Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு

சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு | 6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality

   Posted On :  03.07.2023 09:20 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்

சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு

சமத்துவமின்மை என்பது ஒருவர் மற்றொருவரை பாகுபாட்டுடன் நடத்துவது ஆகும். சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்து வமின்மை, இன வேறுபாடு மற்றும் பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.

சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு

சமத்துவமின்மை என்பது ஒருவர் மற்றொருவரை பாகுபாட்டுடன் நடத்துவது ஆகும். சாதி ஏற்றத்தாழ்வு, மதச் சமத்து வமின்மை, இன வேறுபாடு மற்றும் பாலின வேறுபாடு போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் பாகுபாட்டை வளர்க்கின்றன.

மக்களுக்கெதிரான எதிர்மறையான செயல்களே பாகுபாடு எனப்படும். சாதி, மதம், பாலினம் சார்ந்து கடைப்பிடிக்கப்படும் பாகுபாடுகளே சமத்துவமின்மை, தீண்டாமை ஆகியனவற்றுக்கான காரணிகள் ஆகும். வெள்ளை நிறநபர்களிடமிருந்து கடுமை வண்ண நிறத்தவர்களை வேறுபாடாக நடத்துதல், நிறம்- சாதி-பாலினம்-மதம் போன்றவை அடிப்படையில் உரிமைகள், வாய்ப்புகள், சமத்துவ நிலை ஆகியன மறுக்கப்படுதல் போன்ற பாகுபாடுகள் நிகழ்கின்றன.

எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 15(1) அறிவுறுத்துகிறது.


உங்களுக்குக் தெரியுமா?

இனநிறவெறிக்கு முடிவு


தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரன் நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் 1990 ஆம் ஆண்டு விடுதலையானார். தென்னாப்பிரிக்காவிலிருந்த இவர் இனநிறவெறிக்கு முடிவு கட்டினார். தென்னாப்பிரிக்காவில் உலகளவில் அமைதி நிலவவும், மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.


1. சாதி பாகுபாடு

இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான மிக முக்கிய காரணம் சாதி முறை ஆகும். வேத கால ஆரிய சமுதாயத்தில் நிலவிய வர்ண அமைப்பிலிருந்து சாதி படிநிலை முறை உருவானது. தொடக்கத்தில் வர்ண அமைப்பும் தொழில் அடிப்படையில் நெகிழ்வான சமூகப் பிரிவினைகளையே கொண்டிருந்தது. பிற்கால வேத சமுதாயத்தில் இறுக்கமான, பாகுபாடுகள் நிறைந்த, பிறப்பு அடிப்படையில் படிநிலைப்படுத்தப்பட்ட சாதிப் பிரிவுகளாக வர்ண அமைப்பு விரிவடைந்தது.

இந்தியாவில் சாதி ஒடுக்குமுறைக் கெதிராக பலரும் போராடி வருகின்றனர். இவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆவார். தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர் சிறுவயதிலேயே சாதிப்பாகுபாட்டின் காரணமாக பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார். இந்தியாவில் அனைத்து குடிமக்கள் மத்தியிலும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் சாதி அழிப்புக்காக தீவிரமாகப் போராடினார்.

 

2. பாலினப் பாகுபாடு

பாலினப்பாகுபாடு என்பது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் உடல்நலம், கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் சமத்துவமின்மை போன்றவற்றைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு வெண் பள்ளிப்படிப்பை முடிச்சபின் கல்லூரிக்கு செல்ல அனுமதி இல்லை. இதே போன்று பெரும்பான்மையான பெண்கள் அவர்கள் விரும்பும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படாமல்

 

உங்களுக்குக் தெரியுமா?

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்


இவர் பாபா சாஹேப் என பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

இவர் இந்திய சட்ட நிபுணராகவும், நிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.

இவர் 1915 இல் எம்.ஏ. பட்டத்தை பெற்றார். பின்னர் 1927 இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி பட்டத்தை பெற்றார். அதற்கு முன்னர் இலண்டன் பொருளாதாரப்பள்ளியில் D.Sc பட்டத்தையும் பெற்றிருந்தார்.

இவர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவு குழுவின் தலைவராக இருந்தார். எனவே, இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.

இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார்.

இவரது மறைவுக்குப் பின்னர், 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

திருமணத்தில் தள்ளப்படுகின்றனர். இன்னும் ஒரு சில குடும்பங்களில் பெண்பிள்ளைகள் நவீன ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் அக்குடும்பத்தின் ஆண்பிள்ளைகள் அவ்வகையான ஆடைகளை அணிந்திட அனுமதிக்கப்படுகின்றனர். இதுவே பாலினப் பாகுபாடு ஆகும்.

