந்தியா சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் உள்ளது.
கர்நாடக
மாநிலம் பட்டு உற்பத்தியில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ளது. மேற்கு வங்காளம்,
ஜம்மு
காஷ்மீர், பீஹார்,
ஜார்க்கண்ட்,
சத்தீஸ்கர்,
உத்தரப்
பிரதேசம், பஞ்சாப்,
அசாம்
மற்றும் தமிழ்நாடு ஆகியன குறிப்பிடத்தக்க பட்டு உற்பத்தியாளர்கள் ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
இந்திய
வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் நவம்பர் 20, 1975இல்
தொடங்கப்பட்ட கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தற்போது இந்திய ஜவுளி துறை
அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் உள்ள உத்யோக் -பவனை தலைமையிடமாக கொண்டு
செயல்பட்டு வருகிறது.
கரும்பு,
சர்க்கரை
- கிழங்குகள் அல்லது சர்க்கரைப் பொருள்கள் அடங்கிய பயிர்களிலிருந்து சர்க்கரை
தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் சர்க்கரை பெரும்பாலும் கரும்பில் இருந்து
எடுக்கப்படுகிறது. பருத்தி நெசவுக்கு அடுத்து இரண்டாவது பெரிய வேளாண்
தொழிற்சாலைகள் இதுவாகும். உலக கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக
இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. கரும்பு எளிதில் எடை இழக்கும் தன்மையுடையதாகும். போக்குவரத்திற்கு
அதிக எடை கொண்டதாகவும் உள்ளதால் இத்தொழிற் சாலைகள் கரும்பு பயிரிடும் பகுதிகளுக்கு
அருகாமையில் அமைந்துள்ளன.
நாட்டின்
மொத்த சர்க்கரை உற்பத்தியில் உத்தரப்பிரதேசம் 50
சதவிகிதத்தை
கொண்டு முதலிடம் வகிக்கிறது. மகாராஷ்டிரா,
கர்நாடகா,
ஆந்திரப்பிரதேசம்,
தமிழ்நாடு,
பீகார்,
பஞ்சாப்,
குஜராத்,
ஹரியானா
மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 90
சதவிகித
சர்க்கரை ஆலைகளையும், உற்பத்தி செய்யும் மாநிலங்களாகவும் உள்ளன.
காடுகள்,
காகித
தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்கள்,
அரக்கு,
விளையாட்டு
பொருள்கள், ஒட்டுப் பலகை (Plywood)
போன்ற
பொருள்களைத் தருகின்றன.
காகித தாள்கள், காகித அட்டைப் பெட்டிகள், மெல்லிழைதாள்கள், காகிதப் பைகள், எழுது பொருள்கள், உரைகள் மற்றும் அச்சிடப்பட்ட காகித பொருள்களான புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் நாளேடுகள் ஆகிய பொருள்கள் காகிதத் தொழிற்சாலை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. உயர்தர அச்சு தாள்கள் மற்றும் செய்தித்தாள் உற்பத்திக்கு மென் மரங்கள் மூலப் பொருள்களாக பயன்படுகின்றன. காகித பயன்கள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த பயன்பாட்டிற்கும் சமுதாயத்தின் ஒட்டுமொத்த நல வாழ்வினை அளவிடும் கருவியாக உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியாவின் முதல் காகிதத் டங்களுக்குத் தொழிற்சாலை 1812ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
இந்தியாவில்
ராயல் பெங்கால் காகிதத் தொழிற்சாலை கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள பாலிகஞ்ச் என்னும் இடத்தில் 1867ஆம்
ஆண்டு நிறுவப்பட்டது. மரக்கூழ், மூங்கில்,
சலாய்
மற்றும் சவாய் புற்கள், உபயோகப்படுத்தப்பட்ட காகிதங்கள்,
கரும்பு
சக்கை போன்றவை காகிதத் தொழிற்சாலைக்கு தேவையான மூலப்பொருள்களாகும். மேற்கு
வங்காளம் இந்தியாவில் காகித உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமாகும்.
மத்தியப்பிரதேசம், ஒடிசா,
தமிழ்நாடு
போன்றவை காகித உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாநிலங்களாகும்.
உங்களுக்குத் தெரியுமா?
தேசிய
செய்திகள் மற்றும் காகித உங்களுக்குத் - ஆலைகள் (NEPA) மத்தியப்பிரதேச
மாநில பர்கான்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாநகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது
இத் தொழிற்சாலைகள் உலோக
மற்றும் உலோக மற்ற மூலப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன. இரும்பு எஃகு தொழிற்சாலை
ஒரு முக்கியமான கனிமம் சார் தொழிற்சாலை ஆகும்.
