அளவீடுகள் | பருவம்-3 அலகு 3 | 2வது கணக்கு - கொள்ளளவினை அளத்தல் | 2nd Maths : Term 3 Unit 3 : Measurement
கொள்ளளவினை அளத்தல்
அதிக அளவு தண்ணீர் கொண்ட பாத்திரத்தை (✔) குறியிடுக.
தண்ணீர்! தண்ணீர்!
கமலி மற்றும் கண்ணன் இருவரும் குழாயிலிருந்து 2 குடம் தண்ணீர் பிடித்துவரச் செல்கின்றனர். படத்தை உற்றுநோக்கி, யார் அதிகத் தண்ணீர் பிடிப்பர் எனக் கூறுக.
விடை: கமலியின் 2 குடங்கள் அதிக தண்ணீர் எடுக்கின்றன.
கொள்ளளவு என்பது ஒரு பாத்திரமானது ஒரு பொருளைக் கொள்ளும் அளவாகும்.
இங்கு பெரிய குவளை, கூஜா, பாத்திரம் மற்றும் பானை ஆகியவை தண்ணீர் வைக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு அளவுகளைக் கொண்டதால் அவற்றில் வைக்கப்படும் தண்ணீரின் அளவும் மாறுபடுகிறது.
கொள்ளளவினை அளக்க ஒரு பொதுவான அளக்கும் பாத்திரம் தேவை. இங்கு நாம் அதைக் குவளையை அளக்கும் கருவியாகப் பயன்படுத்தலாம்.
இந்த பெரிய குவளை 2 குவளைகள் தண்ணீர் பிடிக்கும்.
இந்த ஜாடியில் 5 குவளைகள் தண்ணீர் நிரப்பலாம்.
இந்தப் பாத்திரம் 10 குவளைகள் தண்ணீரைக் கொள்ளும்.
இந்தப் பானை 20 குவளைகள் தண்ணீரைக் கொள்ளும்.
உங்கள் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் அளவிடும் கருவி பற்றி கேட்டறிந்து அட்டவணையை நிரப்புக.
மாணவர்கள் தலைமுறைக்குத் தலைமுறை குடும்பத்திற்குக் குடும்பம் அளவிடும் கருவிகள் எவ்வாறு மாறுபடுகிறது என கலந்துரையாடச் செய்யவும்.
கொடுக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் கொள்ளளவினை அளவிடும் பாத்திரத்தைக் கொண்டு ஊகிக்க. உமது ஊகம் சரியானவையா என் அளந்து பார்த்துக் கண்டறிக.
1 ஜாடி 3 குவளைகள் தண்ணீரை கொள்ளும் எனில், பின்வருவனவற்றின் கொள்ளளவினைக் காண்க.
ஆல் 4 ஜாடிகளில் தண்ணீர் நிரப்ப முடியும்.
நாம் தினசரிப் பயன்பாட்டிற்கு வெவ்வேறு அளவுடைய, வடிவமுடைய கொள்கலன்களைப் பயன்படுத்துவது ஏன் எனச் சிந்தித்தீர்களா? இப்போது சிந்தியுங்கள்.
கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்குத் தேவையான, சரியான தண்ணீர் கொள்கலன் எது என (✔) குறியிடுக.