 

3. மத பாகுபாடு

மதம் சார்ந்தபாகுபாடு என்பது நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு தனிநபரின் மீதோ அல்லது குழுவினர் மீதோ சமத்துவமின்றி நடத்துவது ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெவ்வேறு மதங்களின் மக்களுக்கிடையே பிரச்சினைகள் நிலவுகின்றன. நமது அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமத்துவம் வழங்குகிறது; பிறப்பிடம், சாதி, மதம், மொழி போன்ற எதன் காரணமாகவும் சமத்துவம் மறுக்கப்படக் கூடாது. இருப்பினும், வழிபாட்டு இடங்கள் போன்றவற்றில் இன்னமும் சாதி, மதம், பாலினம், மொழி அடிப்படையில் பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய பாகுபாடுகள், சமத்துவமின்மை போன்றவற்றுக்கு எதிராக நமது மாபெரும் சிந்தனையாளர்கள் கடுமையாகப் போராடியுள்ளனர்.

 

4. சமூக-பொருளாதார சமத்துவமின்மை

சமூக-பொருளாதார தளத்தில் வளர்ச்சியின் பயன்கள் சமமாக பரவுவதில்லை. குறைவான தொழிற்வளர்ச்சி,குறைவான வேளாண்உற்பத்தி, குறைவான மனித மேம்பாடு ஆகியவை குறைந்த வருவாய் மாவட்டங்களுடன் தொடர்புடையவை. அதே போல் கல்வியறிவு குறைந்த விகிதம் உள்ள மாவட்டங்கள் குறைவான பாலின விகிதத்துடன் காணப்படுகின்றன.


 

5. சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டினை நீக்குவதற்கான தீர்வுகள்

இந்திய சமுதாயத்தில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டினை அகற்றுவதற்கான தீர்வுகளாக கீழ்கண்டவற்றை மேற்கொள்ளலாம்.

1. அனைவருக்கும் தரமான உடல்நலம் மற்றும் கல்வியினை கிடைக்கச் செய்தல்.

2. தற்போதய பாலின பாரபட்சத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்.

3. பாலின தாழ்வுகளை அகற்றுவதற்காக பொதுவாழ்வு மற்றும் நிறுவனங்களில் வண்களின் திறன்களை வெளிப்படுத்துதல்.

4. மற்ற மதங்களை பற்றி தெரிந்து கொள்ளும் வெளிப்படையான மனநிலை வளர்த்தல்.

5. வகுப்பறையில் குழுவாக கூப்பிடுவதை ஊக்குவித்தல் மூலம் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றின் எந்தவித பாரபட்சமின்றி மாணவர்களை ஒன்றாக இணைக்கச் செய்தல்

6. பல தரப்பட்ட மக்களிடமும் இணங்கி இருந்தல்

7. சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துதல்.


6. இந்திய அரசியலமைப்பு மற்றும் சமத்துவம்

ஒரு அரசியலமைப்பு என்பது நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிகள் மற்றும் விதிமுறைகளின் தொகுப்பாகும். இந்திய அரசியலமைப்பின் 14-வது பிரிவு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்' என்கிறது. மேலும் மக்களுக்குள் பகுச்சறிவுக்கு ஒவ்வாத பாகுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதைத் தடுக்கிறது..

நாட்டின் நிலப்பரப்பு பன்முகத்தன்மை கொண்டது என்பதால் அனைவருக்கும் சமத்தவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். என்றும் நமது அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. சமுதாயத்தில் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான இரண்டு முக்கியமான காரணிகள் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் சுதந்திரத்தை உறுதிபடுத்துதல் ஆகும். பல்வேறு வகையான சுதந்திரம் என்பது அவரவர் மதத்தை பின்பற்றவும் மொழியைப் பேக்ஷவும், விழாக்களைக் கொண்டாடவும், கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதும் ஆகும்.

அரசியலமைப்பு என்பது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் சட்டவடிவமைப்பாகும். அதன்படி ஒரு நாடு நிர்வகிக்கப்படும். சமத்துவம் என்பது தீண்டாமையை ஒரு ஒரு குற்றமாகக் காண்பதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 17-ன்படி ஒழிக்கப்பட்டது. தீண்டாமையைப் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தீண்டாமை எந்த வகையிலும் பின்பற்றுவது தடை

இன்றும் கூட நாடு முழுவதும் பல்வேறு பாகுபாடு காணப்படுகிறது. வகையான பெண்கள், விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக வகுப்பினர் உள்ளிட்டோர் இன்னும் இந்தியாவில் சமத்துவத்திற்காகப் போராடி வருகிறார்கள்.


Tags : Achieving Equality | Term 1 Unit 2 | Civics | 6th Social Science சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 1 Unit 2 : Achieving Equality : Inequality and Discrimination Achieving Equality | Term 1 Unit 2 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல் : சமத்துவமின்மை மற்றும் பாகுபாடு - சமத்துவம் பெறுதல் | பருவம் 1 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 2 : சமத்துவம் பெறுதல்