மாவட்ட நிருவாகம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 3rd Social Science : Term 2 Unit 3 : District Administration
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
1. மாவட்ட நிருவாகத்தின் தலைவர் __________ ஆவார்.
அ) மாவட்ட ஆட்சியர்
ஆ) நீதிபதி
இ) காவல்துறைக் கண்காணிப்பாளர்
விடை : அ) மாவட்ட ஆட்சியர்
2. அரசாங்க மருத்துவமனைகளுக்கு __________ பொறுப்பாளர் ஆவார்.
அ) காவல்காரர்கள்
ஆ) மருத்துவ அலுவலர்கள்
இ) ஓட்டுநர்கள்
விடை : ஆ) மருத்துவ அலுவலர்கள்
3. காவல்துறை __________ பாதுகாக்கிறது.
அ) உடல்நலம்
ஆ) வனம்
இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
விடை : இ) சட்டம் மற்றும் ஒழுங்கு
4. __________ மாவட்டத்தின் கல்வித்துறையின் செயல்பாட்டை கண்காணிப்பார்.
அ) வன அலுவலர்
ஆ) முதன்மைக் கல்வி அலுவலர்
இ) மருத்துவ அலுவலர்
விடை : ஆ) முதன்மைக் கல்வி அலுவலர்
5. மாவட்டத்தில் சுகாதாரத்தைப் பேணுவதற்கு __________ அறிவுரை வழங்குவார்
அ) மருத்துவ அலுவலர்
ஆ) வன அலுவலர்
இ) வருவாய்த் துறை அலுவலர்
விடை : அ) மருத்துவ அலுவலர்
II. சரியா / தவறா எழுதுக.
1. மாவட்ட ஆட்சியர் UPSC நடத்தும் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்.
[ விடை : சரி ]
2. ஆசிரியர், நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைகிறதா என்பதனைக் கண்காணிப்பார்.
[ விடை: தவறு ]
3. முதன்மைக் கல்வி அலுவலர் கல்வித்துறையைக் கண்காணிப்பார்.
[ விடை : சரி ]
4. காவல் அலுவலர்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்குப் பொறுப்பாளர்கள் ஆவர்.
[ விடை: தவறு ]
5. வனத்துறை அலுவலர் வனத்துறைக்குப் பொறுப்பாளர் ஆவார்.
[ விடை : சரி ]
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
1. மாவட்ட நிருவாகத்தின் தலைமை யார்?
மாவட்ட ஆட்சியர்.
2. மாவட்ட ஆட்சியர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
❖ இந்திய ஆட்சிப்பணி (I.A.S.) அதிகாரிகள் U.P.S.C (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
❖ இந்த இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
3. மாவட்டத்திலுள்ள ஏதேனும் மூன்று துறைகளின் பெயர்களை எழுதுக.
❖ காவல்துறை
❖ மருத்துவத்துறை
❖ வனத்துறை மற்றும்
❖ கல்வித்துறை
4. மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கை யார் பாதுகாக்கிறார்கள்?
காவல்துறை அதிகாரிகள்.
5. மருத்துவ அலுவலரைப் பற்றி எழுதுக.
❖ மருத்துவ அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பொறுப்பாளர்கள் ஆவர்.
❖ அவர்கள் சுகாதாரத்தைப் பற்றியும், உடல்நலத்தைப் பற்றியும் அறிவுரை வழங்குவார்கள்.
செயல் திட்டம்.
மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு துறைகளின் பெயர்களை எழுதி வருக.
❖ சுகாதாரத்துறை
❖ பொதுப்பணித்துறை
❖ காட்டு இலாகாத்துறை
❖ கல்வித்துறை
❖ அஞ்சல்துறை
❖ போக்குவரத்துத்துறை
செயல்பாடு
I. விடுபட்ட இடங்களைக் குறிப்புகளைக் கொண்டு நிரப்புக.
❖ மாவட்டத்தின் நிருவாகத் தலைமை - மாவட்ட ஆட்சியர்
❖ சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பவர் - காவலர்
❖ உடல்நலம் குறித்த அறிவுரை வழங்குபவர் - மருத்துவர்
❖ அறநெறிகளைப் போதிப்பவர் - ஆசிரியர்
II. சரியா / தவறா எழுதுக.
1. மாவட்ட ஆட்சியர் இயற்கைப் பேரிடரின்போது தக்க நடவடிக்கைகள் எடுப்பார். [ சரி ]
2. மாவட்ட ஆட்சியர் உள்ளாட்சி அமைப்புகளை மேற்பார்வையிடமாட்டார். [ தவறு ]
3. காவல்துறைக் கண்காணிப்பாளர் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யமாட்டார். [ தவறு ]
4. மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளின் தலைமைகளோடு இணைந்து மாவட்ட நிருவாகம் அமைதியாக நடைபெற பணியாற்றுவார். [ சரி ]
சிந்தனை செய்
1. காவலர்களின் சில கடமைகளைக் கூறுக.
❖ திருடர்களிடமிருந்து மக்களைக் காத்தல்.
❖ சாலை விபத்துகளிலிருந்து மக்களைப் பாதுகாத்தல்.
❖ வாகனங்களின் போக்குவரத்தை முறைப்படுத்துதல்.
❖ சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல்.
2. மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்டத்தின் கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறது.
❖ பள்ளிகளை ஆய்வு செய்தல்.
❖ சிறந்த ஆசிரியர்களைக் கௌரவித்தல்.
❖ தனியார் நிர்வாகப் பள்ளிகளுக்கு ஊதியம் வழங்கப் பரிந்துரைத்தல்.
❖ கல்வியின் தரத்தை ஆய்வு செய்தல்.
❖ மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்குதல்.