காவற்பெண்டு | பருவம் 1 இயல் 3 | 7 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: புலி தங்கிய குகை: கேள்விகள் மற்றும் பதில்கள் | 7th Tamil : Term 1 Chapter 3 : Nadu Athai Nadu
(இயல் 3 : கவிதைப் பேழை : புலி தங்கிய குகை)
பாடநூல் மதிப்பீட்டு வினா
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. 'யாண்டு' என்ற சொல்லின் பொருள் ----------
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது
[விடை : ஆ. எங்கு]
2. 'யாண்டுளனோ?' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -----
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ ?
இ) யா + உளனோ ?
ஈ) யாண்டு + உனோ?
[விடை : அ. யாண்டு + உளனோ?]
3. ‘கல் + அளை' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) கல்லளை
ஆ) கல்அளை
இ) கலலளை
ஈ) கல்லுளை
[விடை : அ. கல்லளை]
குறு வினா
தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
தம் வயிற்றுக்குத் தாய் ‘புலி தங்கிய குகை'யை உவமையாகக் கூறுகிறார்.
சிறு வினா
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
❖ சிறிய என் வீட்டிலுள்ள தூணைப் பற்றிக் கொண்டு, எதுவும் தெரியாதவள் போல நீ 'உன் மகன் எங்கே?' என்று என்னைக் கேட்கின்றாய்.
❖ அவன் எங்கு இருக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ‘புலி தங்கிய குகை' போன்று அவனைப் பெற்ற வயிறு என்னிடம் உள்ளது.
❖ அவன் இங்கு இல்லை ஆனால் போர்க்களத்தில் இருக்கலாம். போய்க் காண்பாயாக! - என்று தன் மகன் குறித்துத் தாய் கூறினாள்.
சிந்தனை வினா
தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச்சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
❖ புலி மிகுந்த வலிமையானது, சுறுசுறுப்பானது, தன்னம்பிக்கை மிக்கது, வீரம் மிகுந்தது.
❖ அதைப் போல வீரம் மிக்கவன் மகன்.
❖ இருள் நிறைந்த குகையில் புலி இருப்பது போல், இருள் நிறைந்த வீரம் மிக்க கருவறையில் தன் மகன் உறங்கி வளர்ந்தான்.
❖ புலி குகையை விட்டு வேட்டைக்குச் செல்வது போல பகைவர்களை
வேட்டையாடுவதற்கு மகன் போர்க்களம் சென்று இருக்கின்றான்.
❖ அதனால் தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறார்.
கற்பவை கற்றபின்
1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
1. அஞ்சி அத்தை மகள் நாகையார்
2. அஞ்சில் அஞ்சியார்
3. அள்ளூர் நன்முல்லையார்
4. ஆதி மந்தியார்
5. ஊன் பித்தை
6. ஒக்கூர் மாசாத்தியார்
7. கச்சிப்பேட்டு நன்னாகையார்
8. கழார்கீரன் எயிற்றியார்
9. காக்கைப் பாடினியார்
10. காமக்கண்ணிப் பசலையார்
11. காவற்பெண்டு
12. ஞமிழிஞாலளார்
13. குளம்பாதாயனார்
14. குறமகள் இளவெயினி
15. குறமகள் குறியெயினி
16. குன்றியனார்
17. தாயங்கண்ணியார்
18. நக்கண்ணியார்
19. நல்வெல்லியார்
20. நன்னாகையார்
21. நெடும்பல்லியத்தை
22. பாரிமகளிர்
23. பூங்கண் உத்திரையார்
24. பெருங்கோப்பெண்டு
25. நக்கண்ணையார்
26. பேய்மகள் இளவெயினி
27. பொன்மணியார்
28. பொன்முடியார்
29. வெண்ணிக்குயத்தியார்
30. வெள்ளிவீதியார்
2. பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றைப் படம் வரைந்து அவற்றின் பெயர்களை எழுதுக.
காவற்பெண்டு :
• சங்ககாலப் பெண்பாற் புலவர்.
• கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய்.
• படைப்பு : புறநானூற்றில் ஒரு பாடல்.
சொல்லும் பொருளும்
சிற்றில் - சிறு வீடு
கல் அளை - கற்குகை
யாண்டு - எங்கே
ஈன்ற வயிறு - பெற்றெடுத்த வயிறு
குடில் - வீடு