இரும்பு
எஃகு தொழிற்சாலைகள் இதன் உற்பத்தி பொருள்களை மற்ற தொழிலகங்களுக்கு தேவையான
மூலப்பொருளை அளிப்பதனால் அடிப்படையான உலோக தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.
பொறியியல், கனரக இயந்திரங்கள்,
இயந்திரக்
கருவிகள், வாகனங்கள்,
இரயில்
இன்ஜின்கள் மற்றும் இரயில்வே உபகரணங்கள்
தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரும்பை முதன்மை மூலப்பொருள்களாகப் பயன்படுத்துகின்றன.
ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி இரும்பு எஃகு உற்பத்தியின் அளவைக் கொண்டு
தீர்மானிக்கப்படுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
இரும்பு
மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலை
முதன் முதலில் 1830இல் தமிழ்நாட்டில் போர்டோ நாவோவில்
அமைக்கப்பட்டது.
டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை, 1907ஆம் ஆண்டு "சாக்சி” என்றழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட முதல் நவீன தொழிற்சாலையாகும். ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆகிய மாநிலங்களில் செறிந்து காணப்படுகின்றன. ஜாரியா ராணிகஞ்ச், பொகாரோ, கரன்புரா ஆகிய நிலக்கரி வயல்களும் மற்றும் மயூர்பஞ்ச், இயோன்ஜர் மற்றும் புரேனா ஆகிய இரும்பு தாது சுரங்கங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்திருப்பது இதன் காரணமாகும். இத்தொழிற்சாலைக்குத் தேவையான டோலமைட், மாங்கனீஷ் மற்றும் சிலிகான் போன்ற தாது படிவுகள் போதுமான அளவில் கிடைக்கின்றன.
இந்தியா,
உள்நாட்டு
வாகன சந்தையின் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் உலகளாவிய வாகனச்
சந்தையிலும் ஒரு முக்கிய பங்காற்றும் வகையில் வாகன உற்பத்தியில் முன்னேறி
வருகிறது. இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலகங்களில் இதுவும்
ஒன்றாகும்.
இந்தியாவின் முதல் வாகனத் தொழிலகம் மும்பைக்கு அருகில் உள்ள குர்லா என்னும் இடத்தில் 1947இல் பிரீமியர் வாகன நிறுவனம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து 1948இல் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள உத்தர்பாரா என்னும் இடத்தில் இந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியா வாகன உற்பத்தியில் ஏழாவது பெரிய நாடாக விளங்குகிறது. இந்நிறுவனமானது இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள், ஜீப், மூன்று சக்கர வாகனங்கள் வர்த்தக ரீதியிலான வாகனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. மும்பை, சென்னை, ஜாம்ஷெட்பூர், ஜபல்பூர், கொல்கத்தா, பூனா, புது தில்லி, கான்பூர், பெங்களூரு, சதாரா, லக்னோ மற்றும் மைசூர் நகரங்கள் முக்கிய உற்பத்தி மையங்களாக உள்ளன.
பிரதான
வாகனத் தொழிற்சாலைகளும் அதனை சார்ந்த தொழிற்சாலைகளும் சென்னையை சுற்றியுள்ள
பகுதிகளில் இருப்பதால் சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மஹிந்திரா & மஹிந்திரா, இந்துஸ்தான் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் மக்கள் பயணிக்கும் பெரிய கார்களை தயாரிக்கும் இந்திய நிறுவனங்களாகும். இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களான மெர்சிடிஸ், பென்ஸ், ஃபியட் ஜெனரல் மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்துள்ள பிஎம்டபிள்யூ, ஆடி, வோக்ஸ்வேகன், வால்வோ ஆகியன இந்திய வாகன தயாரிப்பை மேலும் சிறப்புற செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ், அசோக் லைலேண்ட், இஷர் மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஃபோர்டு மோட்டார்ஸ் ஆகிய இந்திய நிறுவனங்கள் வர்த்தக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. MAN, ITEC, மெஸ்சிடர்ஸ்பென்ஸ், ஸ்கேனியா மற்றும் ஹூண்டாய் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் வர்த்தக ரீதியிலான வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்களான ஹீரோ, பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.
கனரக
மின்னியல் தொழிலகங்களானது, மின்சார உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள்,
மின்மாற்றிகள்,
நீராவி
கொதிகலன்கள், நீர்மின் சக்தி தொழிலகங்களுக்கு தேவைப்படும்
விசைகடத்திகள், அனல் மின் உற்பத்தி தொழிலகங்களுக்கு தேவையான
கொதிகலன்கள், ஜெனரேட்டர்கள்,
மின்மாற்றிகள்
ஸ்விட்ச் கியர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் கனரக மின்சாதன
தொழிலகங்களில் மிக முக்கியமானது பாரத மிகு மின் (BHEL)
நிறுவனமாகும்
இந்நிறுவனம் ஹரிதுவார், போபால்,
ஹைதராபாத்,
ஜம்மு,
பெங்களூரு,
ஜான்சி
மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.
இந்நிறுவனமானது
தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப் பெட்டிகள்,
மற்றும்
தொலைபேசி இணைப்பகங்கள், செல்லுலார் தந்தி,
கணினிகள்
மற்றும் அஞ்சல், இரயில்வே பாதுகாப்பு,
வானிலையியல்
போன்ற துறைகளுக்கும் தேவையான பல்வேறு சாதனங்களை உற்பத்திச் செய்கிறது.
இந்தியாவில்
அதிக மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நகரம் பெங்களூருவாகும். எனவே பெங்களூரு “இந்தியாவின்
மின்னியல் தலைநகரம்” என்று
அழைக்கப்படுகிறது. ஹைதராபாத், புதுதில்லி,
மும்பை,
சென்னை,
கொல்கத்தா,
கான்பூர்,
பூனா,
லக்னோ
, ஜெய்ப்பூர் மற்றும் கோயம்புத்தூர் இதர முக்கிய
மின்னியல் உற்பத்தி மையங்களாகும்.
உங்களுக்குத்
தெரியுமா?
இந்தியாவில்
உற்பத்தி உங்களுக்குத் - செய்யும் திட்டம் (Make in india programme) இதன்
முக்கிய நோக்கம் உலக வரைப்படத்தில் இந்தியாவை ஒரு சிறந்த தொழிலக உற்பத்தி மையமாக
காண்பிப்பதாகும்.
இந்தியா
உலகில் உள்ள மிகச்சிறந்த சில மென்பொருள் நிறுவனங்களின் தாயகமாக உள்ளது. இந்திய
மென்பொருள் தொழிலகங்களானது தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகம் சார்ந்த தீர்வுகள்
அளிப்பதில் உலக பிரசித்தி பெற்றவைகளாக உள்ளன. இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஒரு
மிகப்பெரிய வெற்றியை இந்திய மென்பொருள் தொழிலகங்கள் அடைந்துள்ளன.
டாடா
கன்சல்டன்சி சர்வீசஸ் இந்தியாவின் முதல் மென்பொருள் தொழிலகம் ஆகும். இது 1970ஆம்
ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துடன் எல் & டி,
இன்போடெக்,
ஜ-பிளக்ஸ்,
அசெஞர்,
காக்னிசன்ட்,
கேலக்ஸி-இ-
சொல்யுசன்ஸ், இந்தியா பிரைவேட் லிமிடெட்,
ஜ.டி.சி,
இன்போடெக்
போன்றவைகளும் இந்தியாவின் முக்கியமான மென்பொருள் தொழிலகங்களாகும். தற்சமயம்,
இந்தியா
முழுவதும் 500 க்கும் மேற்பட்ட மென்பொருள்
தொழிலகங்கள் உள்ளன.
இந்நிறுவனங்கள்
உலகின் சுமார் 95 நாடுகளுக்கு மென்பொருள்
ஏற்றுமதி சேவையை செய்கிறது.
சென்னை,
கோயம்புத்தூர்,
திருவனந்தபுரம்,
பெங்களூரு,
மைசூரு,
ஹைதராபாத்,
விசாகப்பட்டினம்,
மும்பை,
பூனா,
இந்தூர்,
காந்தி
நகர், ஜெய்ப்பூர்,
நொய்டா,
மொகாலி
மற்றும் ஸ்ரீநகர் இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்களாகும்.
இந்தியத்
தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கிய பிரச்சினைகள் கீழே
பட்டியலிடப்பட்டுள்ளன.
• மின்
பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் வினியோகம்
• தொழிலகங்கள்
நிறுவுவதற்கு ஏற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை
• கடன்
பெருவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள்.
• கடனுக்கான
அதிக வட்டி விகிதம்.
• மலிவான
ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை.
• ஊழியர்களுக்கான
தொழில்நுட்ப மற்றும் தொழில் முறை பயிற்சிகள் இல்லாமை.
• தொழிற்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை.
இந்தியத் தொழிற்சாலைகளின் சவால்கள்